articles

img

பறவைக் கூடு இரகசியங்கள் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

பறவைக் கூடு இரகசியங்கள்

இரவில் தங்குவதற்காக மட்டுமே பறவைகள் கூடு கட்டுகின்றன என்று  பலர் கருதுகின்றனர். ஆனால் இது தவறு. முட்டையிட, அதை அடை காக்க, குஞ்சுகளை பொரிக்க அவை கூடு கட்டுகின்றன. பெரும்பாலானவை காடுகள், மரங்கள், புல்வெளிகளில் இரவு தங்குகின்றன.  எவ்வாறு பறவைகள் கூடு கட்டுகின்றன? ஆண்  பறவையா அல்லது பெண் பறவையா அல்லது இரண்டும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்து கூடு  கட்டுகின்றனவா? எல்லா கூடுகளும் ஒரே அளவி லும் வடிவத்திலும் உள்ளனவா? எத்தகைய பொருட்களை பயன்படுத்தி அவை கூடு கட்டு கின்றன? எல்லாப் பறவைகளும் கூடு கட்டு கின்றனவா? பறவைக் கூட்டின் சிறப்புகளை இந்த கட்டுரையில் நாம் ஆராவோம். பறவை உலகின் சிற்பிகள் பறவை உலகின் சிற்பி தூக்கணாங்குருவி ((Baya Weaver Bird). இது விசித்திரமாக கூடு கட்டும் பறவை. நூற்றுக்கணக்கான இலைகளை அலகால் கிழித்து நார்களை உண்டாக்கி அவற்றை  ஒன்றுசேர்த்து நீண்ட குழல் போல் உள்ள கூட்டை கட்டுகின்றன. உயரமாக வளர்ந்திருக்கும் பெரிய மரங்களில் அடுத்தடுத்து இவற்றின் கூடுகள் தொங்கிக்கொண்டிருக்கும். இவற்றை பார்ப்பதே அழகு. ஆண் பறவை கூடு கட்டுகிறது. கூட்டை பரிசோதித்து, கூடு திருப்தி யானால் பெண் பறவை ஆணுடன் சேர்ந்து வாழ்வைத் தொடங்குகிறது.  உமிழ்நீரை பயன்படுத்தி கூடு கட்டும் பறவையைப் பற்றித் தெரியுமா? அதுதான் நாட்டு உழவாரன் (House swift). பெரும்பாலான நேரங்களில் பறக்க விரும்பும் இதை பல இடங்களில் நம்மால் காணமுடியும். பசை போல் இருக்கும் உமிழ்நீர், இறகுகள், புற்களை ஒட்டவைத்துதான் இவை கூடு கட்டு கின்றன. இதற்காக இவை பழைய கட்டிடங்கள், குகைகள், பாறைகளை தேர்ந்தெடுக்கின்றன. ஒரே  கூட்டை பழுது பார்த்து அதே கூட்டில் வருடக் கணக்கில் வாழ்கின்றன. சொந்த கூடு கட்டுவதில் சோம்பேறித்தனத்தை காட்டும் பறவை குயில். கருங்குயில் அல்லது ஆசிய குயில் (Asian Koel),  மூளைக் காய்ச்சல் பறவை  (Brain-fever Bird) போன்ற குயில்கள் அந்நியப் பறவைகளின் கூடு களில் முட்டையிடுகின்றன.  பல கதைகளிலும் காகம் ஒரு புத்திசாலிப் பறவையாக வர்ணிக்கப்படுகிறது. ஆனால் அதை  ஏமாற்றும் கருங்குஇல்தான் அதை விட புத்தி சாலி. காகம் கூட்டில் இல்லாத சமயம் பார்த்து  பெண் குயில் அதன் கூட்டில் முட்டையிடுகிறது. சொந்த முட்டையென்று தெரியாமல் காகம் குஇல் முட்டையை அடை காத்து பொரிக்கச்செய்யும். சில சமயங்களில் காக்கையின் முட்டைகளை குயில் தட்டி கீழே விழச்செய்யும்.  விழுங்கவும் செய்யும். சொந்தக் குழந்தை என்று தவறாக நினைத்து காகம் குயில் குஞ்சுகளுக்கு உணவூட்டும். ஆனால் குயில் குடும்பத்தைச் சேர்ந்த செம்போத்து (Greater coucal) என்ற பறவை சொந்தமாக கூடு கட்டுகிறது. இது செம்பகம் அல்லது செங்காகம்என்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. நீர்நிலைகளில் மிதந்துகொண்டிருக்கும் நீர்வாழ் தாவரங்களின் மீது கூடு கட்டும் பறவை தாமரைக்கோழி (Jacanas). இவற்றில் ஆண் பறவைகளே கூடு கட்டுகின்றன. முட்டைகளை அடை காக்கின்றன. இவை தாமரை, ஆம்பல் இலைகளின் மீது கூடுகட்டும் இயல்புடையவை.  