articles

img

வள்ளலார் பக்தர் - மார்க்சிஸ்ட் கட்சி தலைவரானார் - கோ.மாதவன்

வள்ளலார் பக்தர் - மார்க்சிஸ்ட் கட்சி தலைவரானார் - கோ.மாதவன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தின் முதல் செயலாளராக பொறுப்பேற்றவர் தோழர் எஸ்.நடராஜன். வள்ளலாரின் வீர பக்தராக கட்சிக்கு அறிமுகமான இவர், கட்சிப் பொறுப்புக்கு வரும் வரை மேலாடை அணியாத ஜீவகாருண்ய சீலராக திகழ்ந்தார். கைத்தறி நெசவு தொழிலாளர் குடும்பத் தில் பிறந்த இவர், எளிய மக்கள் மீது வள்ளலாரைப் போலவே ஆழ்ந்த பற்று கொண்டவர். வள்ளலாரின் சாதி எதிர்ப்பு கொள்கைகளை அமலாக்கும் இயக்கமாக செங்கொடி இயக்கத்தைக் கண்ட நடராஜன், அதில் இணைந்த நாள் முதல் 16.09.1988 அன்று மாயவரத்தில் இறக்கும் வரை செங்கொடியை உயர்த்திப் பிடித்து நின்றார். சிறைத்தாக்குதலில் தப்பிய தலைவர் 1953 நவம்பரில் சிதம்பரத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்னார்க்காடு மாவட்ட முதல் மாநாட்டில் மாவட்டக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

கட்சி தடை செய்யப்பட்ட போது கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். அச்சிறையில் காவல் துறை நடத்திய நரவேட்டையில் 21 கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்ட போது, அவர் மீது வைத்த குறி தவறியதால் உயிர் தப்பினார். சிறையில் இருந்து விடுதலையான பின் விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்று, விருதாச்சலம், பெண்ணாடம், திருவெண்ணெய் நல்லூர் பகுதிகளில் விவசாய சங்கத்தை விரிவு படுத்தினார். ஜமீன் ஒழிப்பு இயக்கத்திலும் தீவிரமாக பங்கேற்றார். பெண்ணா டத்தில் புலவர் கலியபெரு மாளை சந்தித்து அவரை கம்யூ னிஸ்ட் கட்சியில் சேர்த்தது குறிப்பிடத்தக்க சாதனை. மார்க்சிஸ்ட் கட்சி  உதயத்தில் முக்கிய பங்கு 1964-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது தோழர் எஸ்.நடராஜன் கட்சியின் வழிகாட்டி யாகத் திகழ்ந்தார். மதுரையில் 1964 ஏப்ரல் 28, 29  தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில கம்யூ னிஸ்ட் இணைப்பு கூட்டத்தில் அமைக்கப்பட்ட 54 பேர் கொண்ட மாநில இணைப்பு குழுவில் அவரும் ஒருவர்.

கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கட்சியின் நகல் அறிக்கையை மாவட்டம் முழு வதும் விளக்கும் பணியில் முனைப்புடன் செயல்பட்டார். 1964 செப்டம்பர் 12, 13 நாட்களில் கடலூரில் நடைபெற்ற கட்சியின் முதல் மாவட்ட மாநாட்டில் முதல் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1964 முதல் 1977 வரை மாவட்டச் செயலாளராக திறம்பட பணியாற்றினார். தேர்தல் களத்தில் பங்களிப்பு 1967 தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நெல்லிக்குப்பம் தொகுதியில் தோழர் சி.கோவிந்த ராஜன் வெற்றி பெற கட்சி அணிகளை முழு மையாக களத்தில் இறக்கிய பெருமை நட ராஜனுக்கே. 1971 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

1977 தேர்த லில் குறிஞ்சிப்பாடியில் குறைந்த வாக்குகள் வித்தி யாசத்தில் தோல்வியடைந்தார். மாவட்டத்தில் கட்சியின் சார்பில் கைத்தறி, நெல்லிக்குப்பம், டெல்டா பகுதிகளில் பல போராட் டங்கள் நடத்தி மார்க்சிஸ்ட் கட்சியை மக்கள் மத்தி யில் கொண்டு சென்றார். எளிய மக்களிலிருந்து பல  தலைவர்களையும், ஊழியர்களையும் வளர்த் தெடுத்த பெருமை நடராஜனுக்கே சொந்தம். வள்ளலாரும் மார்க்சியமும் -  ஒரு கலப்புத் தலைவர் ஆன்மீகமும் அரசியலும் ஒன்றாக இணைந்து செயல்பட முடியும் என்பதை தன் வாழ்வால் நிரூபித்தவர் தோழர் எஸ்.நடராஜன். மக்களின் துயர் துடைப்பதில் வள்ளலாரின் அன்புநெறியும், சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் மார்க்சிய மும் ஒன்றே என்று உணர்ந்தவர். வெறும் கோட்பாடு களுக்காக அல்ல, உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலைக்காக இறுதிவரை போராடிய அந்த உன்னத தலைவரை எப்போதும் நினைவில் வைப்போம்.