court

img

மீன்பிடி தடை காலத்தை மாற்றக்கோரிய வழக்கு... அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்....

சென்னை: 
கடல் சீற்றம் மிகுந்த அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்றி அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதி
மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை - திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆழ்கடல் மீன்பிடிப்பு விசைப்படகு உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ஆர்.வரதன் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந் துள்ளார்.அந்த மனுவில்,  உலகில் அதிக புயல் பாதிப்புக்குள்ளாகும் 6 முக்கிய இடங்களில் வங்காள விரிகுடா இருப்பதாகவும், அதை ஒட்டிய இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில், 2008ஆம் ஆண்டு நிஷா புயல் முதல் 2019ஆம் ஆண்டு புல்புல் புயல் வரை ஒவ்வொரு ஆண்டும் வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் வீசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடலின் தொடர் சீற்றம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.2001ஆம் ஆண்டு  முதல் ஏப்ரல் 15 முதல் மே 31 வரை 45 நாட்கள் என தடைக்காலம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், பின்னர் 2018ஆம் ஆண்டு முதல் ஜூன் 15 வரை என 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டதாகவும் மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.இயற்கையின் கோரப்பிடியில் மூன்று மாதம் கடலுக்குள் செல்ல முடியாத நிலையில், மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரையிலான 61 நாட்களும் கடலுக்கு செல்ல முடியவில்லை என மனுவில் குறிப்பிட்டுள் ளார்.

மீன்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடை காலத்தை நிர்ணயித்துள்ள அந்த 61 நாட்களில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதற்கான விஞ்ஞானப்பூர்வமான காரணங்கள் ஏதுமில்லை என மத்திய அரசிடம் வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.அதனடிப்படையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை என்ற மீன்பிடி தடைக்காலம் தொடர்பான உத்தரவை ரத்து செய்துவிட்டு,  வங்கக்கடல் சீற்றம் மிகுந்து காணப்படும் அக்டோபர் 15முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடித் தடைகாலமாக அறிவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகளின் மீன்வளத்துறை, இந்திய மீன்வள ஆய்வுத்துறை, மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், தமிழ்நாடு மீனவர் நல வாரியம், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

;