articles

img

உள்ளூரிலேயே நாடோடிகளான விசைத்தறி தொழிலாளர்கள்- எம்.பிரபாகரன் -

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில், ஆயி ரக்கணக்கான விசைத்தறிகள் இயங்கி வருகிறது. விசைத்தறி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும், லட் சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரு கின்றனர். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு  வரை ஒரு விசைத்தறிக்கூடத்தில் தறி ஓட்டுபவர், தார் போடுபவர், கணக்குப்பிள்ளை, மேஸ்திரி என 20 முதல் 30 தறிகள் ஓடும் பட்டறையில் அதிகபட்சம் 10 தொழிலாளர்கள் வரை பணி யாற்றுவார்கள்.

ஒரு விசைத்தறி தொழிலாளி ஒருவருக்கு நான்கு முதல் ஆறு விசைத்தறிகள் மட்டுமே இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும். குறைந்தளவு விசைத்தறிகளை இயக்கினால் ஜவுளிகள் டேமேஜ் ஆகாது. கவனச் சிதறல் இருக்காது என்பதால் இத்தகைய போக்கு கடைப்பிடிக்கப்பட்டது. தோராயமாக ஒரு விசைத்தறி தொழிலாளி, ஒரு வாரத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய்  வரை விசைத்தறி ஓட்டுவதின் மூலமாக வரு மானம் பெறுவார்.

இதனைக்கொண்டு தனது வாழ்வாதா ரத்தை நகர்த்துவார். இந்த முறையே அனைத்து விசைத்தறி கூடங்களிலும் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், கடந்த பத்து ஆண்டு களாக நூல் விலை ஏற்றம், ஜிஎஸ்டி, பணமதிப் பிழப்பு நடவடிக்கை, தொழில் முடக்கம் உள் ளிட்ட எண்ணற்ற காரணங்களால், விசைத்தறி தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் ஒன்றிய, மாநில அரசு கள் ஜவுளித்துறைக்கு என நிதி ஒதுக்கீடு செய் வதாக சொன்னாலும், ஜவுளி தொழிலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதே நிதர் சனம். 

இதர தொழில்களைப்போல ஜவுளித்துறை யிலும் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி காரண மாக அடிக்கடி விசைத்தறி கூடங்களுக்கு விடு முறை விடுவது, போதிய ஜவுளி நூல் இல்லா மல் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிப்பது என எண்ணற்ற காரணங்களால் தொடர்ந்து விசைத் தறி தொழிலாளர்கள் பெரும் பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகினர். இந்த வறுமையின் பிடியில் இருந்து குடும்பத்தை காப்பதற்கு த ற்போது விசைத்தறி தொழிலாளர்கள் ஆல் டிங் முறைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நான்கு முதல் ஆறு தறிகள் வரை இயக்கிய தொழி லாளர்கள் தற்போது 10 முதல் 12 தறிவரையி லும் கணவன் மனைவி பணிபுரியும் விசைத் தறிக்கூடங்களில் 20 விசைத்தறிகள் வரையி லும் இயக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் போதிய வருமானம் கிடைக்கப் பெற வில்லை எனும் கூறும் தொழிலாளர்கள் ஆல்டிங் தொழிலாளர்களாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். 

