articles

img

அமெரிக்காவை தாஜா செய்யவே மோடியின் உக்ரைன் பயணம்

நரேந்திர மோடியின் உக்ரைன் பயணம், அமெரிக்க ஆதரவு வட்டா ரங்களினாலும், துதிபாடும் கார்ப்ப ரேட் ஊடகங்களாலும் மாபெரும் வெற்றி என்பதுபோல் தம்பட்டம் அடிக்கப்படு கிறது. அவர்களின் கூற்றுகளின்படி, ஓர்  இந்தியத் தலைவர், தில்லியில் ஜி.20 உச்சி  மாநாட்டை நடத்தியதன் மூலமாக சர்வ தேச அந்தஸ்தைப் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளார்; தெற்கு உலகத்தின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்; கீவ் நகரத்திற்குச் சென்றதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறார்; இவ்வாறு ரஷ்யா-உக்ரைன் மோதலில் அமைதி யைக் கொண்டுவருவதில் ஒரு மத்தி யஸ்தர் பங்கினை ஆற்றி இருக்கிறார் என்ப வைகளாகும்.  

ஜெலன்ஸ்கியின் அதிருப்தி

ஆனால், அதே சமயத்தில், துதிபாடும் ஊடகங்களின் கூற்றுகளுக்கு எதிராக வும், அமெரிக்க ஆதரவு விமர்சகர்களின் கூற்றுகளுக்கு எதிராகவும், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, மோடியின் வருகை குறித்தும், இந்தியா, ரஷ்யாவிட மிருந்து எண்ணெய் வாங்குவது தொடர்பா கவும், ரஷ்யாவின் ஆயுதத் தொழிலுக்கு இந்தியா நிதியளிப்பது குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கி றார்.  இதன்மூலம் அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இருப்பதாகக் கூறுவதை அவர் நிராகரித்தார்.

ஸ்விட்சர்லாந்தில் சென்ற ஆண்டு ஜூன் மாதம் அமைதிக்கான முதல் மாநாடு நடைபெற்றபோது, அந்த மாநாட் டில் அமைதிக்கான  உச்சி மாநாட்டுக் கான குறிப்பைத் தயார் செய்தபோது அதில் கலந்துகொள்ளாத ஒரு நாடு, அமைதிக்கான உச்சி மாநாட்டை நடத்த முடியாது என்று அவர் மேலும் கூறினார்.  

அமெரிக்காவின்  இளைய பங்காளியே!

ஸ்விட்சர்லாந்தில் மாநாடு நடை பெற்றபோது இந்திய அயல் விவகாரங்கள் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஒருவர் கலந்து கொண்டார். ஆனாலும் அப்போது அங்கே தயாரிக்கப்பட்ட குறிப்பில் (communique) இந்தியா கையொப்பமிடவில்லை. ஜெலென்ஸ்கி மேலும், தான் இந்தியாவிற்கு வரும்போது, இந்தியா தன் பக்கம் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும், அது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சமநிலை எடுக்கக் கூடாது (“not balancing between US and Russia) என்றும் கூறியிருக்கிறார். மேலும், தன்னைப்போலவே, மோடியும் அமெ ரிக்காவின் ஓர் இளைய பங்காளியே என்றும், எனவே தான் இவ்வாறுதான் பேச முடியும் என்றும் ஜெலென்ஸ்கி கூறி யிருக்கிறார்.  

ரஷ்ய விருதும்  அமெரிக்க சீற்றமும்

மோடியின் கீவ் விஜயத்தின் பின்னணி யில் உள்ள உண்மையான நோக்கம், இந்தியா ஒரு விஸ்வ குரு என்ற பேச்சால் கண் சிமிட்டுபவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஜூலை மாதம் மோடியின் மாஸ்கோ பயணம், வாஷிங்டனில் நேட்டோவின் 75ஆவது ஆண்டு விழாக் கூட்டத்தை நடத்தியதுடன் ஒத்துப்போகிறது.

ஜனாதிபதி புடினை மோடி கட்டிப் பிடித்து, ரஷ்ய நாட்டின் உயரிய விருதை புடினிடம் இருந்து பெற்றுக்கொண்ட காட்சி வாஷிங்டனில் கடுஞ்சீற்றத்தை ஏற்படுத்தியது.

நேட்டோ கூட்டம், புடினின் ரஷ்யா விற்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒன்றுதிரட்டுவதற்காக நடந்தது. அதே நேரத்தில் அமெரிக்காவின் ‘இந்தோ-பசிபிக்’ கூட்டாளியோ அதனுடைய எதி ரியை வெட்ககரமான முறையில் அதன் கூட்டாளியை அரவணைத்துக் கொண்டி ருந்தார். இதற்கு பைடன் நிர்வாகத்தின் பல்வேறு பிரதிநிதிகளும் எதிர்ப்புக் குரலை எழுப்பினர். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனிலிருந்து அரசின் பல்வேறு பிரதிநிதிகள் தங்கள் எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர். 

