ஆமாம் நீங்க சொல்லுரது சரிதான். செவ்வகத்தை வெட்டியதும், சதுரத்தை வெட்டியதும் ஒன்று போல இருக்கும். இவை இரண்டிலேமே நாம செவ்வகத்தை யும், சதுரத்தையும் உருவாக்க முடிகிறது. அப்படியென்றால் சதுரம், செவ்வகம், முக்கோணம் மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை நம்மால் உணர முடிகிறது தானே. இப்படிதான் அந்த காலத்துல பலவிதமான வடிவங்களை கண்டுபிடிச்சாங்க. அதன் வழியாக அதன் வலிமைகளையும் கண்டுபிடிச்சாங்க. அதற்கு எடுத்து காட்டாத்தான் போஸ்ட் கார்டுல உருளை செஞ்சு பார்த்தோம். இப்ப தெரியுதா? ஏன் திருமலை நாயக்கர் மஹால் தூண்கள் உருளையாக இருகிறது என்று. கணக்கு எங்க தொடங்கியிருக்கனும்? ம் சரியா யோசிச்சிங்க. ஆப்பிரிக்கா கண்டத்தில் தான். ஏன்னா அங்க தான் இன்றைய மனித குலம் தோன்றியது. பல பகுதிகளுக்கும் பரவியிருக்காங்க. நாம கூட அங்கிருந்துதான் வந்தோம். இதை அறிவியல் அறிஞர்களும், மானுடவியல் அறிஞர்களும் ஏத்துகிட்டாங்க. அப்படின்னா நமக்கும் அங்கிருந்துதான் வந்திருக்கும். எண்ணிக்கை தெரியாத காலத்தில் கற்களை பயன்படுத்திருக்காங்க. அவங்க அவங்க கிட்ட இருந்த கால்நடைகளை கணக்கு பார்க்க ஒவ்வொரு முறையும் பட்டியிலிருந்து வெளியே போகும் போது ஒருவ்வொரு கல்லா எடுத்துப் போடுவாங்க. அடைக்கிறப்ப ஒவ்வொன்னா எடுப்பாங்க. இதுல மீதி இருந்துச்சுன்னா ஒரு ஆடோ அல்லது மாடோ காண வில்லைன்னு முடிவு செஞ்சிக்கிருவாங்க. கற்களுக்கு பதிலாக குச்சிகளையும் பயன்படுத் திருக்காங்க. இதில் எண்ணிக்கை அதிகரிக்கும் போது குழப்பங்கள் ஏற்படுது. சிந்திக்கிறாங்க. கோடு போட்டுப் பாக்குறாங்க. அது அவங்களுக்கு கொஞ்சம் எளிமையா இருக்கு. நாமும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கணக்கை பல ஆயிரம் ஆண்டு களாக பயன்படுத்தி வருகிறோம்.
அதுவும் கோடுகள் வழியாக. இன்றைக்கும் கூட கிராமங்களில் பால் கணக்கை சுவற்றில் சாணியால் கோடு போடும் பழக்கம் இருக்கிறது. நம்மில் சிலர் இதை பார்த்திருக்க கூடும். 1960ல ஆப்பிரிக்கா கண்டத்துல உகாண்டா, காங்கோ நாட்டு எல்லையில அகழ்வாராய்ச்சி செஞ்சாங்க. அங்க இருந்த எட்வர்ட் ஏரி பக்கத்துல ஒரு எலும்பு கூடு கிடைச்சிச்சு. அதன் நீளம் 10 சென்டிமீட்டர்தான். இதுக்கு பெயர் இஷாங்கோ எலும்பு.இதன் வயசு என்ன தெரியுமா? சுமார் 20 ஆயிரம். இந்த எலும்புல கோடு கோடா இருக்கு.இப்படிதான் நாம கணக்களை எலும்புகளில் எழுதி வச்சிருக்கோம். இந்த கோடுகள் எதுக்காக போட்டிருப்பாங்க? அவங்க வச்சிருந்த விலங்குகளின் எண்ணிக்கையை கண்டுபிடிக்க போட்டிருக்க லாம். ஒரு குறிப்பிட்ட அளவுகளை கண்டுபிடிக்க கோடு போட்டிருக்கலாம். இதுல ஒரு உண்மை மட்டும் நமக்கு தெரியுது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கணக்கை அங்கங்கே அவர்களே உருவாக்கி இருக்காங்க. மேலே சொன்னேன்ல அது மாதிரியே 1970-1975ல் நடந்த ஆய்வுல இன்னொரு எலும்பு கிடைச்சது. இதுக்கு பேரு லேபோம்போ எலும்புன்னு பேரு. இந்த எலும்பிலும் கோடுகள் கிடைச்சிருக்கு. இந்த எலும்பு பப்பூன் குரங்கின் பின்னங்கால் எலும்பாம். இதன் வயசு தெரியுமா சுமார் 42000. லெம்போம்போ மற்றும் இஷாங்கோ எலும்புகள் ஆப்பிரிக்கா கண்டத்தில் கண்டுபிடிச்சிருக்காங்க தானே. அப்போ அங்கே தானே கணக்கு கண்டுப்பிடிச்சிருப் பாங்க. இப்ப யாரு கண்டுப்பிடிச்சதுன்னு தெரியுதா?. ம் சரியா சொன்னீங்க. ஆப்பிரிக்கா கண்ட மக்கள் தான். அங்கிருந்துதான் பல இடத்துக்கும் பறவியிருக்கு. மத்தவங்களும் அவங்க வாழுகிற சூழழுக்கு தக்க கணக்க கண்டுபிடிச்சிருக்காங்க. அப்ப வாழ்க்கைக்கு கணக்கோடு கை கோர்ப்பபோம்… மறந்தே போனேன். உங்களுக்கான விளையாட்டு இதுதான்.நீங்க பல வகையான முக்கோணம் வச்சிருக் கீங்கள. அது போல செவ்வகம், சதுரம் , சேர்த்துக்கங்க. இந்த வடிவங்கள வச்சிகிட்டு ஒரு பேட்டன் செய்யுங்க அந்த பேட்டனை ஒரு படம் எடுத்து எங்களுக்கு அனுப்பி வைங்க. அதுமட்டுமல்ல நீங்க வெளியில கடைக்கு போனா, வீட்டுக்கு போனா தரையில போட்டிருக்கும் டைல்ஸ் பாருங்க, சுவத்த பாருங்க. உங்களுக்கு என்ன தெரியுது? அதையும் எழுதுங்க..