பெண்கள், குழந்தைகள், பட்டியல், பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை!
சட்டமன்றத்தில் நாகை மாலி வலியுறுத்தல்
சென்னை, ஏப். 28 - பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வல்லுறவு, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு எதிரான தீண்டாமை வன்கொடுமை குற்றங்கள் மீது காவல் துறை விரைவான மற்றும் உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக்குழுத் தலைவர் வி.பி. நாகை மாலி வலியுறுத்தினார். தமிழக சட்டப்பேரவையில் திங்களன்று (28.04.2025) நடைபெற்ற காவல்துறை மானியக்கோரிக்கையின் விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றக்குழு தலைவர் வி.பி. நாகை மாலி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பாலியல் வன்முறைகளைத் தடுக்க சிறப்புக் கவனம்
கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா உள்ளிட்டு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை அறவே ஒழித்திட இன்னும் வேகமான நடவடிக்கை எடுத்திட வேண்டும். இதனை தடுக்க தவறும் காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்திட வேண்டும். சிறுமிகள் மீதான பாலி யல் குற்றச்சாட்டுக்கள் குறித்து, புகார் கொடுக்கும் போது போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வதை காவல்துறை யினர் உறுதி செய்திட வேண்டும்.
எஸ்.சி.- எஸ்.டி. வன்கொடுமைகள் மீது உறுதியான நடவடிக்கை வேண்டும்
பட்டியலின மக்கள் மீதான வன்முறை கள், தாக்குதல்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதை காவல்துறை உறுதி செய்திட வேண்டும். இப்படிப்பட்ட வழக்குகளை நீர்த்துப்போகச் செய்து விடக் கூடாது. காவல்துறை இதில் உறுதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பெண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலையங்கள், காவல் அலுவலகங்களில் விசாகா கமிட்டி கட்டாயம் அமைத்திட வேண்டும். பெண் காவலர்களுக்கு பணியிட மாறுதல், பதவி உயர்வு, குடியிருப்பு ஒதுக்கீடு இவற்றில் முன்னுரிமை அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். புகார் தெரிவிக்க காவல்நிலையம் வரும் பொதுமக்கள் உடனான காவல்துறையின ரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எந்தப் புகார் கொடுத்தாலும் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
காவல்துறையில் நிரப்பப்படாத 13 ஆயிரம் பணியிடங்கள்\
சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்துள் ளன. இதனை தடுப்பதற்கான செயல் திறனை அதிகரிக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் காவல்துறைக்கு வழங்கப்பட வேண்டும். போலி இணைய தளங்களை கண்டறிந்து அவைகளை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். மக்களிடம் உரிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். காவல்துறையில் டிஜிபி முதல் காவலர் வரையில் அனுமதிக்கப்பட்ட (Sanctioned Posting) பணியிடங்கள் 1 லட்சத்து 24 ஆயிரத்து 933. இவற்றில் 13 ஆயிரத்து 042 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது, குற்றங்களை தடுப்பதற்கும், குற்ற வாளிகளைப் பிடிப்பதற்கும் பெரும் தடை யாக உள்ளது. காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதோடு, தற்போது மக்கள் தொகைக்கேற்ப காவல் நிலையங்களை யும், கவலர்களையும் கூடுதலாக நியமித்திட வேண்டும். சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி தேவை யற்றது. நேரடியாக உதவி ஆய்வாள ராகவே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு உடனே செயல்படுத்திட வேண்டு மென கேட்டுக் கொள்கிறேன். காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சங்கம் உள்ளது. ஆனால் கடைநிலை காவலர்களுக்கு சங்கம் வைத்துக் கொள்ள உரிமை மறுக்கப்படு கிறது. காவலர்கள் சங்கம் வைத்துக் கொள்ள உரிமை வேண்டும் என்கிற கோரிக்கை