articles

img

பெண் தொழிலாளர் உரிமை காக்க சபதமேற்போம்! - எம்.தனலட்சுமி

“பரந்துபட்ட பாட்டாளி வர்க்க மக்களை ஒன்று படுத்தும் முயற்சியில் ஆண் தொழிலாளர் மீது வைத்த  அக்கறையை பெண் தொழிலா ளர் மீதும் வைக்கவில்லை என்றால் அது பாட்டாளி வர்க்கம் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம்” என்று  மார்ச் 8 பெண்கள் தினத்தை போராடி பெற்றுத் தந்த தோழர் கிளாரா ஜெட்கின் கூறியது இன்றும் அனைவரின் மனதிலும் பதிய வைக்க வேண்டிய வரிகள்!

வேலை இழப்பு

கொரோனா மற்றும் மோடி அரசு அறிவித்த ஊரடங்கு காலத்தில் ஆண்களை விட பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வேலை இழப்பு, வேலை யின்மை, ஊதிய  இழப்பு போன்றவற்றால் வறுமை அதிகரித்து பெண்கள் அவல நிலைக்கு தள்ளப்பட்ட னர்.  2020ஆம் ஆண்டில் மட்டும் 47 சதவீதம் பெண் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கிராமப்புற வேலை வாய்ப்பிற்கான பட்ஜெட் 40 சதவீதம் குறைந்துள்ளது பல மாநிலங்களில் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. முறைசாரா துறை  குறிப்பாக வீட்டுவேலை, பீடித் தொழில் கட்டுமானம், ஆயத்த ஆடை, தேயிலை தோட்டங்கள் தையல் போன்ற துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்கள்  வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பிற்காக  ஒன்றிய அரசு எந்தவித சலுகைகளும் வழங்கவில்லை. முறை சாரா பெண் தொழிலாளர்களின் நல வாரிய முறைகேடு களை தடுத்து நலவாரிய பலன்களை தடையின்றி பெற போராட வேண்டிய தேவை உள்ளது. ஆண்-பெண் ஊதிய விகித வித்தியாசம் அதி கரித்துள்ளது.  உடல்நலம், ஆரோக்கியம், சுகாதாரம் போன்றவற்றிற்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும், உலகையே அச்சுறுத்திய நோய் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளான பெண் தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சியை ஒன்றிய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்கத்தை முன்வைத்து  இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

நிர்பயா கமிட்டி?

பெண்கள் பணிபுரியும் இடங்களில்  பாலியல் வன்கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது  பணிபுரியும் பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. பணியிடங்க ளில் பாலியல் வன்முறைகளை தடுக்கும் விதமாகவும் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கவும் 2013 ல் உச்சநீதிமன்றம் பணியிடங்களில் - அது அரசு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனமாக  இருந்தா லும் -  நிறுவனம் மற்றும் தொழிலாளர் பிரதிநிதி கொண்ட கமிட்டி அமைக்க வேண்டுமென ஆணை யிட்டது. ஆனால் இந்த புகார் கமிட்டி இன்றும் பெரும் பாலான நிறுவனங்களில் -  ஏன், அரசு நிறுவனங்க ளில் கூட அமைக்கப்படவில்லை என்பது தான் நிதர்சன மான உண்மை. அதுமட்டுமல்ல, உலகையே உலுக்கிய நிர்பயா வழக்கு தீர்ப்பில் முறைசாரா பெண்கள் மற்றும் அனைத்து பெண்களுக்கு பாலியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்க நிர்பயா பெயரில் கமிட்டி அமைத்திட ஆணையிடப்பட்டது. ஆனால் இது நாள் வரை பல மாவட்டங்களில் அமைக்கப் படாமல் உள்ளது. பெண்கள்- அவர்கள் மெத்தப் படித்தவர்களாக இருந்தாலும் - கல்வியறிவு மறுக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களை இரண்டாம்பட்ச குடி மக்களாகத் தான் இந்த சமூகம் பார்க்கிறது.  இந்திய தொழிலாளர் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வேலை நேரம், பணி பாதுகாப்பு, மகப்பேறு விடுப்பு, பண்டிகை  விடுப்பு போன்ற சட்டப்படியான உரிமைகள் மற்றும் சலுகைகள் ஏதும் நவீன தகவல் தொடர்பு துறையில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மேலும்  பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு அல்லது தொடர் விடுப்பு தேவையெனில் அவர்களின்  மேலதிகாரி களின் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு மன உளைச்சல்களுக்கு  உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். 

