பண்ணையடிமையிலிருந்து ஒரு கம்யூனிஸ்ட்டாக... - ஐ.வி.நாகராஜன்
1940 காலகட்டங்களில் தஞ்சை மாவட்டத்தில் டீ கடை கள்ளுக் கடை என்று எங்கு சென்றா லும் தலித் மக்களுக்கு என தனி வாசல், தனி குவளை இருந்தது. இதை எந்த அரசியல் இயக்கங்க ளும் கண்டுகொள்ளவில்லை. தீண்டாமை கொடுமை தலை விரிங்தமத்தாடிய காலம் அது. இந்த பின்னணியில் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடிக்கு அரசியல் கட்சிகள் என்றாலே வெறுப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாத கடைசியில் தனுஷ்கோடி ஒரு புதிய பத்திரிகையை பார்த்தார். அதுதான் ஜனசக்தி. அது கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை என்றும் அதில் விவசாயிகள், தொழிலாளிகள், பண்ணை யடிமைகள், தீண்டாமை கொடுமைபற்றி எழுதப் படுகிறது என்றும் தனுஷ்கோடியிடம் கூறப் பட்டது.
பி.சீனிவாசராவ் சந்திப்பும் மாற்றமும்
அத்துடன் சேர்த்து இன்னொரு புதிய தகவலையும் கேள்விப்பட்டார். அதுதான் பண்ணையடிமைக்கு எதிராக, சாணிப்பால் சாட்டையடிக்கு எதிராக சமர் புரிய கன்னடத்து அய்யர் ஒருவர் தஞ்சை மாவட்டத்திற்கு வந்துள் ளார் என்பதும், அவர் பெயர் பி.சீனிவாசராவ் என் பதுமாகும். தனுஷ்கோடிக்கு ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டது. இங்கு கொடுமை புரிவதும் பிராமண பண்ணையார்கள், இது சரிப்பட்டு வருமா என்று யோசித்தார். அந்த நேரத்தில் பி.சீனிவாசராவ் தாழ்த்தப் பட்டவர்களின் வீட்டுக்கு வந்து அவர்களின் பிரச்சனைகளை எல்லாம் கேட்டறிந்து அவர்கள் வீட்டிலேயே அவர்கள் சமைத்த சாப்பாட்டையே சாப்பிட்டதால் தனுஷ்கோடிக்கு இதுவரை இல்லாத அளவு மகிழ்ச்சி ஏற்பட்டது. அதோடு மாற்ற மும் வீரமும் தனுஷ்கோடியிடம் தீவிரமாகியது.
குடும்ப வறுமையும் தோழர்களின் உதவியும்
அந்த காலகட்டத்தில் தோழர் பி.எஸ்.தனுஷ் கோடியின் குடும்பம் பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்தது. அவர் மனைவி, குழந்தைகளுடன் சாப்பாட்டுக்கே வழியில்லா மலும் உடுத்துவதற்கு துணிமணிகள்கூட இல்லாமலும் இருந்த நேரத்தில் தோழர் பி.எஸ்.ஆரும், கே.ஆர்.ஞானசம்பந்தமும், ஜி.வீரையனும் சாப்பாட்டுக்கும், உடைகளுக்கும் ஏற்பாடு செய்து உதவியுள்ளார்கள். இப்படிப்பட்ட சிரமங்கள் பலநேரங்களில் தனுஷ்கோடி குடும்பத்திற்கு ஏற்பட்டது.
