court

img

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்று குறிப்பிட்ட கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தா, வழக்கு விசாரணை ஒன்றில் பெங்களூருவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான கோரிபாளையாவை, பாகிஸ்தான் என்று சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல், மற்றொரு விசாரணையில் பெண் வழக்கறிஞரிடம் மனுதாரரின் உள்ளாடை நிறம் கூட உங்களுக்கு தெரியும் என அநாகரிகமான முறையில் பேசியிருந்தார். இந்த இரண்டு வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்விவகாரகம் குறித்து விசாரணைக்கு எடுத்துகொண்டது. அப்போது, இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என்று குறிப்பிட்ட கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.