articles

img

துயரங்களை எழுத்தில் வடிக்கும் போது... -​​​​​​​கடலூர் சுகுமாரன்

பத்திரிகை நிருபர்கள் ஒரு துரதிஷ்டவ சமான நிகழ்விலிருந்து அடுத்த சம்பவத்திற்கு செல்லும் பொழுது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அந்த சம்பவம் பற்றி யோசிக்கவோ அல்லது இறந்தவர்களுக்கு இரங்கல் கூட தெரிவிக்க முடியாமலோ அதனை கடக்கும் போது அடையும் மனவேதனை க்கு வார்த்தை ஏது?

இறப்பிலும் கூட கண்ணியமில்லை!

ஜூலை இரண்டாம் தேதி மாலை உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ரஸ் என்ற இடத்தில் பெண்கள் உடல்கள் தரையில் சிதறி கிடக்கும் காட்சிகளால் சமூக ஊட கங்கள் நிரம்பி வழிந்தன.நீண்ட முக்காடு அணிந்த பெண்களுக்கு இறக்கும் தரு ணங்கள் கூட கண்ணியமாக இல்லை. “கடவுள்” ஒருவரின் மத வழிபாட்டு கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண் டுள்ளனர்.

நிகழ்வு முடிந்ததும் ஏற்பட்ட இட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தை கள் இறந்தனர். இந்தியாவில் சமீபத்தில் ஏற்பட்ட மிக மோசமான கூட்ட நெரிசல் துயரம் (Stampede) இது என பின்னர் தெரிந்தது. பிணவறைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல்கள் குவிந்தன. ஒரு சிறிய ஊரான ஹாத்ரஸ் இவ்வளவு பெரிய துயரத்தை தாங்கும் அளவிற்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் பலரது உடல்கள் ஆக்ரா, எட்டாவா, அலி கார் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.உயிரிழந்தோர்  எண்ணிக்கை 121 ஆக அதிகரித்தது.

சோகம் நடந்த சில மணி நேரத்திற் குள் நானும் எனது சக ஊழியரும் அந்த சம்பவ இடத்தில் இருந்தோம். குடும் பங்களை ஒன்றன்பின் ஒன்றாக சந்தித்துக் கொண்டே நான் திரிந்த பொழுது தன் குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களையும்- தாய், மனைவி, மகள்- இழந்த ஒருவரை சந்தித்தேன். தனது அன்பிற்குரிய 10 வயது மகளின் முகத்தை எங்களுக்கு காட்ட துணியை விலக்கினார். அந்த காட்சி எங்களை உலுக்கியது. அந்த இளம் உடலில் Y  வடிவ கீறல் இருந்தது. அவளுடைய கண்களில் வடுக்கள். மிக கொடூரமான முறையில் சிதைக்கப்பட்ட அந்த இளம் குருத்தின் உருவம் எங்களுக்குள் நீண்ட காலம் உறைந்திருக்கும். 

ரணமான மனது

நிருபர்கள் நாங்கள் இது போன்ற வற்றை பார்க்கும் பொழுது உறுதியான வர்களாக இருப்போம் என எதிர்பார்க் கப்படுகிறது. நீண்ட காலமாக இதனை அனுபவிக்கும் பொழுது மரக்கட்டையா கவும் ஒருவர் மாறலாம். நம்மை நிலை நிறுத்த அதை சமாளிக்கும் பொதுவான முறையாகக் கூட அதை  கருதலாம்.

ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் அழுகுரல்கள் மனதை ரணமாக்குகிறது.ஆனாலும் அவற்றை மக்களுக்கு நுணுக்க மாகவும், உணர்திறனோடும் தெரிவிக்க பார்த்த அந்த காட்சியை கூற வேண்டி யிருக்கிறது. இதைப் போன்ற துயரங்க ளில் துக்கத்தில் மூழ்கியுள்ள குடும்பத்தி னரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பித்தான்  ஆக வேண்டும். அதற்குக் காரணமான வர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்த முயற்சி செய்யும் அதே வேளையில் துயரச் செய்திகளை அனுதாபத்துடனும் நாங்கள் சொல்ல வேண்டும்.

இரண்டு முதன்மை பணிகள்!

இந்த நேரத்திலும் எங்கள் முன் இரண்டு பணிகள் முன்னுரிமையானது.

