இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் துவக்கப் படும் போது, ‘எல்லோருக்கும் வேலை’ என்ற முழக்கத்தை முன் வைத்தது. அதெப்படி சாத்தியம் என்ற கேள்வி அமைப்பை நோக்கி துரித கதியில் ஏவப்பட்டது. சங்கம் சளைக்காமல் பதில் சொன்னது, அதற்கான கொள்கை உருவாக்குவது. சமூகத்தை சமப்படுத்துவது. எதுவுமற்ற தொழிலாளர் மற்றும் விவசாயக் கூலிகளுக்கு நிலம் வழங்குவது, சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வது என அடுக்கிய போது, அப்படியானால், இப்போது இல்லை என எகத்தாளம் பேசினர். டி.ஒய்.எப்.ஐ விடவில்லை. படித்த, படிக்காத, திறன் பெற்ற, திறன் குறைந்த, ஆண் அல்லது பெண் என்ற பாகுபாடுகளை கடந்து, பெரும் பிரச்சாரத்தை முன் எடுத்துப் போராடி வருகிறது.
மாநிலப் பிரச்சாரங்கள்
1978 குமரி, கோவை ஆகிய இரு முனைகளில் இருந்து தோழர்கள் என். நன்மாறன், கே.சி.கருணா கரன் ஆகியோர் தலைமையில் அணிவகுத்த சைக்கிள் பிரச்சாரம், எம்.ஜி.ஆர் தலைமையில் இருந்த அரசை அசைத்தது. வேலையில்லா கால நிவாரணம் முதல் முறையாக தமிழ்நாட்டில் அறிமுகம் ஆனது. அடுத்து கோவையில் முடிந்த 6 வது மாநில மாநாட்டு அறைகூவலின்படி, 1992 ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஒரு பயணம் அதே குமரி, கோவையில் இருந்து, தோழர்கள் டி.ரவீந்திரன் மற்றும் ஏ.பாக்கியம் தலை மையில் துவங்கியது. பழனியில் இருந்து என். பாண்டி தலைமையிலும், தேனியில் இருந்து டி.ஏ. இளங் கோவன் தலைமையிலும் துணை பிரச்சாரங்களும் நடைபெற்றன. அப்போது தமிழ்நாட்டில் ராமசந்திரா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற போராட்டம் வீரியமாக நடந்து, கைது, அடக்கு முறைகள் அரங்கேறி வந்த நேரம். சைக்கிள் பிரச்சாரப் பயணம், போராட்ட அனலை காட்டுத் தீயாக பரவச் செய்தது. தமிழக அரசியல் கட்சிகள் ஒரு சேர பந்த் போராட்டம் நடத்தும் அளவிற்கான அழுத்தத்தை, மாணவர் போராட்டமும், வாலிபர் பிரச்சாரமும் அளித்தது என்றால் மிகையல்ல.
1999 தமிழ்நாட்டில் தாராளமய பொருளாதாரக் கொள்கையின் தாக்கம் தீவிரமாகி, தனியார்மயம், வேலைக்கு ஆள் எடுக்க தடை, போன்ற தாக்குதல் அரங்கேறி, சாதிய மோதல்களையும் விசிறி விட்ட, முதலாளித்துவத்தின் வளர்ச்சி மேலோங்கிய காலமாக இருந்தது. கோவை மாநகரில் மத வன் முறை குண்டுகளாக வெடித்துக்கொண்டிருந்தது. இளை ஞர்களின் வேலைக்கான பிழைப்பு சாதனங்களை, முத லாளிகளுக்கு தாரை வார்க்கும் அரசுகள், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை, தங்களின் சாதிய, மத பெருமிதங்களுக்குள் சிறைப்படுத்தும் சதிகளை செய்தது. அனுமதிக்க முடியாது என்ற முழக்கத்து டன், நான்கு எல்லைகளில் இருந்து, இருசக்கர வாகன பிரச்சாரத்தை வாலிபர் இயக்கம் திருச்சியை நோக்கி அணிவகுக்க செய்தது. தோழர்கள் என். குணசேகரன், கோவையிலிருந்தும், எஸ்.கே. மகேந்திரன் குமரியில் இருந்தும், சி. திருவேட்டை சென்னையில் இருந்தும், இ.சங்கர் காஞ்சிபுரத்தில் இருந்தும் புறப்பட்ட பய ணங்களுக்கு தலைமையேற்றனர்.
