court

img

இரு விரல் பரிசோதனைக்கு தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வன்முறைக்குள்ளானவர்களுக்கு இரு விரல் பரிசோதனை செய்யும் முறையைத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோர் வழங்கினர். அப்போது, பாலியல் வன்முறைக்குள்ளானவர்களுக்கு இரு விரல் பரிசோதனை செய்யும் முறையைத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டனர்.

இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது. இதில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அத்தகைய சோதனையை நடத்துவது மீண்டும் அந்த பெண்ணை துன்புறுத்துவதாகும் என்று தெரிவித்துள்ளனர். 

மேலும், இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என ஒன்றிய மற்றும் மாநில சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.