நம்மைச் சுற்றி நிகழும் மாற்றத்தை கற்றுணர வும் கண்டுணரவும் தவறவிட்டால் முன்னேற்றத் தின் எல்லா வழிகளையும் தவற விடுகிறோம் என்று பொருள். இது தனி மனிதருக்கும், அமைப்பு களுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
புதிய தொழில் பரப்பு
தொழில் துறையில் நிகழும் மாற்றங்களின் உற்றுக்கண்களில் ஒன்றாக திகழ்வது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.
தமிழ்நாட்டின் ஸ்டார்ட் அப் திருவிழாவை மதுரை யில் நடத்த தேர்வு செய்தமைக்கு நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்.
புத்தாக்கம் மற்றும் புத்தொழில்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்று அழைக்கின்றோம். பாரம்பரிய தொழில் வழித்தடத்தில் புதிய பாதைகளையும், புதிய தொழில்பரப்பில் நவீன வழித்தடங்களையும் உருவாக்குபவையாக இவைகள் இருக்கின்றன. இன்று இணையத்தில் நாம் பயண்படுத்தும் பல செயலிகள் மற்றும் கருவிகள் இதுபோன்ற ஸ்டார்ட அப் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு உலகெங்கும் பரவியவை தான்.
எல்லா தளங்களிலும் புதிய சிந்தனை மற்றும் முயற்சியின் வழியாக உள்ளூர் நிலத்திலிருந்து கிளர்ந்தெழுந்து வரும் ஆற்றலை நாம் பார்க்க முடிகிறது. அதனால் தான் “கூகுள் பே (Google Pay)” கோலாச்சும் ஒரு தளத்தில் இராமநாத புரத்து இளைஞர் கருப்பையாவால் “இப்போ பே (Ippo pay)” செயலியை உருவாக்கி வெற்றிகர மாக சந்தையில் நிலை நிறுத்த முடிகிறது.
சிறுகுறு நிறுவனங்கள்
நாட்டின் வளர்ச்சிக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சி மிக முக்கியமான பங்கை ஆற்ற முடியும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களாக இருப்பதால் அவை வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் பெரும் பங்கை வகிக்கின்றன. வருமான அதிகரிப்பையும் சமூகத்தில் உருவாக்கும். வேலைவாய்ப்பும் வரு மான அதிகரிப்பும் இருந்தால்தான் சந்தை விரிவாக்கம் நிகழும். சந்தை இல்லாமல் உற்பத்தி நடைபெறாது. ஆகவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அதாவது சிறு குறு நடுத்தர தொழில்கள் ஒரு பொருளாதாரத்தின் ஜீவன் போல திகழ்பவை.
12 கோடி வேலை வாய்ப்புகள்
மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை விட சிறு குறு தொழில்கள் தான் சமூகத்தை உடன் அழைத்துச் செல்வதில் மிகப்பெரும் பங்காற்று கின்றன. சிறு குறு நடுத்தர தொழில்கள் இந்தியா வின் ஜிடிபி யில் 8 சதவீதத்தை தருபவை. இந்தியாவின் ஏற்றுமதியில் 40 சதவீதத்தை தருபவை. இந்தியாவின் தொழில் உற்பத்தியில் 45 சதவீதத்தை தருபவை. மொத்தம் 12 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பவை.
அரசின் சாய்மானம் எந்த பக்கம்?
மதுரையில் ஒரு முக்கியமான ஐடி நிறுவனம் இருக்கிறது. அதன் வருவாயில் 25 சதவீதத்தில் ஒரு சதவீதம்தான் காதி கிராம கைத்தொழில் உற்பத்தி நிறுவனங்களின் வருவாய். ஆனால் அந்த ஐடி நிறுவனம் 800 பேருக்கு வேலை வாய்ப்பு தருகிறது. காதி கிராமம் கைத்தொழில் நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 28 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பினை வழங்குகிறது.
இது இரண்டும் ஒரு சமூகத்திற்கு முக்கியம். ஆனால் அரசின் சாய்மானம் எந்த பக்கம் இருக்க வேண்டும்?
தனக்கு அதிக வரிவருவாயை தருகின்ற தொழிலின் பக்கம் இருக்க வேண்டுமா? அல்லது அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பை தருகின்ற தொழிலில் பக்கம் இருக்க வேண்டுமா என்று கேட்டால் வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கு கின்ற தொழிலின் பக்கம் தான் அரசின் சாய்மான மும் கூடுதல் ஆதரவும் இருக்க வேண்டும்.
வேலைகளை உருவாக்காத பெரும் கார்ப்பரேட்டுகள்
பெரும் தொழில்கள், பெரும் கார்ப்பரேட்டுகள் என்பவர்கள் எல்லாம் லாபக்குவிப்பை செய்பவர்களாக இருக்கிறார்களே தவிர வேலை வாய்ப்புகளை பெரிய அளவில் உருவாக்கு வதில்லை. பெரும் தொழில்களைப் பொறுத்தவரை அவையெல்லாம் வளர்ச்சியை உருவாக்குவது போல மாயை இருந்தாலும் அவை உருவாக்கும் வளர்ச்சி வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியாக இருக்கிறது.
