கிராமங்களில் உள்ளவர்கள் வாழ்வாதரத்தை தேடி பெருநகரங்களை நோக்கி வரு கின்றனர். பஞ்சம் பிழைக்க சென்னைக்கு வரும் மக்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள படும்பாட்டை சொல்லி மாளாது. குறைந்த வாடகையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, குடும்பம் முழு வதும் உழைத்து உயிர் வாழ்கிறது. அற்ப வருமானத்தில் மிச்சம் பிடித்து குட்டையோ, பள்ளமோ, ஏதோ ஒரு புறம்போக்கு இடத்தை வாங்கி அங்கு குடிசை போட்டு வாழ்கின்ற னர். குடும்பமே உழைத்து அந்த இடத்தை மேடாக்கி வாழ்விடமாக மாற்றுகின்றனர்.
சாலை, மின் விளக்கு வசதி பெற, மின் இணைப்பு, பீம் நோட்டிஸ், பட்டா வாங்க பல தலைமுறையாக போராடி வருகின்றனர். இந்த மக்களின் துயரத்தை ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை. இந்த மக்களை ஆசைக்காட்டி அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து ஒட்ட சுரண்டுகின்றனர். ஆனால் இருப்பிடத்தை நிரந்தரப் படுத்த பட்டா மட்டும் தர மறுக்கின்ற னர்.
மறந்துபோன வாக்குறுதிகள்
தேர்தல் நேரத்தில் தரப்படும் வாக்குறுதிகள், அதிகாரத்தில் அமர்ந்தவுடன் மறந்துவிடுகின்றனர். நீர் பிடிப்பு பகுதி, சதுப்பு நிலம், புறம் போக்கு என காரணங்களை அடுக்கு கின்றனர். நீதிமன்ற உத்தரவு என குடியிருப்புகளை இடிக்க புல்டோசர், காவல்துறையுடன் வருவாய்த்துறை படை எடுத்து வருகிறது.
வாழ்விடத்தை பாதுகாக்க போராடினால், ஆள்காட்டிகளை வைத்து, “இது நீர்பிடிப்புதானே? நாம தானே தப்பு பன்னோம் என தொடங்கி, அரசு மாற்று வீடு, பணம் தருகிறது. அதை வாங்கிக் கொள்ள வேண்டும்” என பேச வைத்து மக்களை திசை திருப்பி, போராட்டத்தை சீர்குலைத்து வாழ்வாதாரத்தை சிதைக்கின்றனர். பட்டா கிடைக்காமல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. உழைத்து சம்பாதித்து வாங்கி கட்டிய வீட்டில் நிம்மதியாக உறங்க முடியாமல் திண்டாடுகின்ற னர்.
சென்னையோடு இணைக்கப்பட்ட பகுதிகள்
சென்னை மாநகராட்சிக்குள் லட்சக்கணக்கான குடியிருப்பு களுக்கு பட்டா இல்லை. குடிசை மாற்று வாரியத்தால் அங்கீகரிக்கப் பட்ட (நோட்டிபை) இடங்களில் வசிப்பவர்கள், அத்தகைய இடத்தை வாங்கியவர்களுக்கு பெயர் மாற்றம் செய்துதர மறுக்கின்றனர். விற்பனை பத்திரம் அல்லது பட்டா கொடுக்க மறுக்கின்றனர்.
சென்னை மாநகராட்சியோடு 2011 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், அம்பத்தூர், திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பட்டா இல்லாமல் திரிசங்கு நிலையில் உள்ளனர்.
பட்டாவுக்கு தவிக்கும் மக்கள்
குறிப்பாக, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுகுட்டை, பர்மா காலனி, நீலாங்கரை, ஈஞ்சம் பாக்கம், பெரும்பாக்கம், ஜல்லடி யன்பேட்டை, மேடவாக்கம், பள்ளிக் கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் போன்ற பகுதிகளில் பல தலைமுறை யாக வாழ்கிறவர்களுக்கு பட்டா இல்லை. இந்த இடங்களை மக்கள் ஆக்கிரமித்து குடியேறவில்லை. அவ்வப்போது ஆட்சியில் இருப்ப வர்கள் மடக்கி விற்றதை வாங்கிய மக்கள் பட்டாவிற்காக தவித்து நிற்கின்றனர்.
கண்துடைப்பு அறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வீட்டுமனைப் பட்டா வழங்குவதில் உள்ள இடர்பாடு களுக்கு தீர்வு காண அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலை மையில் மாநில அளவிலான உயர் நிலை குழு அமைக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீட்டுமனைகளுக்கு பட்டாக்கள் வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3.80 லட்சம் பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1.80 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 2 லட்சம் குடும்பத்திற்கு பட்டா விரைந்து வழங்கப்பட உள்ளது என்றார். இந்த அறிவிப்பை வரவேற் கும் அதேநேரத்தில், 2 லட்சம் என்கிற எண்ணிக்கை கண் துடைப்பாக மட்டுமே இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 60% குடியிருப்புகளுக்கு பட்டா கிடையாது. எனவே, அரசு நிலம், மேய்க்கால் புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு, ஓடை புறம்போக்கு, வண்டிப்பாதை புறம்போக்கு, பாட்டை புறம்போக்கு, கழிவேலி, சதுப்பு நில பகுதி, அறநிலைத்துறை இடம், கோவில் நிலம், ரயில்வே நிலம், பாதுகாப்புத்துறை நிலம், பல்கலைக் கழக நிலம், அனாதீனம் என அனைத்து வகையான நிலங்களில் வசிப்போருக் கும், வகைமாற்றம் செய்து இலவச பட்டா வழங்க வேண்டும்.
இதில் நீதிமன்றம் தலையிட்டால் அரசு சிறப்பு முறையீடு செய்து பிரமான பத்திரம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் நில அளவை துறை மூலம் நிலத்தை அளந்து 1970ஆம் ஆண்டு வகைப்படுத்தப்பட்டது. அதன்பிறகான 50 ஆண்டுகாலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் பெரும்பாலும குடியிருப்பு களாக மாறியுள்ளது. எனவே, நில அளவைத்துறை புதிதாக நில அளவை செய்ய வேண்டும். நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். சென்னை மற்றும் புறநகர் மக்களின் பல ஆண்டு போராட்டமாக உள்ள பட்டாவை வழங்க வேண்டும்.
இரா.வேல்முருகன்
தென்சென்னை மாவட்டச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)