தேசியக் கல்வி கொள்கை 2020 அமலாக் த்தின் அடிப்படையில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள், அரசு, நிகர்நிலை மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிக ளில் உள்ள இளநிலை மாணவர் சேர்க்கைக்கான CUET (பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு) 2022-23 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. CU-CET (மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு) என்பது 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சிறப்புச் சட்டத்தின் படி 11 மத்திய பல்கலைக் கழகங்களுக்கும், பின் திரு வாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழ கத்தையும் இணைத்து 12 மத்திய பல்கலைக்கழ கங்களுக்கும் ஒரே தேர்வு நடந்து வந்தது.
2019 முதல் மொத்தம் உள்ள 54 மத்திய பல்கலைக் கழகங்களில் 45 மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் இத்தேர்வை விரிவுபடுத்துவதாக அறிவித்தது. கடந்தாண்டு அறிவிப்பில் இதில் மாநில பல்கலைக் கழகங்கள் மற்றும் நிகர் நிலை உள்ளிட்ட எந்த பல்க லைக்கழகமும், கல்லூரியும் விருப்பப்பட்டால் இந்த தேர்வில் இணையலாம் என அறிவித்தது. மேலும் CU-CET மத்திய பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத்தேர்வை CUET ஆக பல்கலைக்கழகங்க ளுக்கான பொது நுழைவுத்தேர்வாக அறிவித்து கடந்த ஏப்ரல் 4அன்று அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. இதற்கான நோக்கமாக இளநிலை மாணவர் சேர்க் கைக்காக தேசம் முழுவதும் ஒரே நேரத்தில் அல்லது ஒரே நாளில் பலதரப்பட்ட தேர்வை எழுத வேண்டி யுள்ளதை தவிர்க்கவும், ஒரு மாணவர் ஒரு துறையில் சேர ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் தனித்தனி யாக நுழைவுத்தேர்வு எழுத வேண்டியுள்ளதை தவிர்ப்ப தற்காகவும், அரசு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான தனிதனியான சேர்க்கை நடைமுறையை தவிர்த்து ஒரே நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கையை எளிமைப்படுத்தப் போவ தாகவும், செலவை குறைக்கப் போவதாகவும் கூறி யுள்ளது.
நீட் தேர்வு நடத்துவதற்கு சொன்ன அதே உண் மைக்கு புறம்பான கூற்றை இதற்கும் கூறியுள்ளது. கியூட் தேர்வை மேல்நிலை மற்றும் உயர்நிலைக் கல்வி யோடும், தனியார்மயம், மையப்படுத்துதல், இணைய வழிக் கல்வி மற்றும் கூட்டாட்சி தத்துவ சீரழிப்பு ஆகிய வற்றோடு இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. UDISE+ (Unified District Information System for Education Plus) மூலம் ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு வழங்கியுள்ள தகவல்படி 2019-20ல் இந்தியா முழுவதும் 2.6 கோடி மாணவர்கள் மேல் நிலை பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு படிக்கிறார்கள். இந்த எண்ணிக்கையானது இதே வயதை ஒத்த அதாவது, ஒட்டுமொத்தமாக 16, 17 வயதுடையவர்களில் 51.4% மட்டுமே மேல்நிலையில் பயிலுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. முழுமையான மேல்நிலை கல்வியே இந்தியாவில் இன்னும் சாத்தியப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அமைச்சகத்திற்கு உட்பட்ட AISHE (All India Survey of Higher Education) அறிக்கை தகவலின்படி 2019-20 கல்வியாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 3.06 கோடி மாணவர்கள் இளநிலை படிப்பில் பயின்று வருகிறார்கள். இதில் 79.1% பேர் கல்லூரியிலும், 17% பேர் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அலகில் உள்ள நிறுவனங்களில் இளநிலை படிப்பில் பயின்று வருகிறார் கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களில் கணிசமான எண்ணிக்கையில் நேரடியாக பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் ஏறக்குறைய 