எளியவர்களின் குரல் தோழர் வி.கே.கோதண்டராமன் - எஸ்.தயாநிதி'
அரை நூற்றாண்டு காலம் ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்ட மக்களின் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர் விடுதலை போராட்ட வீரர் தோழர் வி.கே.கோத ண்டராமன். கீழ் வழித்துணையான் குப்பம் கிருஷ்ணப்ப செட்டியார் - தனம்மாள் இணையரின் மகனாக 20-05- 1912 இல் பிறந்தவர் கோதண்டராமன். வேலூர் ஊரிசு பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும் காலத்திலேயே குடுமியை வெட்டி எறிந்தார் பூநூலை கழற்றி எறிந்தவர். பாரதமாதா வாலிபர் சங்கத்தை துவக்கியவர். திருமணத்திற்கு பின் கேஜிஎப் சென்று 1940 களில் நந்தி துர்க்கம் சுரங்கத்தில் வேலைக்குச் சேர்ந்து சங்கம் அமைக்கும் முயற்சியை எடுத்தவர். தங்கச் சுரங்கத்தில் சங்கம் அமைத்தார். மைசூர் அரசு, சுரங்க நிர்வாகத்திற்கு எதிராக 28 நாட்கள் வேலை நிறுத்தம் நடை பெற்றது. இக்காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் மாண்டனர். போராட்டத்தின் போது கைது செய்யப் பட்டு ஸ்டேட் அவுட் என்னும் நாடு கடத்தல் நடவடிக்கைக்கு உள்ளா னார்.
கக்குந்தி இரயில் நிலையத்தில் இறக்கி விடப்பட்டவர் மீண்டும் காட்டு வழியே கோலார் சென்றார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு மைசூர், பெங்களூர் சிறைகளில் அடைக்கப்பட்டார் . சிறையிலிருந்து மீண்டபின் குடியாத்தம் வந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டார். தங்கள் வாழ்க்கையை சுரங்கத் துக்குள்ளேயே புதைத்துக் கொள் ளும் சுரங்கத் தொழிலாளர்க ளுக்காக, நுரையீரல் முழுவதும் பஞ்சை சுமந்து வாழ்நாட்களை எண்ணும் பஞ்சாலைத் தொழிலா ளிகளுக்காக, குடும்பம் முழுவதும் பீடி சுற்றினாலும் காசநோயை மட்டுமே கூலியாகப் பெற்ற பீடித் தொழிலாளர்களுக்காக, ஊரெல் லாம் சுத்தமாய் இருக்க தன் வாழ்க்கை யை அழுக்காக்கிக் கொண்ட துப்புரவுத் தொழிலாளிகளுக்காக சங்கம் கண்டு அவர்களின் இதயக் குமுறலை சட்டமன்றம், மக்கள் மன்றத்தில் எதிரொலித்தவர் தோழர் வி.கே.கோதண்டராமன். 1954 இடைத்தேர்தலில் அன்றைய முதல்வர் காமராசரை எதிர்த்து குடியாத்தத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக களம் கண்டவர்.
தொடர்ந்து 1957, 1967 ,1977 என மூன்று முறை 15 ஆண்டு காலம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். காமராஜர், அண்ணா, கருணா நிதி, எம்.ஜி.ஆர் என 4 முதல்வர்க ளை கண்டவர். அன்றைய முதல்வர் கருணாநிதியால் இவர் கோதண்ட ராமன் அல்ல கோரிக்கை ராமன் என புகழப் பெற்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அமைக்கப்பட்ட தமிழ்நாடு ஒருங்கிணைப்பு குழுவில் 16 உறுப்பினர்களில் ஒருவராகச் செயல்பட்டவர்.
தனது வாழ்நாளில் ஒன்பது ஆண்டுகாலம் சிறைவாசம், பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். கட்சியின் மாவட்டச் செயலாளராக, சிஐடியு வின் மாநிலத் தலைவர்களில் ஒரு வராக, பஞ்சாலை ஊரக வளர்ச்சி சம்மேளனங்களின் மாநில தலைவ ராக பணியாற்றியவர். 15 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் எங்கே யும் எப்போதும் குடையுடன் நடந்தே சென்றவர். அதிகாரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் . சொந்த வீடோ ,சொந்த வாகனமோ இல்லாமல் வாழ்ந்தவர். மார்க்சி யத்தின் மீது உள்ள அளப்பரிய பற்றுதலால் அதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். வசீகர மிக்க அந்த தோழரின் வாழ்க் கையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்.