articles

img

காலத்தை வென்றவர்கள் ராவ்தா பத்திரிகையின் நிறுவனர் – ஆசிரியர்

ச ோவியத் யூனியனின் வெளி யுறவுத்துறை அமைச்சராக வும், செய்தித் தொடர்பாளராகவும் இருந்த வியாசஸ்லாவ் மாலடோவ் 1890 மார்ச் 9 அன்று ரஷ்யாவில் உள்ள குகர்கா கிராமத்தில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். 

1905 புரட்சியின் போது, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் போல்ஷ்விக் பிரிவு  உறுப்பினராக இருந்தார் மாலடோவ். சோவியத் நிறுவனரான விளாடிமிர் லெனினுடன் பணியாற்றிய புரட்சியாளர்கள் குழுவின் கடைசி உறுப்பினர் இவர்.  1915 இல் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இவர், ஓர் ஆண்டில் அங்கிருந்து தப்பித்தார். பின்பு, 1917 இல் பெட்ரோகிராட் சோவியத் உறுப்பினராகவும், ஸ்டாலினுடன் இணைந்து ராணுவப் புரட்சிக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். 1920 இல் இவர் உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு செயலாளராக நியமிக்கப் பட்டார்.

1921 முதல் சோவியத் அரசியல் தலைமைக்குழுவில் உறுப்பினராக இருந்த மாலடோவ் மங்கோலியா தூதராகவும், வியன்னாவின் சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் சோவியத் பிரதிநிதிகள் தலைவராகவும் பணியாற்றினார். 

சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான பிராவ்தாவின் நிறுவனராகவும், துவக்க கால ஆசிரியராகவும் இருந்தார். சோவியத் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கான ஸ்டாலினின் முதல் ஐந்தாண்டு திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தவர். 

மாலடோவ் 1939-49, 1953-56 ஆகிய காலக் கட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும், 1949-1953 வரை துணைப் பிரதமராகவும் இருந்துள்ளார். ஹிட்லருடன் கைகுலுக்கிய ஒரே சோவியத் உயர் அதிகாரி இவர்.  1956 இல் வெளியுறவு அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர், 1986 நவம்பர் 8 அன்று காலமானார்.