தமிழ்நாட்டை உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தை மையப்படுத்தி திரைப்படம் உருவாக உள்ளது.
இந்த படத்தை திரைக்கலைஞரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவருமான ரோகிணி இயக்கவிருக்கிறார்.இதில் ஜெய்பீம் புகழ் லிஜோமோல் ஜோஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதுகிறார். படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகாலம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரம்பத்திலிருந்து தற்போது வரை உறுதுணையாக இருந்தது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தான். ஏற்கனவே, 1996-ஆண்டு கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த கம்மாபுரம் பகுதியை சேர்ந்த ராஜாகண்ணு என்பவரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று காவலர்கள் சித்ரவதை செய்து அடித்து கொலை செய்தனர். காவல்நிலைய அத்துமீறலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்திலும், நீதிமன்றத்திலும் தொடர் போராட்டங்களை நடத்தி இவ்வழக்கில் வெற்றி பெற்றது. இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் த.செ.ஞானவேல் ராஜ் ஜெய்பீம் என்ற திரைப்படத்தை இயக்கினார்.இப்படம் இந்திய திரையுலகில் மிகப்பெரிய வெற்றி படமானது.
அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு போராட்ட வரலாறான வாச்சாத்தி வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தை திரைக்கலைஞர் ரோகிணி இயக்குகிறார்.