இதை நான் சொல்லவில்லை; உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரபல இந்திய தொழில் அதிபர்களில் ஒருவரான சுனில் பாரதி மிட்டல் கூறினார். டாப் 100 நிறுவனங்களின் வேலை உருவாக்கத்தை ஆய்வு செய்தால் அவற்றில் நிகர வேலை உருவாக்கமே இல்லை என்றார். இப்படி இருந்தால் சமூகத்தை நம்மோடு எப்படி அழைத்துச் செல்ல முடியும் என்ற கேள்வி எழுப்பினார். மிகப்பெரும் தொழில் களுக்கும், முதலீட்டுக்கும் பொருந்தும் இந்த கேள்வி சிறுகுறுந் தொழில்களுக்கோ, புத் தொழிலுக்கோ பொருந்தாது.
புத்தாக்கத் தொழில்கள் பெரும் வேலை வாய்ப்பை தன்னியல்பிலேயே கொண்டு வருபவை யாக இருக்கின்றன.
அரசின் கடமை
இந்தியாவில் துவங்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிலை குறித்த நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பினேன். அந்த கேள்விக்கு அமைச்சர் “95 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்து விட்டன” என்று ஒரு புள்ளி விவரத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த விபரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புத்தாக்க மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் அடிப்படையே, புதிய சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடுப்புகள் சார்ந்தது. எந்த புதிய கண்டு பிடிப்பும் எடுத்த எடுப்பிலேயே வெற்றியின் மீது நின்று தனது பயணத்தை துவக்குவதில்லை. அது பல்வேறு தோல்விகளை சந்தித்துதான் சாத்தியங்களை அடையும் நிலைக்கு வந்து சேர்கிறது.
எனவே புத்தொழில் நிறுவனங்களான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்தாலும் அது எழுந்து நிற்கும் சூழலை உருவாக்கக் வேண்டியதுதான் அரசின் கடமை.
ஒரு செடி விதையால் மட்டும் முளைப்ப தில்லை, காற்றாலும், ஒளியாலும், நீராலும், சூழலா லும் தான் முளைக்கிறது. புத்தாக்கத் தொழிலுக்கு அப்படி ஒரு சூழலை உருவாக்கித்தர வேண்டி யது தான் அரசின் தலையாய கடமை. புத்தாக்க தொழில் முயற்சிகள் 95 சதவீத தோல்வி அடைந்தா லும், ஒரு சதவீத வெற்றி கிடைத்தால் போதும், அது 100 சதவீத தோல்வியிலிருந்து மீளுகின்ற மன வலிமையையும் நம்பிக்கையையும் தொழில் முனைவோருக்குத் தரும்.
தமிழ்நாட்டின் முன்னுதாரணம்
அந்த வகையில் தமிழ்நாடு இந்தியாவில் ஒரு முன்னுதாரணமான மாநிலமாக இருக்கிறது என்பதில் நமக்கு பெருமை.
தமிழ்நாட்டில் 9000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இந்த ஒன்பதாயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 24 சதவீதம் பெண் தொழில் முனை வோர்களால் நடத்தப்படுவது. இதுதான் தமிழ்நாடு எந்த மாதிரியான சமூகத்தை உருவாக்கி வைத்துள்ளது என்று இந்த நாட்டுக்கு தொழில் துறையில் இருந்து சொல்கின்ற செய்தி.
இந்தியாவின் பிற மாநிலங்களோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டின் இயற்கை வளம் குறைவு ஆனால் மனித வளம் மிகப்பெரிது. அதேபோல மிக வலிமை யானது உள்கட்டமைப்பு. தொழில் மற்றும் மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் 12 பெரும் மற்றும் மிகப்பெரும் நகரங்களை கொண்ட மாநிலம் தமிழ்நாடு. கடந்த அரை நூற்றாண்டாக நகர்மயமாக்கலின் விளைவாக மக்கள் தொகையின் செறிவான குவியல் நகரங்கள் உருவாகியுள்ளன.
மிக திறன் வாய்ந்த மனித வளமும், வலிமையான உள்கட்டமைப்பும் கொண்ட தமிழ்நாடு இயற்கையாகவே புத்தொழிலாக்கத்திற்கு மிக சாதகமான மாநிலமாக இருக்கிறது.
StartupTN புதுப்பிக்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில், ஒன்றிய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா வரிசையில் ’Best Performer’ என்கிற இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது.
அவுட்லுக் பிசினஸ் (Outlook Business) இதழ் வெளியிட்ட 2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஸ்டார்ட்அப் செயல்பாட்டு வரிசையில் முன்னணி வகிக்கும் மூன்று இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மாநிலத்தின் புத்தொழில் சூழலுக்கான மொத்த மதிப்பு 2021-ம் ஆண்டில் 3.9 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2023-ம் ஆண்டில் 10.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
முன்னணியில் கோவை, சென்னை, மதுரை
அண்மையில் வெளிவந்துள்ள புள்ளிவிபரம் (2024 ஜூலை) கடந்த ஓர் ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவன முதலீட்டில், தில்லி (ரூ.1944 கோடி) முதலிடத்தையும், கோவை (ரூ.1671 கோடி) இரண்டாவது இடத்தையும் பெங்களூரூ (ரூ.1430 கோடி), மும்பை (ரூ.1330 கோடி) மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன.
