articles

இன்று மனித நேயம் தினம்

2003 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று ஈராக்கின் பாக்தாத் நகரில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அங்குச் செயல்படும் ஐ.நா உதவி தூதுக்குழுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டெ மெல்லோ கொல்லப்பட்டார். அவருடன் பணியாற்றிய 22 பேரும் இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார்கள்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த செர்ஜியோ, ஐ.நா-வுக்காக 34 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். அவர் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதியை 'உலக மனிதநேய தினமாக' அனுசரிக்க வேண்டும் என ஐ.நா சபை முடிவெடுத்தது. கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து இந்த தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.