articles

img

தொழிலாளர் சட்டங்களை சீர்குலைக்கும் பாஜக அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்! - மு.ஆனந்தன்

தொழிலாளர் சட்டங்களை சீர்குலைக்கும் பாஜக அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்போம்! - மு.ஆனந்தன்

இந்திய வரலாற்றில் முதல் தொழிலாளர் சட்டம் 1882-இல் பிரிட்டிஷ் ஆட்சியில் இயற்றப் பட்டது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் மற்றும் லான்க்ஷயர் நகர பஞ்சாலை பெரு முதலாளிகளின் அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட இச்சட்டம், இந்தியத் தொழிலாளர்களின் நலனுக்காக அல்ல என்றா லும், சுரண்டலின் கடுமையைக் குறைத்தது. இது 7 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்ததுடன், 14 வயதுக் குட்பட்ட சிறுவர்களுக்கு 9 மணி நேர வேலை, வாரத்து க்கு ஒரு நாள் ஓய்வு என்பதைக் கட்டாயமாக்கியது. 1891-இல் பெண்களின் வேலை நேரம் 11 மணி நேரமாக வும், ஆண்களின் வேலை நேரம் 12 மணி நேரமாகவும் குறைக்கப்பட்டது. இன்றைய பாஜக அரசோ வேலை நேரத்தை அதிகப்படுத்தி நாட்டை இரு நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுக்கிறது.

சர்வதேச தொழிலாளர் இயக்கம்

முதல் உலகப் போருக்குப் பின், முன்னணி நாடுக ளில் தொழிற்துறையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.  அதனைச் சரிகட்ட தொழிலாளர்களின் உழைப்பு இயந்திர சக்கரங்களில் நசுக்கப்பட்டது. இதற்கு எதிராக உலகம் விழிக்கத் தொடங்கியது. 1919-இல்  சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முதல் மாநாட்டில், ஒருநாள் வேலை நேரம் 8 மணி அல்லது ஒரு வாரத் தின் வேலை நேரம் 48 மணி என வரையறுக்கப்பட்டது. இந்தியா இதில் கையொப்பமிட்டது. பிரிட்டிஷ் இந்திய அரசு 1921 ஜுலை 14 அன்று இதை ஏற்றுக் கொண்டது. இதன் அடிப்படையில் 1923-இல் வேலையாள் இழப்பீட்டுச் சட்டமும், 1926-இல் தொழிற் சங்கங்கள் சட்டமும் இயற்றப்பட்டன.

சுதந்திர வேள்வியில்  தொழிலாளர் போராட்டங்கள்

இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தில் தொழிலாளர் உரிமைப் போராட்டங்களும் தீவிர மடைந்தன. மும்பையில் 1919 மற்றும் 1920-இல்  பஞ்சாலைத் தொழிலாளர்கள் மாபெரும் போராட் டத்தை நடத்தினர். 1920 அக்டோபர் 31 அன்று மும்பை யில் கம்யூனிஸ்டுகள் தலைமையில் அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு உருவானது. 1925-இல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. தமிழ கத்தில் தோழர்கள் சிங்காரவேலர், ப.ஜீவானந்தம், ஏ.கே.கோபாலன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலை வர்கள் போராட்டங்களை வழிநடத்தினர். “காலுக்கு செருப்புமில்லை, கால் வயிற்றுக்கு கூழும் இல்லை, பாழுக்கு உழைத்தோமடா என் தோழனே, பசையற்றுப் போனோமடா” என்ற ஜீவாவின் உணர்ச்சிமிகு வரிகள் ஆலை வாயில் கூட்டங்களில் ஒலித்தன. 1936-இல் புதுச்சேரி சவானா மில் தொழிலா ளர்கள் 8 மணி நேர வேலைக்காகப் போராடியபோது, பிரெஞ்சு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின் ஆசியா கண்டத்தி லேயே முதலாவதாக அங்கு 8 மணி நேர வேலை அமலானது. 1946-இல் கோவை ஸ்டேண்ஸ் மில் போராட்டத்தில் 11 பேரும், திருச்சி பொன்மலை ரயில்வே தொழிலாளர் போராட்டத்தில் 5 பேரும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். கோவை ரங்கவிலாஸ் மில் போராட்டத்தில் முதலாளிகளால் புனையப்பட்ட சதி வழக்கில் சின்னி யம்பாளையத்தைச் சேர்ந்த ராமையன், ரங்கண் ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகிய 4 தோழர்க ளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு உயிர்த்தியா கம் புரிந்தனர். 1946-இல் திண்டுக்கல் தோல் பதனி டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட ஆண் தொழிலாளர்களும் 8 பெண் தொழிலா ளர்களும் சிறையிலடைக்கப்பட்டனர். அதில் அக்னிஸ் மேரி என்ற பெண் தொழிலாளி சிறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டார்.