இதுகுறித்து பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்தி பாளையத்தை சேர்ந்த தொழிலாளி பழனிச்சாமி என்பவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நானும் எனது மனைவியும் விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வந்தோம். 10 முதல் 20 விசைத்தறிகள் வரை இயக்கிய போதும் எங்களுக்கு தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி கிடைக்கா ததால் தொடர்ந்து பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி வந்தோம். இதனால், அந்த விசைத் தறி கூடத்தில் இருந்து வெளியேறி தற்போது ஆல்டிங் தொழிலாளியாக மாறிவிட்டோம். சரா சரியாக ஒரு விசைத்தறிக்கூடத்தில் நாங்கள் வேலை செய்யும் ஜவுளி ரகத்திற்கு ஏற்ப  சம்பளம் மதிப்பிடுவார்கள். அதன் அடிப்படை யில் ஒரு தறிக்கு ரூ.80 முதல் நூறு ரூபாய் வரை யிலும், கணக்கிட்டு நாங்கள் கணவன் மனைவி என்பதால் 15 முதல் 20 விசைத்தறிகள் எங்க ளுக்கு ஓட்டுவதற்கு விடுவார்கள். இதனை பயன்படுத்தி ஒரே நாளில் ரூ.2000 முதல் 2500  ரூபாய் வரை சம்பளமாக பெற்றுக் கொள்கி றோம். வாரத்தில் ஐந்து நாட்கள் இதுபோல வேலை செய்தாலே பத்து முதல் 12 ஆயிரம் ரூபாய் சம்பாதித்து விடலாம் என்பதால், தொடர்ந்து ஆல்டிங் தொழிலாளியாகவே பணியாற்ற விரும்புகிறோம். தேவைப்படும் நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் அதனால் இது எங்களுக்கு எளிதானதாக இருக்கிறது. ஆனால், எந்த சட்ட சலுகையும் கிடைக்காது, தறியில் சிக்கி கை, கால்கள் போனாலும் நாங்கள்தான் மருத்துவ செலவையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விசைத்தறி தொழிலைப் பொறுத்தவரை வருடம் முழுவதும் ஒரு விசைத்தறி கூடத்தில்  நிரந்தரமாக பணியாற்றினால், சிஐடியு உள் ளிட்ட தொழிற்சங்கத்தின் முன்முயற்சியின் கார ணமாக ஒவ்வொரு ஆண்டும் எங்களுக்கு கூலி  உயர்வு, புதிய போனஸ் ஒப்பந்தம் ஆகியவை கிடைக்கும். ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை நாங்கள் பணி புரியும் தொகைக்கு ஏற்ப போனஸ் தொகையை பெற்று செல்வோம்.

அது எங்களுக்கு எங்கள் குழந்தைகளுக்கு ஜவுளிகளை எடுக்கவும், தீபாவளி கொண்டாட் டத்திற்கும் போதுமானதாக இருந்தது. ஆனால் கால சூழலால் நாங்கள் தினந்தோறும் சம்பளம் பெறும் தொழிலாளர்களாக மாறிவிட்டதால், அன்றைக்கு வாங்குகிற தொகை அன்றைக்கே செலவாகி விடுகிறது. இது இப்படியே வருடம் முழுவதும் நீடிக்கும் பொழுது தீபாவளி நாட்க ளில் போதிய வருவாய் இன்றி தவிக்கிறோம். இருந்த போதும் வேறு வழி இன்றி நிலையான வருமானம் பெறுவதற்காக நிரந்தர தொழிலாளி களாக இருந்த நாங்கள் தற்போது ஆல்டிங் தொழிலாளிகளாக, உள்ளூரிலேயே நாடோடிக ளாக மாறி பல்வேறு தறி கூடங்களுக்கு சென்று பணியாற்றி வருகிறோம் என வேதனையோடு தெரிவித்தார். 

இதுகுறித்து சிஐடியு நாமக்கல் மாவட்டத் தலைவர் அசோகன் கூறுகையில், கடந்த 1970  ஆம் ஆண்டு முதல் விசைத்தறி தொழிலாளர் களுக்காக எண்ணற்ற போராட்டங்களை இன்று  வரை மேற்கொண்டு வருகிறோம். ஆரம்ப கால கட்டத்தில் விசைத்தறி தொழிலாளருக்கு கூலி உயர்வு, போனஸ் என்ற ஒன்றே கிடையாது. விசைத்தறி நிர்வாகங்கள் தருவது மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், தொழிற்சங்கங்களின் விடாப்பிடி போராட்டத்தின் காரணமாக தற் போது பல்வேறு நிலைகள் மாறி தொழிலாளி களுக்கு சட்ட பாதுகாப்புடன் பல்வேறு பலன் களை செய்து கொடுத்து வருகிறோம்.

