articles

img

அதிபதப்படுத்தப்பட்ட உணவும் முதலாளித்துவமும் - டாக்டர் அனுஷ்வர் இறையன்பு

அதிபதப்படுத்தப்பட்ட  உணவும் முதலாளித்துவமும்

‘அதிபதப்படுத்தப்பட்ட உணவு’ என்பது தொழிநுட்பத்தால் முற்றிலும் மாற்றப்பட்ட உணவுகளாகும். வீட்டின் சமையலறையில்  இல்லாத செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி இவை தயாரிக்கப்படுகின்றன. இவை உட்கொள்ளத் தயாராகவோ அல்லது எளிதில் நம்மால் சமைக்கவோ இயலும் உணவுகளாகும். பொதுவாக கொழுப்பு, உப்பு, சர்க்கரை நிறைந்த உணவுகளாகும். பெரும்பாலும் துரித உணவகத்திலும் அங்காடியிலும் எளிதில் கிடைக்கும். பல்வேறு காரணங்களுக்காக மக்களின் வாழ்க்கைமுறை எப்பொழுது அதிக பணத்தைச் சம்பாதிக்க வேண்டிய நிலையை மைய மாகக் கொண்டு நகரத் தொடங்கியதோ அப்பொழுது எளிதில் இந்த அதிபதப்படுத்தப்பட்ட உணவு கலாச்சாரமும் பெருகத்தொடங்கியது. இந்தியாவில் சராசரி குடிமக்களின் அன்றாட கலோரி தேவையில் 10 சதவிகிதம் இந்த அதி பதப்படுத்தப்பட்ட உணவிலிருந்து கிடைக்கின்றது.

துரித உணவின் தோற்றம்

எரிக் ஷ்லோசர் (Eric Schlosser) என்னும் அமெ ரிக்க எழுத்தாளர் “துரித உணவு நாடு: அமெரிக்க உணவின் கருப்புப் பக்கம்’ என்னும் நூலில் அமெரிக்கத் தொழில் துறையின் வரலாறு பற்றி விவ ரிக்கின்றார். அமெரிக்காவின் முதல் துரித உணவு நிறுவனம் ‘மெக்டானல்ட்ஸ்’. இரு சகோதரர்கள் கலிபோர்னியாவில் தொடங்கிய உணவகம் அது. அவர்கள் வேகத்திலும் செயலாக்கத் திறனிலும் முக்கி யத்துவம் வகித்தனர். 1950களில் அமெரிக்காவில் மகி ழுந்துகள் பெருகிய நிலையில் அனைவரும் வண்டி யில் அமர்ந்தபடியே உணவு வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். ரே கிராக் என்னும் தொழில திபர் இந்த செயல்திட்டத்தைக் கண்டு ஈர்க்கப்பட்டு பல லட்சம் டாலர்களை செலவு செய்து இந்த உண வகங்களை அமெரிக்கா முழுவதும் பிரபலமாக்கி னார். அதிக லாபம் கருதி தரமற்ற பொருட்களைப் பயன் படுத்தியும் சுவைக்காக அதில்  அதிக கொழுப்பை யும் உப்பையும் இனிப்பையும் சேர்த்து இவை தயா ரிக்கப்படுகின்றன. இதன் காரணமாக இது போன்ற பல்வேறு உணவகங்கள் உலகமெங்கும் பரவி யுள்ளன. தக்கை உணவு (Junk Food) என்கிற பதத்தை அறிமுகப்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன் என்பவர். சத்தற்ற உணவு என்கிற பொருளில் இந்த பதத்தை அவர் பயன்படுத்தினார்.

ஏன் இவை இவ்வளவு  பிரபலமாக மாறின?