1.3 கோடி மாண வர்கள் பள்ளிக்கல்வி முடித்துவிட்டு 70 இலட்சம் மாண வர்கள் மட்டுமே உயர்கல்வியில் இணைகிறார்கள் எனவும், இதில் அகில இந்திய கல்வி முறையான CBSEயில் 15 இலட்சம் மாணவர்களும், ICSEயில் ஒரு இலட்சத்திற்கு குறைவான மாணவர்களும் பயில்வது போக மீதமுள்ள மாணவர்கள் பல்வேறு மாநில கல்வி திட்டம் மற்றும் அதற்கு ஒப்பான போர்டில் பயில்கிறார்கள் என கூறுகிறது. மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாநில அரசால் நிர்ணயிக்கப்படும் கல்வித் திட்டம் (Curriculum) பின்பற்றப்படுவதால் உயர்கல்விக்கு ஏற்ப மேல்நிலை கல்வி வடிவமைப்பையும், மேல் நிலைக் கல்விக்கு ஏற்றாற்போல் உயர்கல்வி திட்டமும் வடிவமைக்கப்படுகிறது. இத்திட்டமிடல் 1976 வரை முழுமையாக மாநில அரசு கையிலிருந்தாலும் அதன்பிறகு கல்வி ஒத்திசைவு பட்டியலுக்கு சென்ற பிறகும் ஓரளவு மாநில அரசாலேயே திட்டமிடப்பட்டு வருகிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வும் உயர் கல்விக்கு தேவையான வகையிலேயே தேர்வு முறை வகுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் தவிர அனைத்து உயர் கல்விச் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. பெரும் பாலான மாநிலங்களிலும் தொழிற்கல்வி உள்ளிட்டு மேல்நிலை இறுதி வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது. ஒருசில மாநிலங்கள் மட்டுமே தொழிற்கல்வி, அறிவியல் துறை போன்ற படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்தினாலும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு மாற்றாக நடைபெறுவதில்லை. மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என நாம் சொல்லும் அதே நேரத்தில் மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, ஜிப்மர் போன்ற தேசிய கல்வி நிறுவனங்கள் சேர்க்கையில் தனது பல்கலைக்கழக தன்மைக்கு ஏற்ப நுழைவு தேர்வு அவசியப்படுகிறது. மாநில பல்கலைக்கழகத்தி லும் சில பாடங்களுக்கு நுழைவுத் தேர்வு தேவைப்படுகி றது எனும் போது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் ணையும் வெயிடேஜ் கணக்கிட வேண்டும் என்ற நடை முறையுள்ளது.
ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு தனித் தன்மை உள்ளது, பாடப்பிரிவுகள் உள்ளது, கற்றல்-கற்பித்தல் முறை உள்ளது. இந்த பன்முகத்தன்மை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தேவையான மாற்றத்தை இப்பல்கலைக்கழகங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்வது, வளர்ச்சியை நோக்கிய திட்ட மிடல் அவசியமாகிறது. ஆனால் ஒன்றிய அரசு மத்திய பல்கலைக்கழகம் முதல் மாநில பல்கலைக் கழகம் வரை ஒரே மாதிரியான தேர்வு மூலம் தனது காவி கார்ப்பரேட் கல்விக் கொள்கை மூலம் பன்முகத் தன்மையை அழிக்க துடிக்கிறது. தேசியக் கல்விக் கொள்கை NEP2020, கடந்த பிப்ரவரியில் வெளியிட்ட NHEQF உயர்கல்வி கட்டமைப்பு வரைவும், நவ தாராளமய அடிப்படையிலான முதலாளித்துவ வர்க்க கல்வி திட்டமிடலின்படி கல்வியை பணம் படைத்த வற்கான பண்டமாகவும், இட ஒதுக்கீட்டை ஒழித்து உயர் சாதி வகுப்பினருக்கான கல்வியாகவும் மாற்றப்பார்க் கிறது. உழைக்கும் வர்க்கத்தினரும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினரும் கல்வியிலிருந்து தூக்கியெ றியப்பட்டு சனாதன மனுவாத கொள்கையின்படி குலத் தொழில் அல்லது உடல் உழைப்புத் தொழிலுக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது. உயர்கல்வி நிறுவனங்கள் தேவையில்லை எனவும், சிறப்புத் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் அரசு நிறுவனங்கள் இருந்தால் போதுமானது என்கிறது. மற்ற உயர்கல்வி நிறுவ னங்களை வசதிபடைத்தவர்கள் பயிலும் வகையில் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறது.