தற்போது அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு, பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட எண் ணற்ற சிக்கல்களால் தொழிலாளர்கள் பாதிப் புக்கு உள்ளாகி உள்ளனர்.  இதன் காரண மாக விசைத்தறி தொழிலில் எங்கு அதிகம் ஊதி யம் கிடைக்குமோ அங்கு சென்று பணியாற்று வதையே அதிகம் விரும்புகின்றனர். மேலும் பல  தொழிலாளர்கள் இந்த தொழிலே வேண்டாம் என மொத்தமாக தொழிலை விட்டே வெளியேறி விட்டனர்.  தற்போது பள்ளிபாளையத்தில் 40 சத மானவர்கள் ஆல்டிங் தொழிலாளிகளாக மாறி விட்டதால், அவர்களுக்கு விசைத்தறி தொழி லில் பணியாற்றும்போது ஏற்படும் விபத்து பாதிப் புகளுக்கு அரசின் சட்ட சலுகைகள், கூலி  உயர்வு, இ.பி.எப்., போனஸ், நலவாரிய பலன் கள்  உள்ளிட்ட தொழிற்சங்கங்களால் என் னெல்லாம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு வாங்கித் தர முடியுமோ அதை எல்லாம் பெற்று தர முடியாத நிலை ஏற்படுகிறது. நிரந்தர தொழிலாளியாக உள்ள ஒரு தொழிலாளியை சுரண்டுவதை காட்டிலும், ஆல்டிங் தொழிலா ளியிடம் விசைத்தறி பட்டறை உரிமையாளர்க ளின் சுரண்டல் போக்கு அதிகமாக உள்ளது. இதனை தொழிலாளிகள் உணராத நிலை உள்ளது.

விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உயர்வு, பொருளாதாரம் மந்த நிலை உள்ளிட்ட பல் வேறு பிரச்சனைகளை சமாளிக்க, கூலி உயர்வு போனஸ் உயர்வு உள்ளிட்டவைகளை பெறுவ தற்காக தொழிற்சங்கங்களோடு இணைந்து போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய தொழிலாளர்கள், தினந்தோறும் சொற்பத் தொகை கிடைக்கிறது என நிரந்தர தொழிலில் இருந்து விடுபட்டு ஆல்டிங் தொழிலாளியாக செல்கின்றனர். நிரந்தர தொழிலாளியாக பணியாற்றும்போது வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே கையில் பணம் இருக்கும். அதனால் இதர தேவையற்ற செலவுகள் இல்லாத நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது தினந்தோறும் கையில் பணம் இருப்பதால் தேவையற்ற செலவுகள் செய்வதால், மருத்துவ அவசர தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் தொழி லாளர்கள் திண்டாடுகின்றனர். மேலும், நிரந்தர தொழிலாளியாக இருக்கும் போது வாரத்தில்  ஏழு நாளும் வேலைக்கு சென்ற தொழிலாளி கள், தற்போது தினந்தோறும் கையில் பணம் கிடைப்பதால், வாரத்தில் ஒரு சில தினங்க ளுக்கு மட்டுமே வேலைக்கு சென்று மற்ற நாட்க ளில் விடுமுறை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு   பிரச்சனைகள் குடும்பத்தில் எழுகிறது.

அன்றாட வேலைக்கு அன்றைக்கே சம்பளம் கிடைக்கும் நிலையில்,  தொழிலாளர்கள் சங்கம்  சேர்வதற்கும் ஆர்வம் காட்டுவதில்லை. இத்த கைய போக்கு நீடிக்கும் பட்சத்தில் தொழிலா ளர்கள் நிலை மேலும் கேள்விக்குறியாகும். இருந்த போதிலும் சிஐடியு தலைவர்கள், தொடர்ந்து தொழிலாளர்களிடம் பேசி அவர் களை சங்கம் சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றனர். இந்த ஆல்டிங் தொழி லாளர்கள் பிரச்சனை என்பது பள்ளிபாளையத் தில் மட்டுமல்ல, நாமக்கல் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் அருகில் உள்ள ஈரோடு  மாவட்டத்திலும் திருச்செங்கோடு குமாரபாளை யம் என விசைத்தறிகள் எங்கெல்லாம் அதிக மாக உள்ளதோ, அங்கெல்லாம் ஆல்டிங் தொழி லாளர்கள் அதிகரித்துள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் ஜவுளி தொழிலில் போதிய கவனம் செலுத்தி எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும், என்றார்.