தமிழகத்தில் கல்வி பயிலும் சுமார் நாற்பது லட்சம் மாணவர்களின் கல்வியில் மண் அள்ளிப்போடுகிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு. மாநிலத்திற்கு அளிக்க வேண்டிய 2152 கோடியை உடனடியாக தாருங்கள் என கோரிக்கை விடுத்தால், “அது 2152 கோடி அல்ல, 5000 கோடி அளவிற்கு இருக் கும். ஆனாலும் ஒரு ரூபாய் கூட தருவதாக உத்தேச மில்லை” என வஞ்சனை வார்த்தைகளை வீசுகிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். கல்விக்கு காசு இல்லை; ஆனால் காசிக்கு காசு தரு கிறோம் என்று சொல்வதோடு கேடிஎஸ் 3.0 எனும் காசித் தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு ஆயிரம் பேரை தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்கிறார் அமைச் சர். ஐஐடி எனும் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் காம கோடி, காசிப் பயணத்திற்கு தலைமை ஏற்கிறார். கல்வி விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக இந்துத் துவ சக்திகளின் இத்தகைய மோசமான அணுகுமுறை யைப் பார்க்கும் போது, தேசிய கல்விக் கொள்கைக் கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட போது, அன்றே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி விடுத்த எச்சரிக்கை எவ்வளவு சரியானது என புரிகிறது. புதிய கல்விக் கொள்கை வரைவு மற்றும் உள்ளீடு கள் குறித்த விவாதம் துவங்கப்பட்டபோது, நாடாளு மன்ற மாநிலங்களவையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் ஆற்றிய உரை மிக ஆழமானது. அவரது உரை புதிய கல்விக் கொள்கையின் அபத்தங்க ளையும் ஆபத்துகளையும் சுட்டிக்காட்டியதோடு அதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தையும் உணர்த்துவதாக அமைந்திருந்தது.
யெச்சூரி சொன்னது என்ன?
\ அவரது உரையில் இவ்வாறு கூறினார்: புதிய கல்விக் கொள்கை மற்றும் வரைவு உள்ளீடு கள் நாட்டின் கல்வித் தேவைகளைப் பிரதிபலிக்க வில்லை. மாறாக மத்தியப் பிரதேசம் அமர்கந்தக் நகரில் மூன்று நாட்களாக நடைபெற்ற “புதிய கல்விக் கொள்கை” மற்றும் “நமோடி கட்டமைப்பு” (NAMODI FRAME WORK) கூட்ட விவாதங்க ளின் தொடர்ச்சியாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பி லிருந்து கிடைக்கப்பெற்ற ஆலோசனைகளையும் உள்ளடக்கியதாக கல்விக் கொள்கையின் முன்மொ ழிவுகள் உள்ளன. புதிய கல்விக் கொள்கையின் வரைவு பிரதானமாக மூன்று அம்சங்களை உள்ள டக்கியதாக இருக்கிறது. அதாவது, இது 3 ‘C’ க்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மையப் படுத்தல் (Centralisation) வணிகமயமாக்கல் (Commercialisation), மற்றும் வகுப்புவாதமய மாக்கல் (Communalisation) ஆகியவையே அவை. எனவே இந்த வரைவு கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கல்வியில் மதவெறி திணிப்பு
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் கீழ் வழிநடத்தப் படும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல்களில் வரலாறு மதப்புராணங்களாக மாற்றப்படுவதும், இந்திய தத்துவம் இந்துத்துவ மதவெறி சார்ந்த இறையியலாக மாற்றப்படுவதும் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. கல்வி என்பது ஒரு தேசத்தின் மற்றும் அதன் மக்களின் தன்மையை வரையறுக்கிறது. அத்தகைய கல்வியை நீங்கள் உலகளாவியதாக்காவிட்டால், உங்களால் நாட்டின் திறனை அறுவடை செய்ய முடி யாது. அனைத்து வளர்ந்த நாடுகளும் தங்கள் கல்வியை உலகளாவியதாக்கியுள்ளன. புதிய நிறு வனங்களை அமைப்பதற்குப் பதிலாக, தற்போதைய நிறுவனங்களின் திறனை விரிவுபடுத்துவதே மிக முக்கியமான பணியாக அமைந்திட வேண்டும். ஆனால், தற்போது நாட்டில் உள்ள ஒவ்வொரு பதவி யும் (நிறுவனங்களின் தலைவர்) காவிமயமாக்கப் பட்டிருக்கிறது.