2008ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் விழுப்புரம் நகரில் டி.ஒய்.எப்.ஐ யின் 12 வது மாநில மாநாடு, எழுச்சியோடு நடந்தது. டிசம்பர் மாதம் தமிழகத்தில் வேலைக்கான பிரச்சாரம் மற்றும் போராட்ட நட வடிக்கைகள் என அறைகூவல் அமைந்தது. அக் டோபரில் உலக முதலாளித்துவம், திவாலாகி, அமெ ரிக்கா அம்பலப் பட்டு நின்றது. முதலாளித்துவம் சமூக கொடுமைகளுக்கு தீர்வல்ல, என்பதை வாலிபர் இயக்கம் தீர்க்கமாக, முன் வைத்து போராடிய காலம். திவாலான வங்கிக்கு மாற்று, பொதுத்துறை வங்கிகள், திவாலான காப்பீடு நிறுவனங்களுக்கு மாற்று பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் என்பதை அறுதியிட்டு பேசும் வாய்ப்புகள் அதிகரித்தது. இந்தியாவில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வேலைக்கு மாநில அரசுகளும் ஆள் எடுக்கக் கூடாது, நிதி சிக்கனம் முக்கியம், என சுற்றறிக்கை அனுப்பி, இளைஞர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருந்தது. இந்த பின்னணியில் டி.ஒய்.எப்.ஐ மாநாட்டு அறைகூவல், சைக்கிள் பிரச்சாரமாக ஆர்ப்ப ரித்தது. குமரி, கோவை, ராமேஸ்வரம் ஆகிய மூன்று எல்லைகளில் இருந்து சென்னை நோக்கி 14 நாட்கள் பிரச்சாரம், ஒவ்வொரு குழுவும் 1000 கி.மீ என பயணித் தது. தோழர்கள், எஸ். கண்ணன், எஸ்.ஜி.ரமேஷ் பாபு, ஆர். வேல்முருகன் ஆகியோர் தலைமையேற்ற னர். நிறைவு நாள்களில் அன்றைய முதல்வர் கலைஞர், முரசொலியில் பிரச்சார கோரிக்கைகளுக்கு விளக்கம ளித்தது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அதைத் தொடர்ந்து 2012-இல் எட்டு எல்லைகளில் இருந்து திருச்சியை நோக்கி நடைபயண பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை, புதுச்சேரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கோவை, குமரி, தேனி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்து தோழர்கள் ஆர். வேல்முருகன், எஸ். முத்துக்கண்ணன், எஸ். பாலா, இல. சண்முகசுந்தரம், எம். செந்தில், பிரபா கரன் மற்றும் ஏ.ஆர்.பாபு, ஸ்டாலின் ஆகிய தோழர்கள் தலைமையேற்று வழிநடத்தினர். 1994-இல் ஜெயலலிதா ஆட்சி வேலையில்லா கால நிவாரணத்தை ரத்து செய்தது. தொடர்ந்து 12 ஆண்டுகள் நடத்திய போராட்டம், 2006ஆம் ஆண்டு கலைஞர் முதல்வ ராக இருந்தார். எஸ்.கே. மகேந்திரன், எஸ். கண்ணன், டி.பிரகாஷ், எஸ்.ஜி. ரமேஷ்பாபு மற்றும் ஆர்.வேல் முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து விடுத்த வேண்டு கோளின் போது, அடுத்த வாரம் தாக்கல் செய்யப் படும் நிதிநிலை அறிக்கையில் இது இடம் பெற ஆவண செய்கிறேன் என்றார். அதுபடி அறிவிப்பும் வந்தது.
பதற்றங்களைத் தணித்த பிரச்சாரங்கள்
எல்லாக் காலங்களிலும், சாதியின் பெயரில் ஒருவரை ஒடுக்குவது, வன்முறை மூலம் அதிகாரத்தை நிலைநிறுத்த முயற்சிப்பது, மதரீதியிலான வன்முறை, அபகரிப்பு, பாலியல் பலாத்காரம் என சமூகத்தை, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு ஆதிக்கம் செலுத்து கிறது. சமூகத்தை பிரித்து வைத்து மூலதனத்தை குவித்துக் கொண்ட நிலபிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்பு, இளைஞர்களின் வாழ்வை, கனவை, லட்சியத்தை அவமதிக்கிறது. இல்லை விடமாட்டோம், எங்கள் உரிமை, கல்வி பெறுவது, வேலை பெறுவது, வாழ்வுரிமையை மனித உரிமையை பாதுகாத்துக் கொள்வது, என்பதை நிலைநாட்ட தீவிர பங்களிப்பை இளைஞர் இயக்கங்கள் மேற்கொண்டுள்ளன. அந்த பணியை தமிழக வாலிபர் இயக்கமும் தொடர்ந்து முன் எடுத்து வருகிறது.
