articles

img

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் பொதுமக்களின் எதிர்பார்ப்பும் -பெ.ரூபன்  

கும்மிடிப்பூண்டி, டிச.5-
திருவள்ளூர் மாவட்டமானது பேரூராட்சிகள், நகராட்சிகள், கிராமங்கள், நீர் நிலைகள், கனிம வளங்கள், காடுகள் உள்ளன. பழவேற்காடு மீனவர் குப்பங்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் உள்ளடங்கிய ஒரு அருமையான, இயற்கை வளங்கள் நிறைந்த நிலப் பகுதியாகும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 780 வருவாய் கிராமங்கள் 9 வட்டங்கள் மற்றும் மூன்று வருவாய் கோட்டங்கள் உள்ளன. சுமார் 45 லட்சம் பேர் வாழ்கின்றனர். மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

நகர் பகுதிகள்

6 நகராட்சிகளாகவும், 8  பேரூராட்சி கள், ஒரு மாநகராட்சி ஆகவும் பிரிக்கப்  பட்டு நிர்வாகம் செய்யப்படுகின்றன. இம் மாவட்டத்தில் சுமார் 3512 தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தத் தரவு இந்திய தொழில்களின் 2022-23 ஆண்டு கணக்கீட்டு அமைப்பில் தெரிவித்துள்ளது.

 மூன்று ஆறுகள்

கொசஸ்தலை, ஆரணி, கூவம் ஆகிய மூன்று ஆறுகளும் பக்கிங்ஹாம் கால்வாயும் இம் மாவட்டத்தில் பாய்கின்றன. இந்தியாவில் 17 வகை தொழிற்சாலைகள் மிகுந்த மாசுபாட்டினை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தவை என ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வரையறை  செய்துள்ளது.

இவற்றுள் சாராய வடிகால் தொழிற்சாலைகள், மருந்து ,  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்  இரும்பு எஃகு தொழிற்சாலைகள் , அனல் மின் நிலையங்கள்,  காகிதம் மற்றும் காகித கூழ்   ஆகிய ஆறு வகை தொழிற்சாலைகள் நம் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த ஆறு வகை தொழிற்சாலை வரிசைகளில் நம் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மிக மோசமாக மாசு ஏற்படுத்தக் கூடிய விதத்தில் தங்கு தடை இன்றி இயங்கி வருகின்றன.

மந்தகதியில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சட்டங்கள்

இந்தியாவில் மாசுக்கட்டுப் பாட்டுக்கான 200க்கும் மேற்பட்ட சட்டங்கள் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிக்கலும், மந்தத்தன்மை மற்றும் தப்பித்துக் கொள்ளும் போக்கும் இருந்து வருகின்றன. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை செயல்பாட்டுத் திறனில் மந்தநிலை காணப்படுகிறது. இதற்கு முதற்காரணம் போதுமான அலுவலர்கள் இல்லாமையே ஆகும். எடுத்துக்காட்டாக கும்மிடிப்பூண்டி பகுதியில் 500 தொழிற்சாலைகள் இருந்த போதிலும் கூட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் 5 பேர் மட்டும் பணியில் இருப்பது வேதனைக்குரிய தாகும்.

ஆட்சியாளர்கள் மற்றும் அதி காரிகளின் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்காததால் கும்மிடிப்பூண்டி பகுதி  மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக மாறியுள்ளது என்பதை தமிழ்நாடு அரசு ஏற்கெனவே சட்ட மன்றத்திலேயே அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

கும்மிடிப்பூண்டியில் மாநாடு

சாதாரண மக்களின் கோரிக்கை களை முன் வைத்தும்,  அரசு,  பொது மக்களுக்கு செய்ய தவறிய வற்றை சுட்டி காட்டுவது, அந்த கோரிக்கைகளை  நிறைவேற்ற தொடர் போராட்டங்கள் மேற்கொள்வது போன்றவற்றை மேலும் முன்னெடுக்க, மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை கிளைகள் தொடங்கி, இடை கமிட்டி மாநாடு கள் முடிந்து,  தற்போது மாவட்ட மாநாடு நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல இடங்கள் சென்னையோடு இணைந்துள்ளது.பொன்னேரி, திரு வள்ளூர், ஊத்துக்கோட்டை போன்ற வட்டங்களில் உள்ள சில ஊராட்சிகளை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் இணைத்து வருகின்றனர். எந்த வசதி வாய்ப்புகளும் ஏற்படுத்தாமல் கிராமங்களை நகராட்சியில் இணைப்பதை கிராம மக்கள் எதிர்க்கின்றனர். காரணம் நகரங்கள் என்றாலும் அதற்குரிய எந்த உள்கட்டுமான வசதியும் இல்லை எனலாம். பல விதமான கடைகள் மட்டும் இருக்கிறது. வாங்கும் சக்தி இல்லை. மற்றபடி அரசு போக்குவரத்து வசதிகள் பெரிய அளவிற்கு இல்லை.

