கரிசல்குயில் கிருஷ்ணசாமி குடும்பத்தினருக்கு பெ.சண்முகம் நேரில் ஆறுதல்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலக் குழு உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான பாடகருமான தோழர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி கடந்த ஏப்ரல் 11 ம் தேதி காலமானார். ஞாயிறன்று, அவரது சொந்த ஊரான ராஜபாளையம் அருகே உள்ள நரிக்குளம் கிராமத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ..சண்முகம் நேரில் சென்று அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். கட்சி உங்களோடு துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன், மாவட்டச் செயலாளர் அ.குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர் பொன்ராஜ், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி ஜெயலட்சுமி, நரிக்குளம் கிளைச் செயலாளர் வேலுச்சாமி உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.