சேதுகால்வாய் திட்டம் 2005 ல் துவங்கிய போது, அதை நீதிமன்றத்தின் துணை கொண்டு நிறுத்தியது ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவாரக் கூட்டம். ராமர் பாலம் என, அறிவியலுக்கு புறம்பாக முன்வைத்தது ஆர்.எஸ்.எஸ். நாசா ஆய்வுகூடப் புகைப்படங்கள் என மக்களை திசைதிருப்பிய போது, டி.ஒய்.எப்.ஐ இராமேஸ் வரத்தை மையப்படுத்தி, ஒரு பிரச்சாரத்தை நடத்தியது. 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சைக்கிள் மற்றும் வேன் என பிரச்சாரம் அமைந்தது. தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மதுரை மற்றும் இராமநாத புரம் ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி எழுச்சி மிக்க ஒன்றாக பிரச்சாரம் நடந்தது. தோழர்கள் எஸ். கே. மகேந்திரன், எஸ். கண்ணன், எஸ்.ஜி. ரமேஷ் பாபு மற்றும் ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமையில், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய நகரங்களிலிருந்து இராமேஸ்வரம் நோக்கிச் சென்று, இராமேஸ்வரத்தில் எழுச்சி மிக்க பொதுக்கூட்டத்துட னும் நிறைவு பெற்றது.
அதேபோல் 1995-இல் கொடியங்குளம் தாக்குதல், தென் மாவட்டங்களில் மோதல் அதிகரிப்பு உருவான போது, வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தார் துவங்கி, நெல்லை மாநகரம் வரை நடந்த நடைபயணப் பிரச்சாரம் குறிப்பிடத்தக்கது. அடுத்து, 1998 சாதிக் கலவரங்களுக்கும், தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரிப்பிற்கும், வேலையின்மையும், ஆதிக்க உணர்வுகளும் காரணம் என்பதை டி.ஒய்.எப்.ஐ முன் வைத்தது. அது போலவே நீதிபதி மோகன் தலை மையிலான ஆய்வு குழுவும் குறிப்பிட்டது. மேற்படி சமூக ஒடுக்குமுறை கைவிடப்பட்டு ஜனநாயக எண்ணம் வளரவும், வேலைவாய்ப்பு அதிகரிக்கவும் சமூக நட வடிக்கை தேவை என்பதை முன் வைத்து, திருநெல் வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டக்களில் நடந்த மேற்படி சமூக பிரச்சனையை முன்வைத்து தமிழக அரசின் கவனத்தை ஈர்த்தது. திருவில்லிப்புத்தூரில் எழுச்சி மிக்க நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர்கள் எஸ்.கே.மகேந்திரன், என். குணசேகரன், பா.விக்ரமன், கே.பி.பெருமாள், அ.சேவியர், கே.ஜி.பாஸ்கரன் ஆகியோர் தலைமையேற்றனர்.
‘வேண்டாம் சாதிய மோதல், வேண்டும் வேலை’ என்ற முழக்கத்துடன், 1998 நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி, நடந்த சாதிய மோதலை கட்டுப்படுத்தவும், தனி தொகுதி, தலித் மக்களுக்கான வாக்குரிமை ஆகிய வற்றை பாதுகாக்கவுமான பிரச்சாரம் கடலூர் மாவட் டத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாவட்ட பிரச்சனை என கருதாமல் சமூக பிரச்சனையில் வேலையின்மை உருவாக்கும் தாக்கம் என்பதை மைய கருவாக கொண்டு பிரச்சாரம் வெற்றி பெற்றது. தோழர்கள் என். குணசேகரன், எஸ். கே. மகேந்திரன், எம்.ஜெய சீலன், எஸ்.ஜி.ரமேஷ் பாபு உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று வழிநடத்தினர். அதேபோல் 1998-இல், நாடாளுமன்றத் தேர்தல், மத மோதல், குண்டு வெடிப்பு காரணங்களால் கோவை பெரும் பதற்றத்திற்குள்ளானது. வணிகம், தொழில் அனைத்தும் முடங்கி வேலைவாய்ப்பு பெரும் கேள்விக் குரியதானது. கேரளம், தமிழ்நாட்டின் பல பகுதியில் இருந்து வேலைக்காக கோவையில் அடைக்கலம் புகுந்தோர் அதிகம். ஆனால் இந்துத்துவ சங் பரிவார் அமைப்புகளின் பிரச்சாரம், பெரும் பாதிப்பை உரு வாக்கியது. அமைதியான, மோதலற்ற, வேலை மற்றும் வளர்ச்சிக்கான கோவை, என்ற முழக்கத்துடன் நடை பயணம் மாநகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. தோழர்கள் என்.குணசேகரன், யு.கே. சிவஞானம், வி.ராமமூர்த்தி, ஆர்.வேலுச்சாமி ஆகியோர் வழி நடத்தினர்.