ஆதிமனிதருக்கு மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்) எளிதில் கிடைக்கவில்லை. அவர்கள் வேட்டையாடியே உணவை உட்கொண்டார்கள். மனித மூளையில் மூளைத்தண்டும் ‘பேசல் கேங்கிலயா’ என்று அழைக் கப்படும் பகுதியும் பரிணாம வளர்ச்சியில் முதலில் தோன்றியவைகளாகும். இதனுடன் ‘தலாமஸ் மற்றும் ஹைபோதலாமஸ்’ என்று கூறப்படும் பகுதிகள் சேர்ந்து தான், ‘பல்லியின் மூளை’ என்று அழைக்கப்படுகிறது. இவை பல்லி போன்ற பிராணிகளிலும் மனிதரில் செய்யும் வேலைகளைப் புரிகின்றது. பரிணாம வளர்ச்சி யில் இவை ‘நியோகார்டெக்ஸ்’ என்று அழைக்கப்படும் புதிய பகுதியைப்போல் இதன் செயல்கள் விரிவடைய வில்லை. எப்பொழுது நாம் சர்க்கரை அல்லது கொழுப்பை உட்கொண்டாலும் இந்த ஆதிமூளை ‘டோபமைன்’ என்னும் ரசாயனத்தை சுரக்கின்றது. இது ஒரு அலாதியான சுகத்தைக் கொடுக்கின்ற காரணத் தால் நம் மூளை இது இன்னும் வேண்டும் என்று ஏங்குகிறது.

பெரு நிறுவனங்களின் விளம்பர யுக்தி

ஒரு பொருளை விற்க வேண்டுமெனில் பொது வாக சம்பாதிக்கின்ற வயதில் உள்ளோரைத்தான் நிறுவனங்கள் குறிவைக்கும். ஆனால் இந்த அதிபதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையைப் பொறுத்தவரை எளிதில் அவர்களின் விளம்பர உத்தி களில் சிக்குகின்றவர்கள் குழந்தைகளே! குழந்தை கள் பெற்றோரை எளிதில் இணங்கச் செய்து அவர்கள் விரும்புவதை அடம்பிடித்து வாங்கிவிடுவார்கள். 1980களிலிருந்து பெற்றோர் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரம் குறைந்துவிட்டது.  குழந்தைகளைக் கவரும் வண்ணம் தொலைக்காட்சிகளில் காட்டப் படும் விளம்பரங்களால் அவர்கள் எளிதில் வசீக ரிக்கப்படுகின்றனர். மேலும் துரித உணவகங்கள், உணவோடு சிறு பொம்மைகளையும் அவர்கள் விளையாட விளையாட்டு பூங்காக்களையும் அமைத்து கவர்ந்து விடுகின்றனர்.

மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?

அதிபதப்படுத்தப்பட்ட உணவுகள் பொட்டலங்க ளில் அடைத்து விற்கப்படுகின்றன. இவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கின்றன. இவற்றை சமையல றையில் பத்திரப்படுத்துவதும் எளிது. விரைவில் இதை உணவாக சமைத்துவிட முடியும். எந்த விதமான முயற்சியும் இல்லாமல் சில நிமிடங்களில் உணவு தயாராகி விடும். இந்தச் சுவைக்கு பழக்கப்பட்ட குழந்தைகள் அவற்றையே விரும்பி உண்கிறார்கள்.  திரைப்படம் பார்த்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ  இவர்கள் உண்ணும்போது அதிக அளவில் உட்கொள்கிறார்கள். பெற்றோரும் காலை நேரங்களில் குழந்தைகளை துரித கதியில் பள்ளிக்கு அனுப்ப இவற்றைப் பேருபாயமாகக் கருதுகிறார்கள்.

கொடிய பின் விளைவுகள்

இன்றைய உணவுப் பழக்கத்தினாலும் உடற் பயிற்சியின்மையாலும் 2050 இல் உலகின் மக்கள்தொகையில் 30-40 சதவீத மக்கள் உடற்பரு மனால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது. இதனால் நீரிழிவு, பக்க வாதம், இருதய நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. நோய்கள் அதிகரிக்கும்போது அதற்கு ஏற்றவாறு மருத்து வத்திலும் தேவைகள் அதிகரிக்கும். அதனால் அரசின் செலவுகளும் கூடும். உடல் வலிமையே உழைக்கும் வர்க்கத்தின் வலிமை. தொழிலாளர்கள் அவசரத்தின் காரணமாகவும் பணிப்பளுவின் காரணமாகவும் முதலாளிகள் நேரத்தை மிச்சப்படுத்த நெருக்கடி கொ டுப்பதாலும் அதிபதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்ண நேர்கிறது. இதனால்  அவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கின்றது.