நகரத்தில்  வாழ எந்த  அந்தஸ்தும் இல்லை. பாதுகாப்பான வேலை குடும்ப வருவாய் இல்லாதது, உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் வரி, வீட்டு வரி என எல்லாவற்றையும்  சமாளிக்க முடியாது என்பதால்,  நகரங்களுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். திருவள்ளூரில் மருத்துவ கல்லூரி பிரமாண்டமான கட்டடம் எழுப்ப பட்டுள்ளது. என்றாலும் போதிய அளவிற்கு மருத்துவர்கள், மருந்து மாத்திரைகள் இல்லாததால் சென்னையில் உள்ள மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கும் நிலை தான் உள்ளது. தொழில்நுட்ப ஊழி யர்களை நியமித்து மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை ஆற்ற வேண்டும்.

தஞ்சைக்கு அடுத்தபடியாக நெல் உற்பத்தியில் திருவள்ளூர் மாவட்டம் இருக்கிறது. இதனை தகர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் வெளி வட்ட சாலை கள் அமைக்க திருவள்ளூர் மாவட்  டத்தில் மட்டும் குறைந்தது 10 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு முப்போகம் விளைய கூடிய விவ சாய நிலங்களை அரசாங்கம் கையகப்  படுத்தியுள்ளது. தொழிற்பேட்டை என்ற பெயரில் விளை நிலங்கள் எடுத்து பெரும் முதலாளிகளின் கையில் ஒப்படைக் கின்றனர். விளை நிலங்கள் விட்டு விட்டு தரிசாக கிடக்கும் நிலங்களில் அரசு திட்டங்களை கொண்டு வரலாம்.

அதானி கையில் சிக்கியுள்ள  திருவள்ளூர் மாவட்டம்

6 வழிச் சாலை, இன்னும் பிற வெளிவட்ட சாலைகள் என எல்லாம் கார்ப்பரேட் முதலாளியான அதானி குழுமத்திற்காக அமைக்கப் பவதாக கூறப்படுகிறது. அதானி துறை முகத்திலிருந்து வரும் சரக்கு களை கையாள விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்தி பிர மாண்டமான சாலைகள் அமைக்கப்ப டுகிறது. தற்போது கடலையும் ஆக்கிர மிப்பு செய்துள்ளனர். இதனால் பழவேற்காட்டில் உள்ள மீனவ குடும்பங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. இப்படி எல்லா வகையிலும் அதானி குழுமம் விளை  நிலத்தையும், கடலை யும் ஆக்கிரமித்துள்ளது.இம்மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த வளங்களையும் அதானி பிடியில் சிக்கியுள்ளது. ஆனால் அரசுகளோ வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

கந்து வட்டியால் பெருகும் தற்கொலைகள்

மாவட்டத்தில் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் முறையாக செயல்படாததால் பழங்குடி இன சமூகத்தை சேர்ந்தவர்கள் தனி யார்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். இதனை திருப்பி செலுத்த முடி யாமல், வீட்டுமனை பட்டாக்களை கொடுத்து விட்டு, ஊரை விட்டே வெளியேறி விடுகின்றனர். சிலர் தற்கொலை செய்து மடிகின்றனர். இப்படி இருளர் இன மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

குடிமனை பட்டா 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் குடிமனை பட்டா வேண்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் சாதாரண மக்களுக்கு இன்னும் பட்டா கிடைக்கவில்லை. மனு செய்துள்ள பலர் காலமாகி விட்ட னர். பட்டாவிற்கான பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வரு கிறது. பெல்ட் ஏரியா என்ற தடையை அரசு நீக்க அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்.

அடிக்கடி போக்குவரத்து நெரிசல்

கவரைப்பேட்டையில் கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை யில் மேம்பாலம் அமைக்கும் பணி கள் நீண்ட காலமாக நடை பெற்று வருகிறது. சர்வீஸ் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள தால் மணிக்கு ஒரு தடவை போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த இடத்தை கடக்க மட்டும் மணி கணக்கில் காத்திருக்க வேண்டி யுள்ளது. எனவே சர்வீஸ் சாலையை தரமாக அமைக்க வேண்டும்.

மேற்கண்ட மக்கள் கோரிக்கை களை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட 24 வது மாநாடு டிச 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் கும்மிடிப் பூண்டியில் நடைபெறுகிறது.

தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை

மாவட்டத்தில் தொழிற்சாலைகள் பரவலாக தொடங்கப்படுகிறது. ஆனால் வேலைக்கு உத்தரவாதம் இல்லை. 480 நாட்கள் தொடர்ந்து ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சட்டம் சொல்கிறது. முதலாளிக்கு ஆதரவாக சட்டங்களை மாற்றுகின்றனர்.

ஒன்றிய, மாநில அரசுகளின் இணைந்து நடத்தும் வல்லூர் அனல் மின் நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இப்படி அரசு மற்றும் தனியார் துறைகளிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக,  பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் கவுரவமான ஊதியமின்றி பணிப்பாதுகாப்பும் இல்லாமல் தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர்.

பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தலைமை மருத்துவமனை போன்றவை திருவள்ளூரில் தான் அமைந்துள்ளது. பொது மக்கள் அலுவல் காரணமாக திருவள்ளூருக்கு  அன்றாடம் வந்து செல்ல வேண்டியுள்ளது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பெரியபாளையம், கன்னிகைப்பேர் ஆகிய இடங்களிலிருந்து, மாவட்ட தலைநகரான திருவள்ளூருக்கு செல்ல  அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்காததால்  மக்கள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே  தலைநகருக்கு எல்லா பகுதிகளிலும் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

 

பெ.ரூபன்