articles

img

அந்திமக் காலத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாயில் வாழ முடியுமா? - பே.பேயத்தேவன்

தமிழகத்தில் சத்துணவு திட்டம் 1982இல் துவங் கப்பட்டு இன்று உலக அளவில் சிறந்த திட்ட மாக விளங்கி வருகின்ற இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டிய ஒரு சில விஷயங்கள். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்  திட்டம் உருவாக் கும் முன்பு நன்கொடை வாங்கி திட்டத்தினை நடத்தி பின் அதனை சட்டமன்ற நிதி ஒதுக்கீட்டின் அடிப்படை யில் தொடர்ந்து சிறப்பாக நடத்தினார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மேலும் திட்டத்தை மெரு கூட்டினார். அதைத்தொடர்ந்து வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டத்தில் பலவகை உணவு வகைகளை அறிமுகப்படுத்தி இன்று சிறந்த திட்டமாக இருக்கின்றது என்பது மிகையாகாது.

சத்துணவு திட்டத்தை உலகம் போற்றும் திட்டமாக உருவாக்கியது அரசாக இருந்தாலும் கூட அந்த அள விற்கு சத்துணவு ஊழியர்களின் உழைப்பு என்பது குறிப்பிடத்தக்க விஷயம். குறைந்த ஊதியத்தை பெற்று வாழ்க்கை நடத்த முடியாத சூழலிலும் கூட நம்மை நம்பி ஒப்படைத்த குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஊதியத்தில் ஒரு பகுதியை கூட  செலவு செய்து சத்துணவு திட்டம் முறையாக குழந்தை களுக்கு சென்றடைய உதவி புரிந்தது சத்துணவு ஊழியர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் மேல்நிலைக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி என படித்துவிட்டு வேலை யில்லாத் திண்டாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பணியில் சேர்ந்த ஊழியர்களின் நிலை 39 ஆண்டுக ளுக்கு பின்னும் கூட அரசால் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை கூட எட்டாத நிலையே தொடர்கிறது. வெந்த ணலில் வெந்து செத்துக் கொண்டிருக்கின்ற சமையலர், உதவியாளர்களின் நிலை மிகவும் கொடியது. வறுமையில் வாடிக் கொண்டு குறைந்தபட்ச ஊதியம் 3 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் வரை மட்டுமே கிடைக் கின்றது. இது எந்த அரசுத் துறையிலும் இல்லாத ஒரு நிலை என்பது அரசுக்கும் தெரியும்; பொது மக்க ளுக்கும் தெரியும்.

அதேபோல் இந்த திட்டத்தில் வாக்கு வங்கிகளை உருவாக்கிக் கொடுத்த தங்களின் நிலை எப்போது மாறும் என்ற எதிர்பார்ப்பில் தினந்தோறும் ஏங்கு கின்ற சத்துணவு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்ற பின்பு  அமைப்பாளர்களுக்கு ஒரு லட்சமும் சமையலர், உதவியாளர்களுக்கு 50 ஆயிரமும் ஒட்டுமொத்த தொகையாக வழங்கப்படுகிறது. இதுவும் ஓய்வு பெற்ற வுடன் கிடைப்பதில்லை. அதேபோல் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்க ளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வேண்டும் எனக் கேட்டு பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்பும்கூட இன்றைக்கு சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2,000 மட்டுமே  வழங்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஓய்வுபெற்ற ஊழியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவம் பார்க்க முடியுமா? அல்லது மூன்று வேளை உணவு உண்ண முடியுமா? இதை சம்பந்தப்பட்ட அதி காரிகளும் ஆட்சியாளர்களும் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிக்க வேண்டும்.

அதேபோல் தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கு மேல் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. அமைப்பா ளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மையங்களை கூடுதல் பொறுப்பு என்ற அடிப்படையில் கவனித்து வர வேண்டிய நிலை உள்ளது. இன்றைய விலைவாசியில் வழங்கப்படு கின்ற ஊதியத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாத நிலையில் காய்கறி விலை பன்மடங்கு உயர்ந்து விட்டது. பல்வகை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு அனுமதித்துள்ள தொகையில் காய்கறிகள் வாங்கி முறையான சத்துணவு வழங்க இயலாத நிலையில் அதனை ஈடுகட்டும் வகையில் ஊழி யர்களின் ஒரு பகுதி ஊதியத்தை செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதேபோல் இன்றைக்கு நவீன சமையலறை என்ற  அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி சத்துணவு மையங்களில் எரிவாயு அடுப்பு பொருத் தப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டரை வைத்து சமையல் செய்ய அதிகாரிகள் கட்டாயப்படுத்தும் அவசியத்தில் இன்றைக்கு 700 குழந்தைகளுக்கு ஒரு சிலிண்டரில் சமையல் செய்ய வேண்டுமென்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் சமையல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 700 குழந்தைகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள தொகை ரூபாய் 460 மட்டுமே ஆனால் இன்றைய சிலிண்டரின் விலை ரூ. 1000 தாண்டி உள்ளது. ஒரு சிலிண்டருக்கு ரூ.500க்கும் மேல் அமைப்பாளர்களின் ஊதியத்திலிருந்து செலவு செய்து சமையல் செய்ய வேண்டிய கட்டாய நிலை அரசு அதிகாரிகளால் ஏற்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கை களை வலியுறுத்தி தொடர்ச்சியாக எண்ணிலடங்காத நினைவூட்டல் இயக்கங்களும் போராட்டங்களும் நடத்தியும் கூட இதுவரை எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் அவர்கள் நடத்திய போராட்டங்கள் எனக்கு தெரியும். அந்த அடிப்படையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சத்து ணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி ஊதிய உயர்வு வழங்கப்படும். குறைந்தபட்ச ஓய்வூதிய கோரிக்கையை முன் வைத்துள்ளார்கள். அதையும் நிறைவேற்றி தருவேன் எனவும், ஒட்டு மொத்த தொகை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமைய லர், உதவியாளர்களுக்கு 3 லட்சமும் உயர்த்தி வழங்கப் படும். காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்கள்.

ஆனால் இன்றைய நிலையில் அரசிடம் நிதி நெருக் கடி உள்ளது என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தி ருந்தாலும் ஒரு லட்சம் சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பு ஓய்வூதியமாக வழங்கும் ரூ.2000த்தை வைத்து வாழ்க்கை நடத்த முடியாத அந்திம காலத்தில் உள்ள ஊழியர்களின் நிலையை கருத்தில் எடுத்துக் கொண்டும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க முதல்வர் பரிசீலனை செய்து சட்ட மன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த சத்துணவு ஊழி யர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரும் விதமாக 12.04.2022 அன்று தமிழகம் முழுவதும் ஒன்றிய ஆணையாளர்கள் மூலம் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்திடவும், 19.04.2022 அன்று சென்னையில் 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தி டவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

கட்டுரையாளர் : மாநில துணைத் தலைவர், 
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்,