சட்ட சலுகைகள் மறுப்பு

ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைக ளினால் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற தொழி லாளர் நலச் சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றி அனைத்து உரிமைகளையும் குறிப்பாக சங்கம் சேரும் உரிமை கூட்டுப்பேர உரிமை உட்பட பறிக்கப்பட்டுள்ளது. இதனால் நிரந்தர தொழிலாளர் என்ற நிலை மாறி ஒப்பந்த தொழிலாளர் முறை, குறிப்பிட்ட வேலை தொழிலாளர் முறை மற்றும் நீம் என்ற புதிய புதிய பெயர்களில் ஏராளமான பெண் தொழி லாளர்கள் அரசு நிறுவனங்கள் உட்பட பெரும் நிறு வனங்களில் ஈடுபடுத்துகின்றனர்.  ஒப்பந்த அடிப்படை யில் பகுதி நேரமாக பணி செய்யும் பெண்களுக்கு சட்ட சலுகைகள், உரிமைகள் மறுக்கப்படுகின்றன.   ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களை மக்களுக்கு துரிதமாகவும் முழுமையாக வும் முறையாகவும் எடுத்து செல்லும் பணிகளைச் செய்யும் அங்கன்வாடி, ஆஷா மற்றும் சத்துணவு உள்ளிட்ட திட்ட ஊழியர்களின் நிலைமைகள் என்பது மிகவும் பரிதாபமாக உள்ளது. ஹரியானா மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்விற்காக கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய அரசு, இந்திய தொழிலாளர் மாநாட்டின் தீர்மானத்தின் முடிவின் படி அந்த ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து  குறைந்தபட்ச ஊதியம் ரூ.21000 வழங்கிட வேண்டும். 

அங்கன்வாடிகளின் கதி

ஒன்றிய அரசு, அங்கன்வாடி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு ரூ.20105 கோடியிலி ருந்து இந்த ஆண்டு ரூ.20263 கோடியாக அதிகரித்தி ருப்பதாகச் சொன்னாலும்,  பணவீக்கத்தை கணக்கில் கொண்டால், ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. இந்த நடவடிக்கை நாட்டில் 25 கோடி மக்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைக ளின் ஊட்டச்சத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும். 2 லட்சம் அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தி, ஆடியோ காட்சி வசதிகள் செய்து தரப்படும் என்ற அறிவித்து விட்டு அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது. அங்கன்வாடி ஊழியர்களுக்கு, ஆஷா ஊழியர்கள், மதிய உணவு பணியாளர்கள் மற்றும் பிற திட்டங்க ளுக்கு நிதி உதவி பற்றிய பேச்சே இல்லை. ஒன்றிய அரசின் இந்த நிதிநிலை அறிக்கையில் ‘பெண்கள் சக்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தல்’ என்ற கூற்றின் வெற்றுத்தனத்தை தெளிவாக அம்பலப் படுத்துகிறது.

உயிரற்ற பொம்மைகளா?

மால்களிலும், நவீன விற்பனை நிலையங்களிலும் உயிரற்ற பொம்மைகளுக்கு சமமாக பெண்களை நிறுத்தி வைக்கிறார்கள். இவர்களுக்கு அமர்ந்து பணி யாற்ற இருக்கை வசதி அமைத்து தர வேண்டுமென இடதுசாரி கேரள அரசு ஆணையிட்டது. அதனை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டுமென்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) பல்வேறு இயக்கங்க ளை நடத்தியதன் விளைவாக தமிழக அரசு சிறப்பு  ஆணை பிறப்பித்தது. ஆனால் அதனை கண்கா ணிக்கும் ஏற்பாடுகளைச் செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும்.  கல்விக்காகவும், வேலைக்காகவும் வீட்டை விட்டு வெளியில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பின்மை அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது. பெண்களின் உரிமைக்கான தினம் உருவாகி 111 ஆண்டுகள் கடந்த பின்பும் பெண்கள் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும் என்று சில வக்கிர அமைப்புகள் ஆலோசனை கூறி வருகின்றன. 

இப்படிப்பட்ட தாக்குதல்களிலிருந்து பெண் தொழிலாளர்களை பாதுகாக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொழிலாளர் நல சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், பொதுத் துறைகளை தனியார் மயமாக்காதே என்ற கோரிக்கை களை முன்வைத்து வரும் மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் என்றும், பெண் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம் என்று சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று சபதமேற்போம்.

கட்டுரையாளர் : மாநில அமைப்பாளர், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, சிஐடியு