articles

img

வினேஷ் போகத் தகுதி நீக்கம் - நீதிக்கும் அநீதிக்குமான போர் - ஜக்மதி சங்வான்

பாரீஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் வெளிப்படுத்திய இணை யற்ற சக்திதான் அவருக்கு தங்கப் பதக்கம் மறுக்கப்பட்ட பொழுது தேசத்தில் முதலில் வேதனையும் பின்னர் வரலாறு காணாத அளவுக்கு அவருக்கு ஆதரவும் உருவாகக் காரணமாக அமைந்தது. அவர் சந்தித்த தடை களும் காயங்களும் கொஞ்ச நஞ்சமல்ல! பதக்கம் மறுப்பு காரணமாக எழுந்துள்ள பொது மக்களின் கோபம் அவ்வளவு எளிதில் குறையாது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் பல வீரர்களில் ஒருவரல்ல போகத்! அவருக்கு மறுக்கப்பட்டதும் மற்றதைப்போல இன்னொரு தங்கப் பதக்கம் அல்ல! 50 கிலோ பிரிவில் வெறும் 100 கிராம் காரணமாக அவர் சந்தித்த தகுதி இழப்பு ஒரு குறிப்பிட்ட சூழலில் நடந்துள்ளது. அதனை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். இந்திய அரசாங்கம் இதனைக் கையாண்ட விதம்தான் மக்களிடையே கோபத்தை விளைவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து வீரர்கள் குறித்தும் நாம் பெருமை கொள்கிறோம். குறிப்பாக பெண் வீரர்கள் நமது சொத்து. அவர்கள் பதக்கம் வென்றா லும் இல்லாவிட்டாலும் நமது பெருமைக்குரிய வர்கள்தான்! எனினும் பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெறுவதற்கு முன்பே வினேஷ் போகத் பலருக்கும் விசேடமானவர்தான்! அவரது துணிச்சலும் உறுதியும் தகுதி நீக்கத் துக்கு பின்னர் பல மடங்கு அதிகரித்துள்ளது. 

தடைகள் தாண்டிய வெற்றிகள்

வினேஷ் போகத் ஒரு முக்கிய செயலின் களநாயகியாக உள்ளார். பரவலாக நடப்பது போல, அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே  ஈடுபடும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் அனைத்து விளையாட்டு வீராங்கனைகளின் களநாயகியாக போகத் உருவெடுத்துள்ளார். அவரும் பதக்கங்கள் வென்ற அவரது சக வீரர்களும் தமது எதிர்காலத்தை பலிகொடுத்து அபரிமிதமான துணிவை வெளிப்படுத்தி, மல்யுத்த சம்மேள னத்தின் குரூரமான முகத்தை அம்பலப்படுத்தி னர். பாஜகவில் செல்வாக்கு மிகுந்த நாடாளு மன்ற உறுப்பினர்களில் ஒருவரும் மல்யுத்த சம்மேளனத்தின் உதவி தலைவராகவும் இருந்த  பிரிஜ் பூஷணை நேருக்கு நேராக எதிர்கொண்டனர். அவர் மீது பாலியல் துன்பங்கள் மற்றும் பாலியல் தாக்குதல் குறித்து குற்றம் சாட்டினர். ஜந்தர் மந்தரில் அவர்கள் நடத்திய போராட்டங்கள் பல மாதர் அமைப்புகள்/ விவசாய அமைப்புகள்/ குடிமை அமைப்புகள் என பலதரப்பட்ட பிரிவினரை ஈர்த்தது. தில்லி காவல்துறை மிக தாமதமாக, அதுவும் உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கு பின்னர்தான் பிரிஜ் பூஷண் மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது. 