போராட்டங்களின்  பயனாக வந்த சட்டங்கள்

ஏராளமான உயிர்ப் பலிகளுக்குப் பின், பிரிட்டிஷ் அரசு பல சட்டங்களை இயற்றியது: முதலாளிகள் பொறுப்புச் சட்டம் (1938), சம்பளம் வழங்கல் சட்டம் (1936), வார விடுமுறை நாட்கள் சட்டம் (1942), தொழிற் சாலைகள் நிலையாணைகள் சட்டம் (1946), தொழிற் தகராறுகள் சட்டம் (1947), தொழிற்சாலைகள் சட்டம் (1948), குறைந்தபட்ச ஊதியச் சட்டம் (1948) மற்றும் தொழிலாளர்கள் மாநில ஈட்டுறுதிச் சட்டம் (1948). 1942 நவம்பர் 27 அன்று தில்லியில் நடை பெற்ற 7-ஆவது இந்திய தொழிலாளர்கள் மாநாட்டில் வேலை நேரம் 14 மணியிலிருந்து 8 மணியாகக் குறைக்கப்பட்டது. 1943-இல் முதலாளிகள் தொழிற் சங்கங்களை அங்கீகரிப்பது கட்டாயமாக்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் தொழிலாளர் அமைச்சராக இருந்தபோது அவரது முயற்சியால் மகப்பேறு பலன்கள், சேமநலநிதி, வருங்கால வைப்புநிதி, குறைந்தபட்ச ஊதியம், அகவிலைப்படி, மிகை உழைப் பிற்கான ஊதியம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு உள்ளிட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சுதந்திர இந்தியாவில்  தொடர்ந்த போராட்டங்கள்

1950-இல் இந்திய அரசமைப்புச் சட்டம் வந்தா லும், தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராட்டங் கள் தொடர்ந்தன. அரசமைப்புச் சட்டத்தின் 39, 41, 42, 43, 43A மற்றும் 54 சட்டப்பிரிவுகள் தொழிலாளர்கள் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமென அரசுக்கு வழிகாட்டியது. ஆனால் தொழிலாளர்கள் மீண்டும் உயிர்த் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. 1950 பிப்ரவரியில் சேலம் ஜவகர் மில் தொழிலா ளர் போராட்டத்தில் ஆறுமுகம், 1957-இல் வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் 5 பேர், 1958-இல் சென்னை துறைமுகத் தொழிலாளர் போராட்டத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். மதுரை ஹார்வி மில் போராட்டத்தையடுத்து புனையப்பட்ட சதி வழக்கில் பாலு என்ற தோழர் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார். 1968-இல் கீழ் வெண்மணியில் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடிய 44 தலித் தொழிலாளர்கள் (20 பெண்கள், 19 குழந்தை கள் உட்பட) பண்ணை முதலாளிகளால் உயிரோடு எரிக்கப்பட்டனர். “கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடி பட்டு செத்தான்” என்ற முழக்கத்தை அறிஞர் அண்ணா வால்பாறைத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து உருவாக்கினார்.

முதல் அகில இந்திய  பொது வேலை நிறுத்தம்

1982 ஜனவரி 19 அன்று நாடு முழுவதும் தொழிலா ளர்கள், விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அது சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் ஆகும். நாகை மாவட்டம் திருமெய்ஞானம் கிராமத்தில் நடந்த போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் இரண்டு விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நாகையில் ஒருவர் உயிரிழந்தார். நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இத்தகைய போராட்டங்களின் விளைவாக, சுதந்திர இந்தியாவில் பல முக்கியச் சட்டங்கள் இயற் றப்பட்டன: தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் (1952), மகப்பேறுப் பயன்கள் சட்டம் (1961), பயிற்சித் தொழிலாளர்கள் சட்டம் (1961), போனஸ் வழங்கல் சட்டம் (1965), ஒப்பந்தத் தொழிலாளர் ஒழிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் (1970), பணிக்கொடை வழங்கல் சட்டம் (1972), சம ஊதியச் சட்டம் (1976) மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் (1986).

சட்டங்களைச் சிதைக்கும்  பாஜக அரசு

2014-இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலி ருந்தே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதற்காக, நூறாண்டு காலம் போராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்களைச் சிதைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா ஊரடங்கை சாக்காக வைத்து, வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியது, ஊதிய வெட்டு, மிகை உழைப்புக் கான ஊதியம் ரத்து போன்ற தொழிலாளர் விரோத நட வடிக்கைகளை மேற்கொண்டது. உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில அரசுகள் பல தொழி லாளர் சட்டங்களை முடக்கி வைத்தன. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008-இல் முறைசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றியது. அதற்கு மாறாக, தற்போதைய மோடி அரசு 44 தொழிலாளர் நலச் சட்டங்களை எல்லாம் ஒன்றாகக் கலக்கி, வெட்டிச் சிதைத்து, நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றியுள்ளது: 1.    ஊதியச் சட்டங்கள் தொகுப்பு – 2019 2.    தொழிற்சாலைகள் சட்டங்கள் தொகுப்பு -2019 3.    சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் தொகுப்பு – 2020 4.    பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச்சூழல் நிபந்தனைகள் தொகுப்பு – 2020 இந்த மாற்றங்கள் 1919-இல் உருவாக்கப்பட்ட சர்வதேச வேலை நேர மாநாட்டு உடன்படிக்கைக்கும், இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரானவை. முத லாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் உரிமைகளை நீர்த்துப் போகச் செய்யும் பாஜக அரசின் சதி ஆகும். நூறாண்டு காலம் போராடி, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிர்ப் பலிகளுக்குப் பின் பெற்ற சட்டங்களை சிதைக்கும் பாஜக அரசின் முயற்சிகளை முறியடிப்போம்! கட்டுரையாளர் : வழக்கறிஞர், கோயம்புத்தூர்.