போராட்டங்கள், சிறைவாசம் மற்றும் தலைமறைவு
அதன்பிறகுதான் தென்பரை இயக்கம், நாணலூர் கலவரம், நிலப்பிரபுக்களுக்கும் விவசாய சங்கத்திற்கிடையே ஏற்பட்ட முதல் ஒப்பந்தம், சாட்டையடி, சாணிப்பால் நிறுத்தம், வெண்மணி சம்பவம் என ஏராள நிகழ்வுகள், கோர சம்பவங்கள், தலைமறைவு மற்றும் சிறை வாசம் என நெஞ்சை உலுக்கும் பல்வேறு சம்ப வங்களில் பி.எஸ்.தனுஷ்கோடியின் பங்களிப்பு இருந்தது. 1964-ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடி இதரபல தோழர்களுடன் வெளியேறி வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்குவதில் முழுமூச்சுடன் செயலாற்றினார். அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் மார்க்சி ஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடியும் கைது செய்யப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் அவர் கடலூர் சிறையில் பாதுகாப்பு கைதியாக வைக்கப்பட்டார். 1962ஆம் ஆண்டில் இந்திய -சீன எல்லை மோதல் நடைபெற்ற சமயத்தில், 1975ஆம் ஆண்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டபோது பி.எஸ்.தனுஷ்கோடி பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டார். அவரது வாழ்வில் 9 ஆண்டுகள் 9 மாதம் சிறைவாசம் அனுபவித் துள்ளார். ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியுள்ளார். தமிழகத்தில் அதிக காலம் சிறைவாசம் அனுபவித்த தலைவர்களில் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வாழ்க்கை
மக்கள் உரிமைக்கான போராட்டங்கள், சிறைவாசம் பிறகு விடுதலை என அவருடைய வாழ்க்கை பயணம் தொடர்ந்தது. அதை தொடர்ந்து 1958-ஆம் ஆண்டில் பாங்கல் ஊராட்சிமன்ற தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அவர் திருவாரூர் தொகுதி யில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். 1970-ஆம் ஆண்டில் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.எஸ்.தனுஷ்கோடி 1973ஆம் ஆண்டு வரை அப் பதவியில் இருந்தார். மீண்டும் 1986ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
தனிக்கொடியாக உயர்ந்த தலைவன்
தஞ்சை மண்ணில் செங்கொடி இயக்கத் தின் வழியில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவராக தனிக்கொடி என்ற தனிமனிதர் பி.எஸ்.தனுஷ் கோடி என்ற மாபெரும் தலைவனாக பரிண மித்தார். அவர் எந்த பொருளாதாரமும் பணவசதி யும் இல்லாமல் சமூக கொடுமைகளுக்கு எதி ராக போராடி மக்கள் தலைவனாக மாறினார். செங்கொடி இயக்கத்தின் மகத்தான போராட் டம் தான் எழுதபடிக்கத் தெரியாத தனுஷ்கோ டியை மிக உயர்ந்த பதவிக்கு இட்டுச் சென்றது. இன்னும் சொல்லப்போனால் ஒரு காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக ஊர் பஞ்சாயத்து கூட்டி கட்டிவைத்து அடிக்கப்பட்ட வர்கள் இன்று மேல்சாதியினர் சம்பந்தப்பட்ட பல பஞ்சாயத்துகளை தீர்த்துவைக்கும் தலைவர்க ளாக கம்யூனிஸ்ட் இயக்கம் உயர்த்தியுள்ளது.
குடும்ப வாழ்க்கை
தனுஷ்கோடி மனோன்மணி தம்பதியருக்கு புருசோத்தமன், அசோகன் என்ற இருமகன்கள், விஜயலெட்சுமி, சுசீலா, சித்ரா என்ற மூன்று மகள்கள், கிருஷ்ணவேணி, மாலதி என்ற இரு மருமகள்கள், குணசேகரன், செல்வராஜ் என்ற இரு மருமகன்கள். அவர்கள் ஈன்றெடுத்த பேரன்கள், பேத்திகள் என அந்த குடும்பம் பல்கலைக்கழகமாக மாறியுள்ளது.
பெருமைக்குரிய வாழ்க்கை
தோழர் தனுஷ்கோடி நோய்வாய்ப்பட்டிருந்த நேரத்தில் “உங்கள் வாழ்வில் எதை பெருமை யாக கருதுகிறீர்கள்” என்று அவரிடம் கேட்ட போது, “எழுதபடிக்க தெரியாத பண்ணை அடி மையாக இருந்த என்னை வர்க்க உணர்வு பெற்ற மனிதனாக்கி மக்கள் ஊழியனாக தலை நிமிர செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பின ராக இருப்பதையே பெருமைக்குரியதாக கருது கிறேன்” என்றார். அவருடைய வாழ்வும் மக்கள் பணியும் இன்றைய இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம்.
ஐ.வி.நாகராஜன்