articles

img

கூரை வீடுகளாயிருந்தால் கொளுத்தியிருப்பார்கள்... - பெ.சண்முகம்

“இப்பெல்லாம் யார் சார் சாதி பாக்குறா” என்று அப்பாவியாய் கேட்கும் பலரை அவ்வப்போது சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சாதி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதே உண்மை! சிலர் பகிரங்க மாக வெளிப்படுத்திக் கொள்ளலாம். சிலர் தங்களின் குடும்ப விஷேசங்களின் போது வெளிப்படுத்திக் கொள்ளலாம். பலர் சங்கமாக ஒன்று திரண்டு, அடி மட்டத்தில் உள்ள சாதிகளை அடக்கி ஒடுக்குவதன் மூலம், அடித்து நொறுக்குவதன் மூலமும் வெளிப் படுத்தலாம். சாதி ரத்தத்திலேயே கலந்திருக்கிறது. அதை சுத்திகரிப்பு செய்வது அவ்வளவு சுலபமான தல்ல. தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது. ஆனால் 73ஆவது குடியரசு தினத்தை நாடு கொண்டாடிய நிலையில், சாதி வெறி தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. 

திருவண்ணாமலை மாவட்டம் வீரளூர் கிராமத்தில் இடைப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களால் தாக்குத லுக்கும், பாதிப்புகளுக்கும் உள்ளான அருந்ததியர் சமூக மக்களை சந்திப்பதற்காக 29.01.2022 அன்று சென்றிருந்தோம். அருந்ததியர் சமூக மக்கள் மீதான தாக்குதலை கேள்விப்பட்டு உடனடியாக அந்த களத்திற்குச் சென்றவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவருமான டி.கே.வெங்கடேசன். இதை மக்கள் அனைவருமே குறிப்பிட்டனர். பிறகு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் செல்வம் தலைமையில் தோழர்கள் குழு சென்று பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். அடுத்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் ஆகியோர் சென்று வந்துள்ளனர். 

அநேகமாக சம்பவம் நடந்த ஜனவரி 16ஆம் தேதி துவங்கி தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சென்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகவே நாங்கள் சென்றோம். 16.01.2022 அன்று அந்தக் கொடுமைகள் அனைத்தும் அரங் கேற்றப்பட்டன. வீடுகளை கல்வீசித் தாக்கி சேதப் படுத்துவது, இரு சக்கர வாகனங்களை கடப்பாரை மற்றும் கருங்கற்களைக் கொண்டு அடித்து நொறுக்கி பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்துவது, வீடுகளுக்குள் புகுந்து கொஞ்ச நஞ்சமிருந்த பணம், நகை ஆகியவற்றை சூறையாடுவது என்று ஆயி ரத்திற்கு மேற்பட்டோர் சுமார் இரண்டு மணிநேரம் அனைத்து தெருக்களிலும் சுற்றிச் சுழன்று வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். அதன் பாதிப்பை நேரில் பார்த்தோம். மக்களிடமும் கேட்டறிந்தோம்.

காழ்ப்புணர்ச்சியால் நடந்த திட்டமிட்ட தாக்குதல்

அக்கிராமத்தில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. 4 பேர் மட்டும் தான் அரசு ஊழியர்கள். அருந்ததியர் உள் ஒதுக்கீடு அமலுக்கு வந்து 13 ஆண்டுகள் கடந்த பிறகும் அந்த கிராமத்தை பொறுத்தவரை அது இன்னமும் பல னளிக்கவில்லை. இப்போது தான் ஒரு சிலர் பட்டப்படிப்பு படிக்கத் துவங்கியுள்ளனர். 7 குடும்பங்களுக்கு மட்டும் தான் சொந்த நிலமிருக்கிறது. மீதி அனைத்துக் குடும் பங்களும் கூலி வேலை செய்துதான் பிழைத்து வரு கின்றன. சாதிய மேலாதிக்கம், சாதிய அடக்குமுறை காரணமாக பெரும்பாலும் உள்ளூரில் யாரும் வேலைக்கு செல்வதில்லை. பெங்களூர், சென்னை, திருப்பூர் போன்ற நகரங்களுக்குத் தான் வேலைக்குச் சென்று சிறுகச் சிறுகச் சேர்த்து தாங்கள் வாழ்வ தற்கான வீட்டை கட்டியுள்ளனர். இரண்டு வீடுகள் மட்டுமே கூரைவீடு. மற்ற அனைத்தும் கட்டிடங்கள் தான். அநேகமாக வேறெங்கும் அருந்ததியர் கிராமங்க ளில் பெரும்பாலான வீடுகள் இந்த மாதிரி இருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த அளவுக்கு கடுமையான உழைப்பாளிகளாகவும், நிலவுடமையாளர்களைச் சாராமலும் வாழ்கின்றனர். 