சுதந்திரத்தின் கனவு என்ன?
சுதந்திரத்திற்குப் பிறகு புதிய தலைமுறைகளை வரையறுக்கும் புதிய மதிப்புகள் தோன்றின என்பதையும் இந்திய வரலாற்றில் முதல்முறையாக அனைவரும் சமமாகவும் சுதந்திரமான கனவு களோடும் தங்கள் பயணத்தை துவக்க விரும்பி னார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அந்தக் கனவு இன்று அச்சுறுத்த லுக்கு உள்ளாகியுள்ளது. ஏன் நாம் சிறிய விஷயங்க ளில் போராடுகிறோம், பெரிய மற்றும் பழைய நாக ரிக பிரச்சனைகளை கூட தீர்க்க முடியாதவர்களாக ஏன் மாறிப் போய்விட்டோம் என்பதையும் கூட யோசிக்க வேண்டும். பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகள், பொறியாளர்கள் ஆகியோரது நிலை கூட மிக மோசமான மதிப்பீடாக மாற்றப்பட்டுள்ளதோடு, கடை நிலை வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் உ.பி.யில் 400 உதவியாளர் (பியூன்) பதவிகளுக்கு 28 லட்சம் பேர் விண்ணப்பித்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தின் திறவுகோல் கல்வி
கல்வி என்பது தேசத்தின் எதிர்காலத்தின் திறவு கோலாக அமைந்திட வேண்டும், கல்வி என்பது நமது பன்முகத்தன்மையும், பிராந்திய விருப்பங்க ளும் மதிக்கப்படுவதாக அமைய வேண்டும். ஆனால் ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவில் அத்தகைய அம்சத்தை காண முடிய வில்லை. மேலும் கல்வி உரிமைச் சட்டம் (Right to Education act) மற்றும் புதிய கல்விக் கொள்கை குறித்து தலைநகரில் நாடாளுமன்ற உறுப்பினர்க ளின் கூட்டத்தை கூட்டிய கல்வி உரிமைச் சட்ட மன்றம், வரைவு உள்ளீடுகளில் தனது அதிருப்தி யை வெளிப்படுத்தியது. இதுவரை இந்த அரசாங்கத் திடமிருந்து பிரதமர் உட்பட எந்த மட்டத்திலும் கல்வி உரிமைச் சட்டத்தை உயர்த்திப் பிடிப்பதற்கான எந்த உறுதிப்பாடும் மீண்டும் வலியுறுத்தப்படவில்லை, இது கவலை அளிக்கிறது. நீண்ட போராட்டங்களின் விளைவாக பெறப்பட்ட பன்முக விழுமியங்களையும் ரத்து செய்யும் வகையில் கல்வி என்பது மாற்றப் பட்டு வருகிறது. இந்த அவையில் முன்வைக்கப் பட்ட வரைவு மசோதாவின் மீதான விவாதங்களில் பங்கேற்ற எனது நண்பர்கள் முன்வைத்த காத்திரமான கருத்துக்களையும், ஆட்சேபணைகளையும் நான் ஆமோதித்து வழிமொழிகிறேன்.” - மேற்கண்டவாறு தோழர் யெச்சூரி சுட்டிக்காட்டிய மையப்படுத்துதல் – வணிகமயமாக்கல் – வகுப்புவாத மயமாக்கல் எனும் மூன்று ‘C’ க்களை (CENTRA LISATION – COMMERCIALISATION – COMMUN ALISATION) உள்ளடக்கிய இவர்களின் கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்துவதோடு, மற்றொரு ‘C’ ஐயும் கூட அம்பலப்படுத்த வேண்டும்; அதாவது மாநில உரிமைகளை பறிக்கும் குற்றவாளிகள் (Culprits) இவர்கள் என்பதையும் உரத்துச் சொல்லவேண்டும். கட்டுரையாளர்: மாநிலக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)