பறவைக் கூடுகள் பலவிதம் தமிழிலும் மலையாள மொழியிலும் இவை தாமரைக்கோழி என்றே அழைக்கப்படுகிறது. புல்  தண்டுகள், இலைகளை பயன்படுத்தி இவை கூடு  கட்டுகின்றன. இருவாயன்கள் (Hornbills) மரக் கவி கைகளுக்குள் நுழைந்து கூடு கட்டுகின்றன. கூட்டை  அலகால் கொத்திச் செதுக்கி மிருதுவாக்குகின்றன. கூட்டின் வாய்ப்பகுதியை அடைத்துவைத்து அதில் ஒரு நீண்ட துவாரம் இடுகின்றன. கூட்டிற்குள் அடை காக்கும் பெண் பறவைக்கு  தன் அலகை வெளியில் நீட்டி உணவைப் பெறு வதற்கே இந்த வசதி. ஆண் பறவை அடை  காக்கும் பெண் பறவைக்கு உணவு கொடுக்கிறது. உணவுடன் ஆண் பறவை அலகை துவாரத்திற்குள்  நீட்டும். அலகில் சேகரித்து கொண்டு வரும் பழங்கள், பிராணிகளை ஆண் பறவை, கூட்டிற்கு  வெளியில் இருந்தபடி பெண் பறவையின் அலகில்  வைத்து ஊட்டிவிடும். கருஞ்சிவப்பு மரங்கொத்தி (Rufous Woodpecker) என்ற ஒருவகை மரங்கொத்தி எறும்புக் கூட்டிற்குள் கூடு கட்டும் பறவை.  பொதுவாக மரங்கொத்திகள் மரத்தில்தான் கூடு கட்டுகின்றன. ஆனால் இவை எறும்புகளின் வாழி டத்திற்கே சென்று கூடு கட்டுகின்றன. கடிக்கும் இயல்புடைய இந்த எறும்புகள் மரத்தில் பந்து போன்ற வடிவத்தில் கூடு கட்டுகின்றன. இவை அந்த கூட்டிற்குள் தங்கள் கூட்டை கட்டுகின்றன! இவற்றை கேரளாவில் வனப் பகுதிகள், கோயில் காடுகளில் காணலாம். எறும்புக் கூட்டைத்  திறந்து இவை அதற்குள் தங்கள் முட்டைகளை இடுகின்றன. ஆட்காட்டி (Lapwings) என்ற வகை யைச் சேர்ந்த பறவைகள் நிலத்தில் மண்ணைத் தோண்டி குழி உண்டாக்கி அதில் கூடு கட்டு கின்றன. இவை ஆழம் குறைந்த குழிக்குள்  உருண்டை கற்களை பரப்பி அதில் முட்டையிடு கின்றன. முட்டையின் நிறமும் புள்ளிகளும் சுற்றுப்  புறத்தை போல ஒத்திருப்பதால் முட்டைகளை அடையாளம் காண்பது கடினம். சக்கரவர்த்தி பெங்குயின் (Emperor Penguin)  பூமியின் தென் துருவத்தில் வாழ்கின்றன. இவை கூடு கட்டுவதில்லை. வாழும் இடம் முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும்போது அவை எவ்வாறு கூடு கட்டும்? பனியில் முட்டையிட்டால் குளிரில் உறைந்து போகும். என்றாலும் அவை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பெண் பெங்குயின் ஆண் பறவையின் பாதத்தின் மீது முட்டையிடுகிறது. தந்தைப் பறவையின் சூடு பட்டு முட்டை விரிகிறது. பாதத்தில் முட்டை இருப்பதால் ஆண் பறவையால் உணவு தேடி செல்லமுடியாது. கூட்டை கலைக்காதீர்கள்...! அதனால் முட்டை பொரியும் வரை அது விர தம் இருக்கிறது. பொதுவாக பாதுகாப்பான இடங்களில் மட்டுமே பறவைகள் கூடு கட்டு கின்றன. எதிரிகள் எவையும் அருகில் இல்லை என்று உறுதி செய்த பிறகே கூடு நிர்மானம் தொடங்கு கிறது. அடர்ந்த வனங்களுக்குள், பெரிய பெரிய மரங்களில், நீர்நிலைகளில், அவற்றுக்கு நடுவில் அமைந்துள்ள திட்டுகளில், கடற்பாறைகளில், தீவுகளில், தண்ணீர்த் தடங்களில்... இவ்வாறு மனி தர்களும் இரை பிடிப்பவர்களும் எளிதில் செல்ல  முடியாத கடினமான இடங்களில்தான் சாதார ணமாக பறவைகள் கூடு கட்டும் இடங்களைத் தேர்வு செய்கின்றன!  ஆனால் அரிதாக வீடுகளுக்குள்ளும் திறந்த வெளி பகுதிகளிலும் அவை கூடு கட்டுவதுண்டு. இவ்வளவு முன்னெச்சரிக்கைகள் எடுத்து கூடு  கட்டினாலும் பறவைகளின் கூடுகளும் முட்டை களும் குஞ்சுகளும் அழிக்கப்படுவது உண்டு. அவற்றின் இனம் அழிய இது ஒரு காரணம். பறவைக் கூடுகள் பற்றிய ஆய்வுகள் பறவை களை பாதுகாக்க உதவும்! என்றாலும் கவனத்துடன் கூடுகளை ஆராய வேண்டும். ஆராய்பவருக்கும் கூடுகளுக்கும் இடையில் குறிப்பிட்ட தொலைவில் இருந்தே  அவற்றை ஆராயவேண்டும். கூடு, முட்டைகள்,  குஞ்சுகளை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மனிதன் அருகில் இருப்பது தெரிந்தால் சில பறவைகள் கூடுகளை விட்டுவிட்டுப் போய்விடும்! கூட்டில் தொலைவில் இருந்து பைனா குலர், டெலி லென்ஸ் பொருத்தப்பட்ட கேமராவை  பயன்படுத்தி புகைப்படங்கள் எடுத்து கூடுகள் பற்றி  அறிந்துகொள்வதே சிறந்தது!