காணாமல் போனவர்களின் விவரங்க ளை குறிப்பிட வேண்டும். இறந்தவர்கள் வைக்கப்பட்டுள்ள பிணவறைகள் மற்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெரும் மருத்துவமனைகள் குறித்து உற வினர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இதுவும் அதிர்ச்சிகரமானது. மூடி யிருக்கும் முகங்களை அடையாளம் காண முயன்ற போது அவர்கள் அனுபவித்த வேதனை நெஞ்சை பிளப்பதாகும். தனது 15 வயது பேத்தியை தாத்தா ஒருவர் தேடிய பொழுது அவருக்கு உணவ ளிக்க வந்தவரை கூட பார்க்க முடியா மல் உடல் நடுங்கி நின்ற காட்சி அனைவ ரையும் உலுக்குவதாகும்.

அந்த இடத்தில் திரண்டு இருந்த கிராம மக்களுடன்  நாம் பேசும் பொழுது மிகவும் கூனிக் குறுகினோம். சோகத்தின் விவரங்களை பகிர்ந்து கொண்ட அவர்களே நெஞ்சுரம் மிக்கவர்கள்.

கிராமத்தினரும் பிரமுகர்களும்

இந்த சம்பவத்திற்கு அதை ஏற்பாடு செய்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும். சற்றும் குறையாமல் காவல்துறையும், நிர்வாகமும் இதற்கு பதில் அளித்தாக வேண்டும். எந்த மிரட்டலுக்கும் அடிபணி யாமல் சாட்சியமளிக்க முன்வந்த கிராமத்தி னர் பாராட்டுக்குரியவர்கள். பிரமுகர்கள் பலர் சம்பவம் நடந்த இடத்தை பார்ப்ப தற்கும் புகைப்படம் எடுக்க மட்டுமே வந்தார்கள் என்பது நம் மனசாட்சியை குத்தி கிழிக்கிறது.

இருந்தாலும் பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியில் மட்டுமே உறைந்து நின்று விட முடியாது. காவல்துறையின் விசாரணை குறித்த விவரங்களை தெரி விக்க வேண்டும்.கைது செய்யப்பட்ட வர்கள் விவரத்தை பகிர வேண்டும். குடும்பங்கள் பெற வேண்டிய இழப்பீட்டுத் தொகை பற்றி புகார் அளிக்க வேண்டும். எங்களுக்கு இது மிகவும் கடினமான பணி  நாங்கள் எங்கள் பணியை செய்யும் பொழுது எங்களோடு ஒத்துழைத்த  துக்கம் நிறைந்த குடும்பங்களிடம் விடைபெறும் பொழுது கண்கள் கலங்கின. பேரழிவு கள், துயரங்கள் பற்றி எழுதுவது ஒரு போராட்டம் தான் . ஆனாலும் உயிர் பிழைத்தவர்களின் கதைகள் என்றும் எங்களை பின்தொடர்பவை.

விரக்திக்குள்ளே  எழும் நம்பிக்கை கதிர் !

ராஜஸ்தான் பரத்பூரைச்  சார்ந்த பப்புசிங்கின் கதை நம்பிக்கை ஊட்டு வதாகும்.நெரிசல் ஏற்பட்ட இடத்திலிருந்து அவரது தாயும் தந்தையும் காணவில்லை. நான் அவரை சந்தித்த அந்த இரவு அவர்கள் இருவரும் பத்திரமாய் வீடு திரும்பினார்கள் என்ற நற்செய்தியை பகிர்ந்து கொள்ள என்னை அழைத்தார். அவருடைய குரலில் தான் எவ்வளவு நிம்மதி.!

சோகங்களைப் பற்றி எழுதுவது கடி னமான பணிதான். இறந்தவர்களுக்கு துக்கம் தெரிவிக்க  கூட  சிறிதும் நேர மில்லாமல் ஒன்றிலிருந்து அடுத்த நிகழ்வுக்கு விரைய வேண்டும்.நிகழ்வு களை சொல்வதும் காலக்கெடுவை துரத்து வதும் தான் எங்கள் முதன்மை பணி. துயரங்களை உள்வாங்கி மனம் விட்டு பகிரவும் ஆற்றுப்படுத்திக் கொள்ளவும்  கூட எங்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

இஷிதா மிஸ்ரா
தி இந்து 12/7/24
தமிழில்: கடலூர் சுகுமாரன்