கடற்கரையோர மக்களின் வாழ்வாதரத்தை பறிக்கக்கூடாது சென்னை பிரச்சாரத்தில் என்.பாண்டி வலியுறுத்தல்
ஒனறிய பாஜக அரசு, பொதுத்துறைகளை தனியார்மயமாக்கி வருகிறது. தற்போதுள்ள பொதுத்துறைகளில் நிரந்தரப் பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. வேலையின்மை அதிகரித்து இளைஞர்கள் பலர் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் நிலை உருவாகிறது. செயற்கை நுண்ணறிவால் வேலையின்மை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை, தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும். போராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றி, தொழிலாளர்களின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிக்கிறது. சிபிஐ, அமலாக்கப் பிரிவு போன்ற முகமைகளை பயன்படுத்தி 12 எதிர்க்கட்சிகளை பாஜக உடைத்துள்ளது. பாஜகவின் வலையில் அதிமுக வீழ்ந்துள்ளது. வாழ்வாதார பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப பாஜக மத உணர்வை தூண்டுகிறது. எனவே, பாஜக-அதிமுக அணியை மக்கள் நிராகரிக்க வேண்டும். தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோர் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கிக் கொண்டுள்ளது. எனவே, அரசு காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். நீலக்கொடி கடற்கரை திட்டம் என்ற பெயரில் கடற்கரையோர மக்களின் வாழ்வாதரத்தை சிதைக்கக் கூடாது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்த வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்திற்கான நிதியை பெற மாநில அரசுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியும் போராடுகிறது. அதேநேரத்தில் இத்திட்டம் அமலாகும் இடத்தில் உள்ள தவறுகளை, குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்.