“அமெரிக்க - இந்திய ராணுவ உடன் படிக்கை உலகில் மிக முக்கியமான ஒன்று என்பதையும், எனவே தான் நினைத்தபடி யெல்லாம் செயல்படலாம் என இந்தியா இருக்கக்கூடாது என எச்சரித்திட வேண்டும் என்றும்” இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் மேலும் கூறுவதாவது: “இந்தியா, தன்னுடைய போர்த்தந்திர சுயாட்சியை (strategic autonomy) விரும்புகிறது என எனக்குத் தெரியும். ஆனால், மோதல் என்று வந்து விட்டால், அதுபோன்ற போர்த்தந்திர சுயாட்சி என்று எதுவும் இல்லை.”

அஜித்தோவலின் அமெரிக்க தாஜா

மோடியின் ரஷ்ய பயணத்திற்கு இரண்டு நாட்களுக்குப்பிறகு, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோச கர் ஜேக் சல்லிவனை அழைத்து, இந்தியா, அமெரிக்காவுடனான போர்த்தந்திர கூட்டணியைத் தீவிரமாகப் பின்பற்றும்  என்றும், டோக்கியோவில் நடைபெற வுள்ள நான்கு நாடுகளின் (குவாட்) மாநாட்டில் பங்கேற்பது உறுதி என்றும் கூறி அமெரிக்காவை தாஜா செய்ய முயற் சித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள், உக்ரைனுக்கு மோடியின் சாத்தியமான பயணம் குறித்து விளக்கத் தொடங்கின. எனவே, நரேந்திர மோடி அமெரிக்காவை சமாதானப்படுத் தும் விதத்தில், இந்தியா தொடர்ந்து அமெ ரிக்க கூட்டணியின் இளைய பங்காளியா கத் தொடரும் என்பதை சமிக்ஞை காட்டும் விதத்தில் உக்ரைனுக்குச் சென்றார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ராஜ்நாத் சிங்கின் பயணமும் ஒப்பந்தங்களும்

மோடி கீவ் நகருக்கு சென்ற அதே நாளில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங். அமெரிக்காவிற்கு சென்று அமெரிக்காவு டன் தங்களுடைய நட்புறவை உறுதிப் படுத்தி இருக்கிறார். அவருடைய நான்கு நாட்கள் அமெரிக்கப் பயணத்தின் போது, எஸ்ஓஎஸ்ஏ (SOSA) என்னும் ‘விநியோகப் பாதுகாப்பு ஏற்பாடு’ (‘Security of Supplies Arrangement’) என்னும் ஒப் பந்தம், அமெரிக்காவின் முக்கிய கமாண்டோ படைகளில் இந்திய ராணுவ அதிகாரிகளை நியமிப்பதற்கான ஒப் பந்தம் ஆகியவற்றில் கையொப்பமிட்டி ருக்கிறார். மேலும் அமெரிக்காவிடமி ருந்து ஆயுதங்கள் வாங்குவதன் ஒரு பகு தியாக, அமெரிக்க அரசாங்கம் 58.6 மில்லி யன் டாலர்கள் மதிப்புள்ள நீர்மூழ்கி எதிர்ப்புக் கப்பல்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்திருக்கிறது.  

இந்தியா, ரஷ்யாவுடனான தன் நீண்ட கால உறவுகளை, குறிப்பாக குறுகிய காலத்தில் ராணுவத் தளவாடங்களை வாங்குவதை, இந்தியா கைவிட முடியாத அதே சமயத்தில், மோடியின் கீவ் பயண மும், ராஜ்நாத் சிங்கின் அமெரிக்கப் பய ணத்தின் விளைவும் காட்டுவது என்னவெ னில், அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டணியை இந்தியா மேலும் வலுப் படுத்தும் விதத்திலேயே செல்லும் என்ப தையே. இனி இந்தியா, ரஷ்யாவுடனான உறவுகளைக் குறைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்கிற சமிக்ஞையை அது காட்டியிருக்கிறது. மோடி அரசாங்கம் அமெரிக்காவின் ராணுவக் கூட்டணியில் அங்கம் வகிக்கும்வரை தனக்குப் போர்த் தந்திர சுயாட்சி (strategic autonomy)க்கான வாய்ப்பு இல்லை என்கிற படிப்பி னையை அது கற்றுக் கொண்டிருப்ப தாகவே தெரிகிறது.

ஆகஸ்ட்28, 2024, 
தமிழில் : ச.வீரமணி