court

img

தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை - உயர்நீதிமன்ற கருத்து

வாகன ஒட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதையே  சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக கொண்டுள்ளது; தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகாராஜன் என்பவர், மதுரை நெடுஞ்சாலையில் கயத்தாறு, நாங்குநேரி பகுதிகளில் சுங்கச்சாவடிகள் உள்ளன. கயத்தாறு எல்லைக்குட்பட்ட பகுதியிலும், நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளிலும் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சுங்கச்சவடிகளில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. சாலைகளை சரி செய்யும் வரை சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வாகன ஒட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதையே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக கொண்டுள்ளது; தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் விரிவாக பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.