court

img

கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு சத்தான உணவுகள் வழங்க நீதிமன்றம் உத்தரவு....

மதுரை:
கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர் கள், மருத்துவப் பணியாளர்களுக்கு  சத்தான உணவுகள் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப் பித்தது.

மதுரை கீழப்பனங்காடியைச் சேர்ந்தபாலாஜி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “2020ஆம் ஆண்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்திலும் மருத்துவ ஊழியர்கள் சுயநலம் பாராமல் சேவையாற்றி வந்தனர். பின்னர் பொருளாதார சிக்கல் காரணமாக ஊரடங்கை தளர்த்தும் நிர்ப்பந்தம் ஏற்பட் டது.இந்நிலையில் தற்போது புதிதாக உருமாறிய கொரோனா தொற்று பரவிவருகிறது. தமிழகத்திலும் அதன் பாதிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி முதல் கொரோனாவார்டுகளில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள், பணி முடிந்து அவர்களது வீட்டிற்கு செல்லவும், அங்கிருந்து மீண்டும் மருத்துவமனைக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒரு தொற்று நோய் என்பது அனைவரும் அறிந்த நிலையில், அவர்களுக் கான தனிமைப்படுத்தும் அறைகள், சத்தான உணவு வகைகள் போன்றவற்றை வழங்குவது அரசின் கடமை. ஆனால் அதற்கு போதிய நிதி இல்லை எனக் கூறுவது பெரும் அவமானமாகவே பார்க்கப்பட வேண்டும்.

அவ்வாறு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வீடுகளுக்குச்செல்வோரின் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளும், வயதானவர்களும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இதனால் நோய் தொற்று பரவலும் அதிகரிக்கும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர் கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அறைகள், சத்தான உணவுகள் மற்றும் அவர்களின் பாதுகாப்புகளுக்கான வசதிகளை செய்துதர உரியநடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், இளங்கோவன் அமர்வு முன்பாக புதனன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், கொரோனா வார்டுகளில் பணியாற்றுவோருக்கான வசதிகளை திரும்பப் பெற்றிருந்தால் அந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவினால் என்ன செய்வீர்கள்? என கேள்விஎழுப்பினர். தொடர்ந்து, கொரோனா வார்டுகளில் பணியாற்றுவோருக்கு வழங்கப்பட்ட வசதிகள் திரும்பப் பெறப்பட்டுஇருந்தால் அவற்றை தொடர்ந்து இரண்டு வார காலத்திற்கு வழங்க இடைக்கால உத்தரவிட்டும், இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

;