articles

img

பொன்மலையின் செங்கொடிப் புரட்சி: நேற்று, இன்று, நாளை!-​​​​​​​எம்.ஜெயசீலன்

திருச்சியின் பொன்மலை - கம்யூனிஸ்ட் இயக் கத்தின் புனிதப் பயிற்சிக் கூடம்! நேரு அரசின் முதல் துப் பாக்கிச்சூட்டை மார்பேற்றி, ரத்த சாட்சிகளை நாட்டிற்கு அர்ப்ப ணித்த வீரப்புதல்வர்களின் மண் இது! 1939-இல் தோழர் பி.பி.ரத்தினத்தின் உன்னத தலை மையில் முதல் கட்சிக் கிளை மலர்ந்தது. கொடூர அடக்கு முறைகளுக்கு மத்தியிலும் தோழர்கள் மாணிக்கவாசகம், கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி என தலைநிமிர்ந்து நின்றனர். காங்கிரஸ் அமைச்சர் டி.எஸ்.எஸ்.ராஜனின் பேரனான தோழர் ராமசாமி, திருச்சி மண்ணின் அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களில் தங்கத் தடம் பதித்தார்.

தொழிலாளர் போராட்டங்களின் தீப்பொறிகள்...

தஞ்சை மண்ணில் விவசாயப் புரட்சி பற்றி எரிந்தபோது, திருச்சி யில் தொழிலாளர் எழுச்சியின் பேரொளி வீசியது! புதுக்கோட்டை நமணசமுத்தி ரம், காவேரி நகர், கரூர், லால்குடி, டால்மியாபுரம் ஆலைகள் - ஒவ்வொன்றும் கம்யூனிஸ்ட்க ளின் போர்க்கொடி பறந்த களங்கள். தோழர் உமாநாத்தின் துணிச்சலான டால்மியாபுரம் உண்ணாவிரதம், தோழர் டி.கே.ரெங்கராஜனின் வீரமிக்க சிம்கோ போராட்டம் - தமிழக முதலமைச்சர்களையே தலை வணங்க வைத்த மகத்தான போர்கள்!

கிராமப்புற மக்களின் கனல் குரல்கள்...

கிராமங்களின் மண்வாசனை யோடு செங்கொடி பறந்தது. பூவா ளூர் குத்தகை விவசாயிகளின் உரிமைக் குரல், பெரம்பலூர் வேப்பந்தட்டையில் ஒலித்த துப்பாக்கிச்சூடு, அன்பில் முதல் காட்டுப்புத்தூர் வரை காவிரிக் கரையில் எழுந்த கூலித் தொழி லாளர்களின் போராட்டங்கள் - இவையெல்லாம் நம் வீர வரலாற்றின் பொன்னேடுகள்! 1952-இல் பணபலம் கொண்ட மிராசுதாரர்களை வீழ்த்தி, எளிய தொழிலாளி அனந்தநம்பி யாரை வெற்றிக் கனியைத் தொட வைத்தது நம் செங்கொடியின் மகத்தான சாதனை!

இன்றைய  புரட்சிப் புயல்...

பாருங்கள்! ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களின் அடிப்படைக் கோ ரிக்கைகளுக்காக போராட்டப் புயல்! ஆயிரக்கணக்கான மக்கள் செங்கொடியின் நிழலில் அணிதிரண்டதை திருச்சி மாவட்டம் கண்டது!

திருவெறும்பூரில் கம்யூனி ஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் ஏ.கே.கோபாலனின் புரட்சி முழக்கத்தைக் கேட்க 1500-க்கும் மேற்பட்ட கட்சிக் குடும்பங்கள் கூடிய வரலாறு நம்முடையது. ஒருகாலத்தில் தோழர் கே.வரதராசன் தனித்து நின்று கம்யூனிசம் விதைத்த சமய புரத்தில் இன்று நூற்றுக் கணக்கான இளம் புரட்சியா ளர்கள் செம்படையாக அணி வகுக்கிறார்கள்!

நம் முன் நிற்கும் சவால்களும், சீற்றமும்...

போராட்டக் களங்கள் பல கண்ட திருச்சி மாநகரின் நான்கு திசைகளும் இன்றைக்கு சாலைகள் சின்னாபின்னம். போக்குவரத்து நெரிசலில் பெரு நகரம் மூச்சுத் திணறல். காவிரி -கொள்ளிடம் பாலங்கள் மக்கள் தேவைக்கு இன்னும் போ தாமை. மாநகராட்சி விரிவாக்கம் என்ற பெயரில் கிராமங்களையும் விவசாயத்தையும் விழுங்கும் முயற்சி! விவசாயத்திற்கு 55 டிஎம்சி தண்ணீர் போதுமென்ற போதும், 100 டிஎம்சி நீர் கடலில் கலப்பு. கொள்ளிடத் தடுப்பணை ஒரு மாதத்திலேயே இடிந்து விழுந்தது - பொறுப்பற்ற நிர்வா கத்தின் கோரமுகம்! மக்க ளின் ஏக்கப் பெருமூச்சுகள் கோபக்கனலாக மாறிக்கொண்டி ருக்கிறது.

எதிர்காலப் புரட்சிக்கான அறைகூவல்...

இத்தகைய பின்னணியில் தான் இன்று (டிச.6) துவங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருச்சி புறநகர் மாவட்ட 24 ஆவது மாநாட்டில் கிராமங்கள் தோறும் புதிய படைத்திரட்டல்! புத்துணர்வும் புரட்சிகர எழுச்சியும் கொண்ட புதிய பாதையில் மார்க்சிஸ்ட்டுகளின் வீறுநடை! பொன்மலை புதல் வர்களின் போராட்டப் பாரம்பரி யத்தை நெஞ்சில் ஏந்தி, புதிய சாதனைகள் படைக்க மாநாடு அறைகூவல் விடுக்கிறது! வர லாறு படைத்த பாதையில் புதிய வரலாறு படைக்க முன்னேறு வோம்!

எம்.ஜெயசீலன்
திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர், சிபிஐ(எம்)