உயர்கல்வி பயில்வோரில் 2014-15 கல்வியாண்டு முதல் 2019-20 கல்வியாண்டு வரை ஐந்தாண்டுகளில் 12.8% மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.5% மட்டுமே உயர்ந்துள்ளது. இதே 2012-13 முதல் 2014-15 வரையிலான மூன்று கல்வியாண்டுகளில் 13.7% உயர்ந்துள்ளது. ஒப்பீட்டளவில் உயர்கல்வி பயில் வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலை யில் 12 ஆண்டுகள் பயின்று தேர்வாகி கல்லூரி சேர வரும் மாணவர்களை ஒரே நுழைவுத்தேர்வு என அச்சுறுத்து வது மேலும் எண்ணிக்கையை பன்மடங்கு குறைக்கவே செய்யும். மேல் நிலைக் கல்வி முடித்த மாணவர்களில் 50% மட்டுமே உயர் கல்வியில் இணைகிறார்கள் என்ப தற்கு போதிய இடங்கள் இல்லாததும் ஒரு அடிப்படை யான காரணமாகும். கடந்த இருபது ஆண்டுகளில் கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு கல்விக்கூடங்களின் எண்ணிக்கை உயரவில்லை. இடங்களின் எண்ணிக்கையும் கூடுதலாகவில்லை. பேராசிரியர்கள் எண்ணிக்கை, வகுப்பறைகள், உட் கட்டமைப்பு வசதி எதுவும் கூடுதலாக்கவில்லை. ஜேஎன்யு போன்ற மத்திய பல்கலைக்கழகத்தில் 90% இடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைக் கப்பட்டுள்ளன. கலைத் துறை சார்ந்த படிப்புகள் திட்ட மிட்டு பல்வீனமாக்கப்பட்டு வருகின்றன. தேசியக்கல்வி கொள்கையானது கலைத் துறை சார்ந்த படிப்பே தனியாக தேவையில்லை என்கிறது. தொழிற்கல்வி யோடு ஒரு இணை படிப்பாக இணைத்துவிட கூறியுள் ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி)யில் கல்விக்கான ஒதுக்கீட்டைக் குறைப்பதோடு கல்வி செலவீனங்களை மாநில அரசிடம் தள்ளிவிட திட்ட மிட்டுள்ளது.
கியூட் தேர்வானது, CBT (Computer Based Test) முறையில் முழுவதும் கணினிமயப்படுத்தப்பட்ட தேர்வாகும். கேள்விகள் MCQ (Multiple Choice Questions) முறையில் கேட்கப்படும். அதாவது கேட்கப் பட்டுள்ள கேள்விக்கு நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்பதாகும். இது மாணவர்க ளின் முழுமையான மதிப்பீடாகாது. பன்னிரண்டாம் வகுப்பில் கணிதத் துறை மாணவர், கேட்கப்படும் கேள்விக்கு பல்வேறு கணித கணக்கீட்டு முறையில் விரிவாக விளக்கி பதிலில் மட்டும் சிறு தவறு ஏற்பட்டா லும் பதிலை நோக்கிய அவர் படிநிலை விளக்கத்திற்கு மதிப்பெண் வழங்கப்படும். இது போல் மாணவரின் தர்க்கம், ஆதாரம் காண்பித்தல், ஒப்பிடுதல், பகுப்பாய்வு செய்தல், உளவியல் அனைத்தையும் இந்தப் புதிய முறை தூக்கி எறிந்துவிடுகிறது. மாண வர்களும் பதிலை மட்டும் மொந்தையாக கூறும் ஆற்ற லற்ற மாணவர்களாக்கப்படுவார்கள். பதிலை விரிவாக தெரிந்து கொள்ள அல்லது விளக்க அவசியமில்லை. மேலும் நுழைவுத் தேர்வுகான கல்வியாக மாறும் போது மேல்நிலைக்கல்வியும் உயிரற்ற கூடாக மாறிவிடும்.