கடல் அலையுடன் போட்டியிட்ட சி.சி.ஏ.யு
1990 பிப்ரவரியில் உருவான அமைப்பு சி.சி.ஏ.யு (Campaign Committee Against Unemployment) வேலையின்மைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு. தோழர். ஆர். உமாநாத் அதன் கன்வீனர் பொறுப்பை ஏற்றார். மூன்று மாத ஆயத்த பணிகளைத் தொடர்ந்து நான்கு எல்லைகளில் இருந்து வாகன பிரச்சாரப் பயணம் துவங்கியது. தோழர்கள் கே.ரமணி நீலகிரி குழுவிற்கும், தோழர். ஜி. வீரையன் ராமேஸ்வரம் குழு விற்கும், தோழர். டி.கே.ரங்கராஜன் ஓசூரில் இருந்து புறப்பட்ட குழுவிற்கும், தோழர். ஏ.கே. பத்மனாபன் குமரியில் துவங்கிய குழுவிற்கும் தலைமையேற்றனர். இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயி கள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், காப்பீடு ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் சம்மேளனம், ஆசிரியர் அமைப்புகள் என பத்து அமைப்புகள் கூட்டாக முன்னெ டுத்த மாபெரும் இயக்கம். தோழர். சு.பொ.அகத்திய லிங்கம் எழுதிய பிரசுரம் பல லட்சம் விற்பனையா னது. நிறைவு நாளான ஜூன் 9, மாலை சென்னை அண்ணாசாலை காயிதேமில்லத் பெண்கள் கல்லூரி வாயிலில் இருந்து காட்டாறு போல் அணிவகுத்த பேரணி யும், கடற்கரையில் அலைகளுடன் போட்டியிட்ட எழுச்சி மிக்க பொதுக்கூட்டமும், மறக்க முடியாதது.
வேலை உரிமையை எல்லாக் காலத்திலும் பறிக் கவே ஆட்சியதிகாரமும், முதலாளித்துவமும் முயற்சிக்கிறது. எங்கள் உரிமை எங்கள் பிழைப்பு என்பதை முன் வைத்தே சுரண்டுவோருக்கு எதிராக சமூகம் போராடி வருகிறது. இன்று சூழலும், காலமும் மாறி இருக்க லாம். சுரண்டல் நீடிக்க தான் செய்கிறது. வேலை யின்மை அதற்கு பெரும் தீனியாய் அமைந்துள்ளது.ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார அமைப்புகளும், சாதிய மேலாதிக்க அமைப்புகளும், வேலையில்லா இளைஞர்களை, அடியாள் பட்டாளமாகவே கையாளு கிறது. ஒன்றுபட்ட போராட்டம், இந்த சமூக மற்றும் பொருளாதார ஒடுக்குமுறைகளை வீழ்த்திடும் வலுவான ஆயுதம் என்பதை, உணர்த்தி வருகிறோம். மீண்டும் உணர்த்தும் வகையில் டி.ஒய்.எப்.ஐ நடத்த இருக்கும், திருச்சியை நோக்கி, சென்னை, குமரி, கோவை, புதுச்சேரி ஆகிய நான்கு எல்லைகளில் இருந்து, ஏப்ரல் 21 முதல் மே 1 வரையான சைக்கிள் பிரச்சாரம் வெல்லட்டும். நாம் நடத்துவது பயணங்கள் அல்ல. தலைமுறைகள் பின் தொடர்வதற்கான அழுத்தமான தடங்கள்.
கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர்