கடலூர் மாநகரம் இரண்டு ஆறுகளால் சூழப்பட்டு அருகில் கடற்கரை இருப்பதால் தண்ணீர் தேங்காமல் கடலுக்குள் செல்லும் வகையில் அற்புதமான நகராக கடலூரை வடிவமைத்தார்கள் நமதுமுன்னோர் கள். சாலை போக்குவரத்து, உள் நாட்டு நீர்வழி போக்குவரத்து, கடல் வழி போக்குவரத்து என்று அனைத்து விதமான போக்குவரத்தும் தங்கு தடை இல்லாமல் நடைபெறுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஊர் தான் கடலூர்.
இன்று மக்கள் தொகை பெருக்கம், வாகன பெருக்கம் அதிகமாகியுள்ள சூழலில் பாதுகாப்பான போக்கு வரத்து என்பது அரசுக்கும் நிர்வாகத் துக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
விபத்துக்கள் அதிமாக நடைபெறும் மாவட்டம்
இந்தியாவிலேயே அதிக போக்கு வரத்து விபத்து நடக்கும் மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து விபத்துக் கள் அதிகம் நடக்கும் மாவட்டங்களில் மூன்றாவது மாவட்டமாக கடலூர் உள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்நிலையில் அனுமானங்களை விட்டுவிட்டு அறிவியல் பூர்வமாக சிந்தித்து நகரில் போக்குவரத்து நெரி சலை போக்குவது அவசியம். இதற்கு எதிர்கால திட்டமிடல், போக்குவரத்து விதிகள் பற்றிய விழிப்புணர்வு அவசியம். சாலையின் நீளம் அகலம், மக்கள் எப்படி பயணிக்கிறார்கள், மக்கள் நடப்பதற்கான இடம், அவர் களுக்கான நடைபாதை, இளைப்பாற ஓய்வெடுக்க வசதி, சாலையில் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் பயணிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். வாகனங் கள் நிறுத்துவதற்கு என்று அனு மதிக்கப்பட்ட இடம் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் தேவைப்படுகிறது. ஆனால் கெடுவாய்ப்பாக இவற்றை திட்டமிட்டு செயல்படுத்து வதற்கான எவ்வித ஏற்பாடும் தற்போது நகரில் இல்லை என்றே சொல்லலாம்.
சரியான திட்டமிடல் இல்லை?
நிதி பற்றாக்குறையும், ஆர்வமின் மைமையும், கட்டுப்பாடற்ற நகரமய மாக்கலும் சாலைகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை. கடலூரை பொறுத்த வரையில் பிரதான சாலைகளின் நீளம் 15 கிலோ மீட்டர் தான். அதில் வருடத்திற்கு 50 உயிர்கள் இறப்பது மிகவும் சோகமான விஷயம் அல்லவா.
நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் கடலூரை கடந்து செல்லும்போது, கடலூர் நகரில் போக்குவரத்தை விஞ்ஞான பூர்வமாக வடிவமைப்பது இன்றியமையாதது. கடலூர் மாவட்ட நிர்வாகம் இதுவரையில் ஒரு போக்கு வரத்து மேம்பாலத்தைக் கூட திட்ட மிட்டு கட்டவில்லை.
அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக போக்குவரத்தை சீரமைக்கவும் விபத்துக்களை தடுக்கவும் வைக்கப் பட்டுள்ள ஆலோசனைகள் கடலூரில் விபத்தில்லா போக்குவரத்தை உறுதி செய்ய சென்னையில் உள்ளது போன்று போக்குவரத்து மேம்பாலம் அவசியம். கடலூரில் ஜவான் பவன் அருகில் புதிய பாலம் கட்டும் இடத்தி லிருந்து கோஆப்டெக்ஸ் வரை ஒரு மேம்பாலம்கட்டப்படவேண்டும், முதுநகர் மங்கை மகாலில் இருந்து பச்சையாங்குப்பம் கூட்டு ரோடு வரை மேம்பாலம் இன்றியமையாத ஒன்றாகும்.
தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் போல பிரதான சாலைகளில் ஆக்கிர மிப்புகளை அகற்றிவிட்டு வசதியான பேருந்து நிறுத்தம் சாலையில் ஓரமாக (பஸ் பே) கட்டவேண்டும். இதனால் சாலைகளில் பேருந்துக்கு பின்னால் வரிசையாக வாகனங்கள் நிற்கவேண்டிய அவசியம் ஏற்படாது. எரிபொருள் வீணாவதும் தடுக்கப் படும்.
பாதசாரிகளுக்கு தனி நடைபாதை
பிரதான சாலையில் பாதசாரி களுக்கென்று தனியாக நடைபாதை ஏற்படுத்த வேண்டும். மூன்றுக்கு மேற்பட்ட சாலை சந்திப்புகளிலும் ரவுண்டானா ஏற்படுத்தி போக்கு வரத்து விளக்குகளை பொறுத்த வேண்டும். பிரதான போக்குவரத்து சாலைகளின் நீளம் அகலம் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஆட்டோ, ஷேர் ஆட்டோ பஸ், லாரி ஆகியவற்றிற்கு தனியாக நிறுத்து மிடம் ஏற்படுத்த வேண்டும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதேநேரத்தில் விதிகள் குறித்து போதிய விழிப்புணர்வை அனைத்து வயதிலும் அனைத்து மட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து குறுக்கு தெருக்கள், சந்துகளில் இருந்து வரும் பொழுது 90 டிகிரி செங்குத்தாக பிரதான சாலையில் வாகனங்கள் வரும்போது Bellmouth போன்று பிரதான சாலை யில் இணையும் இடத்தில் வளைவு ஏற்பாடு தேவை. அனைத்து சாலை களிலும் சாலைகளின் ஓரத்தில் ஆறு அங்குலம் முதல் ஒரு அடி வரை பள்ள மாக இருப்பதால் அவற்றை சரி செய்ய edge baking ஏற்பாடு தேவை.
வாகன நிறுத்தத்தை முறைப்படுத்துக
வர்த்தக நிறுவனங்கள் அவர் களின் நிறுவனத்திற்கு எதிரே மண் ணைக் கொட்டி மேடாக்கி விடு வதனால் மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கி விபத்துக் கள் ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சாலைகளில் முறையின்றி விபத்துக்கள் ஏற்படுத்தும் அளவிற்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
பள்ளி நேரத்தை மாற்றி அமைத்திடுக!
விபத்துகளையும் போக்குவரத்து நெரிசலையும் குறைக்க பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.சாலைகளில் மக்களை பயமுறுத்தும் வகையில் மாடுகள் திரிவதை தடுப்ப தோடு சாலைகளில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்கள் மீது அபரா தம் விதிக்கவேண்டும். இந்த கோரிக் கைகளை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்தினால் கடலூர் பாதுகாப் பான விபத்துக்கள் இல்லாத நகரமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
எம்.மருதவாணன்
சிறப்புத் தலைவர்
அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு, கடலூர்.