காவ லர்கள் மூலமாகவும், சில அரசியல் கட்சி கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு வருகிறது. முதலமைச்சர் இது குறித்து பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பல மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் இருக்கிறது என்பதை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். காவலர்களுக்கு வாரம் ஒருமுறை விடுமுறை அளிக்க அரசாணை வெளி யிடப்பட்டும் இதுவரை அமல்படுத்தப்பட வில்லை. இதனால் கூடுதல் பணிச்சுமை, மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவு களுக்கு காவலர்கள் சென்று விடு கிறார்கள். அதோடு விரும்பத்தகாத நிகழ்வு களும் நடக்கின்றன. எனவே, காவலர் களுக்கு வார விடுமுறை, 8 மணி நேரம் சுழற்சி முறை வேலை, பணியிட மாறுதல், சங்கம் வைக்கும் உரிமை போன்றவைகள் வழங்கிட வேண்டுகிறேன். அதிகரிக்கும் என்கவுண்ட்டர்கள் கவலையளிக்கின்றன. மத்திய காவல் படைகள் மற்றும் பிற மாநிலங்களின் காவலர்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் காவலர்களின் சம்பளம் குறைவு என்பதை தங்கள் கவ னத்திற்கு கொண்டு வருகிறேன். காவலர் களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கடந்த 4 ஆண்டுகளில் என்கவுண்ட்டர் என்பது 19 முறை நடந்துள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை கவலை க்குரிய விஷயமாக நான் பார்க்கிறேன். இதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தீயணைப்புத்துறை தீயணைப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்திட வேண்டும். தீயணைப்பு போலீசாருக்கான குடியிருப்புகளையும் கூடுதலாக்கிட வேண்டும். தொகுதிக்கான கோரிக்கைகள் கந்தர்வக்கோட்டை தொகுதி, கறம்பக்குடியில் பேரூராட்சி அலுவல கத்திற்கு சொந்தமான கட்டடத்தில் தீயணைப்புத்துறை அலுவலகம் செயல்படு கிறது. இந்த அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை கறம்பக்குடி பேரூ ராட்சி நிர்வாகமே ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்த புதிய கட்டடம் கட்டுவதற்கு வேறு பகுதியை தேர்வு செய்துள்ளதாக அதிகாரி கள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் அவசரத்திற்கு தீயணைப்புத்துறை அலுவலகத்தை நாடுவதில் பெரும் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, கறம்பக்குடி பேரூராட்சி பகுதியிலேயே தீயணைப்புத்துறை புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுகிறேன். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டை சட்டமன்ற தொகுதி, கந்தர்வக் கோட்டையில் டி.எஸ்.பி. அலுவலகம் அமைத்திட வேண்டும். கீழ்வேளூர் தொகுதி வேளாங்கண்ணி யில், வேளாங்கண்ணியைச் சுற்றியுள்ள 5 காவல்நிலையங்களை உள்ளடக்கிய டி.எஸ்.பி. சப் - டிவிசன் அமைக்கப்பட வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கை யை நிறைவேற்றித் தர வேண்டுமென முதல் வர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். நாகப்பட்டினம் - ஒரத்தூர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு காவல் அவுட் போஸ்ட் நிறுவப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நாகூர் மற்றும் வெளிப்பாளையம் காவல்நிலையங்களில் பணியாற்றும் காவ லர்களுக்கான பழைய குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து வசிக்க தகுதியற்றவை களாக உள்ளன. இங்கு புதிய கட்டடங்கள் கட்டித் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எனது கீழ்வேளூர் தொகுதியில் வேளாங்கண்ணி தீயணைப்பு நிலையத் திற்கும், கீழ்வேளூர் தீயணைப்புநிலை யத்திற்கும் சொந்தக் கட்டடம் இல்லை. நீண்ட காலமாக இதுகுறித்து அரசின் கவ னத்திற்கு கொண்டு வந்தும் நடவடிக்கை இல்லை. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க தாங்கள் அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வி.பி. நாகை மாலி கூறினார்.