நீட் தேர்வுக்கு போல் கியூட் தேர்வுக்கும் தனியார் கோச்சிங் மாபியா கும்பல் கொள்ளை அதிகமாகும். தனியார் பள்ளிகள் நேரடியாக நுழைவுத் தேர்வுக்கான வகுப்புகளும் அதற்கான கட்டணமும் வசூலிக்கும். ஏற்கனவே இந்தியாவில் மேல்நிலைப் பள்ளியில் 40.7% மாணவர்கள் தனியாரிலும், 36.3% மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளியிலும் பயின்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை இனி வரும் காலத்தில் மேலும் அதி கரிக்கும். உயர்கல்வியிலும் இதே விகிதமே உள்ளது. 1976இல் கல்வியை ஒத்திசைவு பட்டியலுக்கு கொண்டு சென்ற பின் இத்தகைய தனியார் கல்விக்கூடங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. மேலும் கல்வியை மையப்படுத்தும் போது 80%-90% கல்வி நிறுவனங்கள் தனியார் கல்விக்கூடமாக மாறும். கியூட், நீட் போன்ற தேர்வுகளை நடத்தும் NTA (National Testing Agency) தேசிய தேர்வு முகமை குளறுபடிகள், ஊழல் மலிந்து காணப்படுகிறது. கடந்தாண்டு ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக் கழகத்திற்கான நுழைவு தேர்வில் விடைப் பட்டியலை முழுமையாக வெளியிடவில்லை. வெளியிட்ட விடைக ளிலுள்ள தவறான பதிலுக்கு முறையீடு செய்தும் தவறை களையவில்லை. இது சிறு எடுத்துக்காட்டு தான். இதுபோல் பல பிரச்சனைகள் இத்தேர்வு முகமை யில் உள்ளது. கேள்விகளை முன்கூட்டியே வெளியிடு தல், ஆள்மாறாட்டம், சில தனியார் கோச்சிங் நிறுவனத் தோடு அதிகாரிகள் மூலம் நேரடியாக புளுபிரிண்ட்லீக் செய்வது என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இளநிலை பாடங்களுக்கான நுழைவு தேர்வு ACT/SAT யை 1,600 கல்வி நிலையங்கள் தேவையில்லை என மறுத்து மேல்நிலை தேர்வு மதிப்பெண் அடிப்படை யிலேயே சேர்க்கை நடத்தப்போவதாக அறிவித்துள் ளது. ஒட்டுமொத்த அமெரிக்காவில் மூன்றில் இரண்டு அதாவது 2,330 இளநிலை கல்வி வழங்கு நிறுவனம் நுழைவுத் தேர்வு அவசியமில்லை எனவும், இத்தேர்வு முறையானது அவர்கள் கல்விச் சூழலோடு பொருந்தி வரவில்லை என்றும், நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற்றவர்கள் அதற்கேற்ற கல்வி தரத்தோடு இல்லை எனக் கூறி இத்தேர்வு முறையே ஒரு கண்மூடித் தனமான ஏற்பாடு என தெரிவித்துள்ளனர். நீட் வரிசையில் கியூட் தேர்வையும் கடுமையாக மாணவர்கள் எதிர்த்தாக வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதோடு, அனைத்து பல்கலைக் கழகங்களையும் சுயேச்சையாக தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படச் செய்வதும், மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளவும் அனுமதி வேண்டும். மேலும் கூடுதல் நிதி ஒதுக்குதல், பேராசிரியர்கள், வகுப்பறைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். இந்தியாவில் உயர்கல்வி வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல இத்தகைய நடவடிக்கையே அவசியமாகும்.
கட்டுரையாளர் : மத்தியக்குழு உறுப்பினர், இந்திய மாணவர் சங்கம்