அப்பொழுது அதிக லாபத்திற்காக தரம் குறைந்த பொருட்களைப் பயன்படுத்துவதுடன் சுவையை மேம்படுத்த செயற்கை சுவையூட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். விவசாயி களிடமிருந்து இவர்கள் பெறும் மூலப்பொருட்க ளுக்குப் போதிய தொகையை பன்னாட்டு நிறுவனங் கள் கொடுப்பதில்லை. இதைப்பற்றி ‘உணவுப் போர்கள்’ என்ற நூலில் வார்டன் பெல்லோ குறிப்பி டுகின்றார்.  லத்தீன் அமெரிக்காவில் ஒன்றிணைந்த பழ நிறுவனம் (United Fruit Compay) வாழைப்பழ உற்பத்தியை வைத்து பல நாடுகளின் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இதனை எதிர்த்து சே குவேராவும் பிடல் காஸ்ட்ரோவும் கியூபப் புரட்சிக்கு பின் அந்த நிறுவனத்தின் சொத்துக் களை நாட்டுடைமையாக்கினர். அத்துடன் பல்வேறு நிலசீர்த்திருத்தங்களை மேற்கொண்டு விவசாயிகள் நலனுக்காகப் போராடினர். ஆனால் எல்லா நாடுக ளிலும் இது போன்ற புரட்சிகர மாற்றங்கள் நடக்க வில்லை.  பன்னாட்டு குளிர்பானங்கள் பிரபலமான பின் பல இந்திய குளிர்பானங்கள் மறைந்துவிட்டன. வெளி நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தால் இந்திய தேயிலை நிறுவனங்கள் பல நிதி நெருக்கடியால் காணாமல் போய்விட்டன.

நமது கடமை

தக்கை உணவுகள் குறித்தும், அதிபதப்படுத்தப் பட்ட உணவுகள் குறித்தும் நாம் கல்விக்கூடங்களில் மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தொடர்பு சாதனங்கள் இந்தப் பணியைச் செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் தொலைக்காட்சிகளில் நெடுந்தொடர்களுக்கான பெரும்பாலான விளம்பரங்கள் இந்த நிறுவனங்கள் மூலம்தான் வருகின்றன.  நாம் அன்றாட வாழ்வில் இயற்கைப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.  நம் நாட்டில் பல நிறுவ னங்கள் நல்ல விலைக்கு பொருட்களை விவசாயிகளி டமிருந்து கொள்முதல் செய்து விற்கின்றனர்.

அவை பல்வேறு கூட்டுறவு சங்கங்களாக செயல்படுகின்றன. அது போன்ற நிறுவனங்களை ஆதரிப்போம். துரித உணவுகளையும் அதிபதப்படுத்தப்பட்ட உணவுக ளையும் தவிர்ப்போம். அதிகப் புரதச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வோம். கொழுப்பையும் சுத்தி கரிக்கப்பட்ட சர்க்கரையையும் தவிர்ப்போம். நாட்டுக் காய்கறிகளையும் பழங்களையும் உண்போம். மைதாவைத் தவிர்ப்போம். பல கூட்டுறவு சங்கங்கள் அமைய வழிவகுப்போம்.  பல ஐரோப்பிய  நாடுகளைப்போல் கொழுப்பு வரியை நம் நாட்டில் அமல்படுத்த வேண்டும். நாம் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். நகரங்களில் புதிய பூங்காக்களும் உடற்பயிற்சிக் கூடங்களும் அமைக்கப்பட வேண்டும். ஆரோக்கிய மான நாட்டை உருவாக்கும் கடமை நம்முடையது. அதற்கு வழி வகுப்போம்!!