articles

நில உரிமை பேசிய ஹென்றி ஜார்ஜ்

அ மெரிக்க பத்திரிகை யாளரும் பொருளா தார அறிஞரும் சமூக செயல் பாட்டாளருமான ஹென்றி ஜார்ஜ் 1839 செப்.2 அன்று பென் சில்வேனியாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். முறை யான கல்விப் பயிற்சி இல்லை  என்றாலும், இவரது பொரு ளாதார ஆய்வுகள் சீர்திருத்தத் திற்கு வழிவகுத்தன. நிலத்தின் மீதான ஒரே வரி குறித்த இவரது வாதங்கள் இவரை மிகவும் பிரபலமாக்கியது. 

பத்திரிகையாளராக பணி யாற்றிய ஹென்றி, தனது கட்டு ரைகளில் நில உரிமை மற்றும் ரயில்வே தொழில் குறித்து அதிகம் எழுதினார். ஒரு பத்திரி கையாளராக நற்பெயரைப் பெற்ற ஜார்ஜ், உள்ளூர் அரசிய லிலும் ஈடுபட்டார். இதைத் தொ டர்ந்து சமூக செயல்பாட்டா ளராக திகழ்ந்தார்.

‘ஜார்ஜிசம்’ என்ற தத்து வம் மற்றும் பொருளாதார சித்தாந்தத்தை ஊக்கப்படுத்தி னார் ஹென்றி. இயற்கையில் காணப்படும் அனைத்தும், குறிப்பாக நிலம் மனிதகுலம் அனைவருக்கும் சமமானது என்ற ஜார்ஜின் கருத்துகள், சுற்றுச்சூழலில் அக்கறை கொண்டவர்களிடையே நிலைத்திருக்கிறது.

1871 இல் ‘எங்கள் நிலம் மற்றும் நிலக் கொள்கை’ என்ற துண்டுப் பிரசுரத்தை வெளியிட்ட ஹென்றி, அதில், ‘வறுமைக்கு முதன்மைக் கார ணம் வாடகை கோட்பாடு’ என் பதை முன்வைத்தார். பின்னர், 1879 இல் முன்னேற்றம் மற்றும் வறுமை (Progress and Poverty ) என்ற தலைசிறந்த நூலை எழுதினார். இது அவரை உலகப் புகழ்பெறச் செய்தது. இது சமத்துவமின்மை, தொழில்துறை பொருளாதா ரங்களின் சுழற்சி இயல்பு மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்ததாகும்.

ஹென்றி ஜார்ஜ், காரல் மார்க்ஸ் - இருவருமே தொழி லாளர் உரிமைகளை ஆதரித் தாலும், அவர்களுக்குள் நட்பு ஏற்படவில்லை. ஹென்றி ஜார்ஜ், 1897 அக்.29 அன்று காலமானார்.