இந்தப் பொருளாதார வளர்ச்சியும், இத்தகைய வாழ்க்கையுமே இடைப்பட்ட சாதியினரை காழ்ப்பு ணர்ச்சிக்கும், ஆத்திரமூட்டுவதற்கும் போதுமானதாய் இருந்திருக்கிறது. சந்தர்ப்பம் வாய்த்த போது, பொரு ளாதார ரீதியாக அம்மக்களுக்கு மீளமுடியாத பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் திட்டமிட்டு அந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அந்தக் கிராமத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் வன்னியர் சாதியினர் தான். அக்னிச் சட்டி பனியனை அணிந்திருந்த இளைஞர்கள் தான் இந்த தாக்குதலை முன்னின்று நடத்தியுள்ளனர். ஆண்ட பரம்பரை என்று வெற்றுப் பெருமை பேசி அவ்விளை ஞர்களுக்கு சாதி வெறியூட்டி இத்தகைய தவறான செயல்களுக்கு திட்டமிட்டே பயன்படுத்திக் கொள்கின்ற அயோக்கியத்தனத்தை இனி அனுமதிக்கக் கூடாது. வீரளூரில் அருந்ததியர் மக்கள் மீது என்றால், இன்னொரு கிராமத்தில் பறையர் அல்லது பள்ளர் சமூக மக்கள் மீது தாக்குதல். கூரை வீடுகளாக இருந்திருந்தால் கொளுத்தியிருப்பார்கள். அதற்கு வாய்ப்பில்லாத காரணத்தால் தான் அடித்து உடைப்பது, இடிப்பது போன்ற முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள்.

செத்தால் எல்லோருமே பிணம் தான். நாங்கள் எங்கள் சாதி பிணத்தை எடுத்துச் செல்லும் வழியாக தாழ்ந்த சாதியான உங்கள் பிணத்தையும் எடுத்துச் செல்வதா? எவ்வளவு ஆணவம்? என்ன திமிர்? எங்கள் சாதியின் கௌரவம் என்னாவது? இதை அனுமதிக்கக் கூடாது என்பது தான் ஆண்ட பரம்பரைகள் சொல்லும் நியாயம்.  அரசுக்குச் சொந்தமான பொதுச் சாலையில், பிணத்தை எடுத்துச் செல்வதற்கு எவரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அரசு அதிகாரிகள் கூட்டம் நடத்தி அனுமதியும் கொடுத்திருக்கின்றனர். இதை ஏற்க மறுத்தவர்கள் மீது சட்டப்படி அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருந்திருக்கும். மாறாக, எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டதும், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் அனுசரணையாக நடந்து கொண்டுள்ள னர் என்பதும் வெளிப்படையானது. ஏனென்றால் காவல்துறையினர் அங்கிருந்த போது தான் இரண்டு மணிநேரத் தாக்குதலும் நடத்திருக்கிறது. தாக்கிய வர்களை தடுக்க எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை என்பதே அம்மக்களின் குற்றச்சாட்டு. 

சாதியுணர்வு  மேலோங்கிய காவல்துறை

காவல்துறையினரிடமும் சாதியுணர்வு மேலோங்கி இருந்ததால் தான் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அல்லது காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய நிலை இன்னமும் தொடர்கிறது என்பதற்கு, 230 பேர் மீது பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இன்றைய தேதிவரை (4.02.2022) 30 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப் படாத குடும்பம் என்று ஒன்று கூட இல்லை. ஆனால், 41 பேருக்கு மட்டுமே இதுவரை வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி முதல் தவணை நிவாரணம் கொடுக்கப் பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு கூட அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஏறத்தாழ சம்பவம் நடந்து 20 நாட்கள் ஆன பிறகும் இதுதான் நிலைமை என்றால் மாவட்ட நிர்வாகம் பாரபட்ச மில்லாமல் தான் செயல்படுகிறது என்று எப்படி நம்ப முடியும்? 

காவல்துறை விசாரணையும் முழுமையாக இல்லாததால் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றப்பிரி வுகளும் மேம்போக்கானதாகவே இருக்கிறது. எனவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015-இன் அடிப்படை யில் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். சம் பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பார பட்சமின்றி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.  சொத்துக்களை இழந்தவர்கள், தாக்குதலில் காயம டைந்தவர்கள், மனரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், சாதி  ரீதியாக இழிவுபடுத்தப்பட்டவர்கள் என அனைவருக்கும் சட்டப்படியான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படை யில் ஒவ்வொரு கிராமத்திலும் அனைத்து சாதி யினருக்குமான  “சமத்துவ மயானம்” என்பதை சட்டப் படியானதாக அரசு அறிவித்திட வேண்டும். இதை மீறுபவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய வேறுபாடு, பாகுபாடு, தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்கவும், சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு, உதவிகள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்றவற்றை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். சாதி வெறியைத் தூண்டுபவர்கள் மீது உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். சாதிய  ரீதியான தாக்குதலுக்கு எதி ரான ஆட்சியாளர்களின் உறுதியான நடவடிக்கையே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நம்பிக்கையை யும், பாதுகாப்பு உணர்வையும் தரும். அதை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும். ஜனநாயக சக்தி களும் இத்தகைய குற்றங்களுக்கு எதிராக ஒன்று பட்டுச் செயல்பட முன்வர வேண்டும்.

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்