ஆனால் இந்த நீண்ட போராட்டம் அதன்  விலையை கேட்டது. ஆம்! வினேஷ் போகத்து டன் போராட்டத்தில் ஈடுபட்ட சக வீரங்கணை யான சாக்சி மாலிக் மல்யுத்த போட்டிகளி லிருந்தே விலகுவதாக அறிவிக்க வேண்டிய சூழல் உருவானது.  மோசமான குற்றவாளியை ஆள்வோர் பாதுகாத்ததால் வெறுப்புற்ற சாக்சி இந்த வேதனையான முடிவெடுத்தார். போகத் ஒவ்வொரு கட்டத்திலும் மிக மோசமான, பாதக சூழல்களை சந்தித்தார். எனினும் அவர் தனது அசாத்திய அர்ப்பணிப்பையும் திறமையையும் வெளிப்படுத்தினார். ஒலிம்பிக்கில் ஒரே நாளில் வெவ்வேறு தேசங்களின் மூன்று வீரங்கனைகளை போட்டிகளில் தோற்கடித்தார். அதில் கடந்த 62 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்காத உலக சாம்பியனான ஜப்பானின் யுவி சுசாகியும் ஒருவர் என்பது சாதாரண வெற்றி அல்ல! யுவி சுசாகிதான் தங்கம் வெல்வார் என ஜப்பான் மக்கள் மட்டுமல்ல; உலக மல்யுத்த ரசிகர்களும் மதிப்பிட்டனர். அதனை மாற்றி வரலாறு படைத்தார் போகத். இந்த வெற்றி அளித்த மாபெரும் உற்சாகம் சில மணி நேரங்களிலேயே வேதனையாக மாறியது. தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போகத் 100 கிராம் கூடுதல் எடை காரணமாக போட்டியில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார். 

இந்த நிகழ்வுகள் காரணமாக இந்திய மக்களின் மனதில் பல கேள்விகள் எழுந்துள் ளன. அந்த கேள்விகளுக்கு திருப்திகரமான பதில்கள் தேவை. முதலில் குறிப்பிட வேண்டியது என்னெவெனில், ஒலிம்பிக் சுற்றுக்கு தகுதி பெற்றவுடன் வினேஷ் போகத் ஒரு அச்சத்தை வெளியிட்டார். தன்னை ஊக்க மருந்து உட்கொள்ள வைத்து போட்டியிலிருந்து வெளியேற்ற சில முயற்சிகள் நடக்கும் ஆபத்து  உள்ளதாக குறிப்பிட்டார். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பா.ஜ.க. தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் இது நடக்கலாம் என பயந்தார். 

பா.ஜ.க.வின் குரூரங்கள்

கங்கனா ரனாவத் போன்றவர்கள் பொதுவெளியில் எவ்வித தயக்கமும் வெட்கமு மின்றி போகத்துக்கு எதிராக வெளிபடுத்திய கருத்துகள், பா.ஜ.க. தலைவர்கள் எந்த  அளவுக்கு போகத்துக்கு எதிராக வன்மம்  கொண்டிருந்தனர் என்பதை வெளிப்படுத்தி யது. மேலும் போகத்துக்கு பதக்கம் மறுக்கப்பட்டதால் தேசம் ழுழுதும் வேதனை யில் இருந்த பொழுது; அதற்கு காரணம் யார் என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும் என மக்கள் கொதித்து கொண்டிருந்த பொழுது  விளையாட்டுத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் போகத்தின் பயிற்சிக்கு அரசாங்கம் எவ்வளவு செலவு செய்தது எனும் பட்டியலை வெளியிட்டது மிகவும் மோசமான செயல்.

மிக பிரபலமான பல ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஜோர்டன் பரொஃப்ஸ், போட்டிகள் இரு  நாட்களுக்கு பதிலாக ஒரு நாளாக மாற்றப் பட்டுள்ளதால் உடல் எடை உட்பட அனைத்து விதிகளில் உடனடியாக மாற்றம் கொன்டு வர வேண்டும் என ஆழமாக வற்புறுத்தியுள்ளார். போகத்துக்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கமாவது தர வேண்டும் எனவும் கோரி யுள்ளார். அது எப்படி இருந்தாலும் விளை யாட்டு இன்னும் முடிவடையவில்லை. பல சுற்றுகள் நடக்க வேண்டிய தேவை உள்ளது. 

வினேஷ்! நீங்கள் சில அற்ப விதிகள் காரணமாக போட்டியை இழந்திருக்கலாம்! ஆனால் இது, அநீதியான நிர்வாகத்துக்கும் நீதியை நிலைநாட்ட விரும்புவோருக்கும் இடையே நடக்கும் போர் ஆகும். நாம் ஒன்றுபட்டு போராடி நீதியை நிலைநாட்டுவோம்! வெல்வோம்!! நீதி, சுயமரியாதை, சமத்துவம் அடிப்படையிலான ஒரு சூழலை உருவாக்க நாம் அனைவரும் செயல்படுவோம்!

ஜக்மதி சங்வான்
உதவி தலைவர், 
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்
இந்தர்ஜித் சிங்
உதவி தலைவர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில் : அ.அன்வர் உசேன்