பெங்களூரு மற்றும் மும்பையை விட கோவையின் ஸ்டார்ட் அப் முதலீடு அதிகம் என்பது சாதாரண ஒன்றல்ல. நம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் புத்தாக்க ஆற்றலுக்கான சிறந்த எடுத்துக்காட்டென இதனை நான் கருதுகிறேன்.
அதே போன்று சென்னை மற்றும் கோவையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தலா ஆயிரத்துக்கு மேல் இருக்கிறது. அதே நேரம் மதுரையின் எண்ணிக்கை 500 ஐ கடந்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பார்த்தால் மதுரை வளர்ச்சியில் முன்னணியில் இருப்பது மிகவும் நம்பிக்கை தருவதாக இருகிறது.
கார்ப்பரேட்டுகளின் ஊக வணிகம்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான கொள்கை, பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் ஒன்றிய அரசின் பங்கே மிகமுக்கியமானதாக இருக்கிறது. பெரும் தொழிலதிபர்களிடம் அரசின் அனைத்து ஒழுங்காற்று கட்டமைப்புகளும் சரணடைந்துள்ள சூழல், இளம் புத்தாக்க தொழில் முனைவோர் களுக்கு அவநம்பிக்கையை மட்டுமே விதைக்கும்.
பெரும் தொழில்களுக்கு பெரும் கார்ப்பரேட்டு களுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் அதன் மூலம் ஈட்டும் லாபத்தை முதலீடுகளாக மாற்றுவதில்லை. மாறாக ஊக வணிகத்தில் ஈடுபடுத்தி லாபங்கள் குவிக்கிறார் கள். அது வேலை வாய்ப்புகளையும் உருவாக்கு வதில்லை; சமூகத்தில் வருமான அதிகரிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இது சந்தையை சுருக்கி குறு சிறு நடுத்தர தொழில்களையும் பாதிக்கின்றது.
அண்மையில் வந்துள்ள செய்தி, மூன்று ஆண்டுகளில் பங்குச்சந்தையின் ஊக வணிக ஆவணங்களில் 1,80 000 கோடி ரூபாய்களை 93 சதவீத சில்லறை முதலீட்டாளர்கள் இழந்திருக் கிறார்கள். யார் பயன் பெற்றார்கள்? விவரங்களை செபி வெளியிடுமா? கேட்டால் தரவு இல்லை என்பார்கள். வணிக ரகசியம் என்பார்கள். யார் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்? தப்பித்தவறி அங்கே போன சிறு குறு நடுத்தர தொழில் அதிபர்களாக தான் இருப்பார்கள். அல்லது நடுத்தர வர்க்கமாக இருப்பார்கள்.
ஒன்றிய அரசின் கொள்கைகளில் மாற்றம் தேவை
ஆகவே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வளர்வதற்கு, பாதுகாக்கப்படுவதற்கு ஒன்றிய அரசின் கொள்கைகளில் மாற்றம் தேவை.
ஒரு பக்கம் மாநிலங்களின் மீது ஒன்றிய அரசு விதிக்கும் செஸ், சர் சார்ஜ் மொத்த வரி வசூலில் 2011 ஆம் ஆண்டு 8.6சதவிகிதமாக இருந்தது. இப்போது 28 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. எந்த அளவிற்கு மாநிலங்களின் பங்கு வஞ்சிக்கப்படு கிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவையில்லை.
அதே நேரம் கார்பரேட் வரிகளை கடந்த 10 ஆண்டுகளில் 11 சதவிகிதம் குறைத்து பல லட்சம் கோடிகளை வாரி வழங்கியுள்ளது.
மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. பெரு நிறுவனங்கள் சலுகைகளின் பெரு வெள்ளத்தை தனதாக்கிக்கொள்கின்றன. இந்தப் பிண்ணனியில் ஒன்றிய மாநில அரசுகள் இரண்டாலும் ஊக்கப்படுத்தபட வேண்டிய ஸ்டார்ப் நிறுவனங்கள் பாகுபாடான தொழில் கொள்கை மற்றும் அணுகுமுறைகளையும் சந்தித்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
எந்த ஒரு புதிதும் இடுபாடுகளையும் நெருக்கடி களையும் சந்திக்காமல் மீண்டெழுவதில்லை. புத்தொழிலாக்க முயற்சிகள் மட்டும் அதற்கு விதிவிலக்கினை பெற்றுவிட முடியாது.
முயற்சி திருவினையாக்கட்டும். கனவுகள் வெல்ல காரியமே துணை!
(மதுரையில் செப்டம்பர் 29 ஞாயிறன்று நடைபெற்ற
ஸ்டார்ட் அப் திருவிழா நிகழ்வினை
துவக்கி வைத்து ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்)