articles

img

வக்பு வாரிய திருத்தச் சட்டம் 2024 தொடரும் பாஜகவின் முஸ்லிம் வெறுப்பரசியல் - எஸ்.நூர்முகம்மது

விரைவில் இதையும் நாங்கள்  புல்டோசருக்கு “இரையாக்குவோம்!

மூன்றாவது முறையாக மோடி பிரதமர் பொ றுப்பேற்றுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பிரச்சா ரகரான மோடி குஜராத்தில் முஸ்லிம்க ளுக்கு எதிரான கும்பல் படுகொலை நடந்த போது அங்கு முதலமைச்சராக இருந்து மதவெறி அரசிய லுக்கு ஆதரவாக அரசு இயந்திரத்தைப் பயன்படுத்திய தால் பிரபலமானவர். அதுவே அவரைப் பிரதமர் வேட்பாளராக முன் மொழிய முக்கியக் காரணமாக அமைந்தது.  2014இல் மோடி தலைமையிலான பாஜக 270 இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இருந்தும் மாநிலங்களவையில் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆர்.எஸ்.எஸ்-சின் மதவெறி அஜண்டாக்களை நிறை வேற்ற முழுமையான வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால் 2019 தேர்தலில் 303 இடங்களை பாஜக பெற்று தேசிய ஜனநாயக அணி கட்சிகளின் ஆதர வையும், அதிமுக, பிஜூ ஜனதா தளம், பி.ஆர்.எஸ். காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவையும்  பெற்று குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் மாநிலத்துக்கான அரசியல் சட்டம் 370-இன்படியான சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் மாநிலத்தையே இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றுதல் உள்ளிட்ட சட்டங்களை நிறைவேற்றினர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முஸ்லிம் வெறுப்பரசியலின் வெளிப்பாடுகளாகவே அமைந்தன. இந்நிலையில் தான் மோடி 2024 தேர்தலைச் சந்தித்தார். அப்போது பத்தாண்டு சாதனைகளைக் கூறி வாக்குகளை பெற சாத்தியமில்லாததால் முஸ்லிம் வெறுப்பரசியலையே தனது பிரச்சார யுக்தியாக  வைத்துக் கொண்டார். 400 இடங்களைப் பெறப் போவதாக தம்பட்டமடித்து இந்தியா முழுக்கப் பிரச்சா ரம் செய்தார். இத்தேர்தல் பிரச்சாரத்திலும் முஸ்லிம் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பர சியலே அவரது முக்கியப் பிரச்சாரமாக அமைந்தது. இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால் இந்துக்களின் சொத்துக்களையும், இந்துப் பெண்களின் தாலிக ளையும் பறித்து முஸ்லிம்களுக்குக் கொடுத்து விடு வார்கள் என்ற தரம் தாழ்ந்த பிரச்சாரத்தை மேற் கொண்டார். 

10 ஆண்டுகளாக பிரதமராக இருக்கும் மோடி 2024 தேர்தலை ஒட்டி 173 பிரச்சாரக் கூட்டங்களில் பேசியதாகவும், அவற்றில் 110 பிரச்சாரக் கூட்டங்களில் முஸ்லிம் வெறுப்பரசியலையேப் பேசியதாகவும் மனித உரிமை அமைப்பு ஒன்று தனது ஆய்வறிக்கை யில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் நடைபெற்ற முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த வர்கள் மீதான  28 வன்முறைகளில் 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலத்தில் தான் விதிகளை மீறிய இப்பிரச்சாரங்களை மோடி மேற்கொண்டார். ஆனால் இந்திய மக்கள் மோடி மற்றும் பாஜகவின் மத வெறி அரசியலுக்கு ஆட் படாமல் தகுந்த பாடம் புகட்டினர்.  பாஜக ஏற்கனவே வென்றிருந்த 90 இடங்களை இழந்தது. வெறும் 240 இடங்களை மட்டுமே பெற்று தனிப் பெரும்பான்மையை இழந்தது. இருந்தும் கடைசி நேரத்தில் பாஜகவுடன் கைகோர்த்த தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற (?) ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் மோடி பிரதம ரானார். ஆனால் பாஜகவோ, பிரதமர் மோடியோ தோல்வியிலிருந்து பாடம் கற்கவில்லை. மாறாக மீண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மதவெறி மற்றும் முஸ்லிம் வெறுப்பு அஜண்டாக்களை முன்னெடுத்து வருவதையே பார்க்கிறோம். அதன் ஒரு பகுதியாகத் தான் நாடாளுமன்ற 2024 பட்ஜெட் கூட்டத் தொடரில் வக்பு (திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரதான எதிர்க் கட்சிகள் அனைத்தும் துவக்க நிலையிலேயே தாக்கல் செய்யக் கூடாதென எதிர்த்தும் விடாப்பிடியாக தாக்கல் செய்துள் ளது. இறுதியில் கடுமையான எதிர்ப்பின் காரணமா கவும், மாநிலங்களவையில் மசோதா வெற்றி பெறும் வாய்ப்பு அரிதாக உள்ளதாலும் இம்மசோதா நாடாளு மன்ற தெரிவுக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு மசோதா நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு அனுப் பப்படுவது கடந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தெரி வுக்குழுவின் தலைவர் பாஜகவைச் சார்ந்தவர் என்ப தும், பெரும்பான்மை உறுப்பினர்கள் பாஜக அணி யைச் சார்ந்தவர்கள் என்பதும் நினைவு கூரத்தக்கது.  இந்நிலையில் தான் ஆர்.எஸ்.எஸ். இன் அடுத்த  அஜண்டாவான பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார். அதி லும் குறிப்பாக பல பாஜக ஆளும் மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி அமலாக்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி மதச்சார்பற்ற பொது சிவில் சட்டம் என நாமதேயம் சூட்டியுள்ளார். அவரது மொழியில் மதச்சார்பற்ற என்பதன் பொருள் இந்துத்துவா என்பது தான் இதுவரையுள்ள அனுபவம் கற்றுத்தந்த பாடம்.  

சச்சார் குழுவின் பரிந்துரைகள்

இந்திய  முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, வாழ்நிலை குறித்து ஆய்வு செய்த நீதிபதி சச்சார் குழு, வக்பு சொத்துக்கள் குறித்தும், வக்பு வாரியங்க ளின் செயல்பாடு குறித்தும், அவற்றை முஸ்லிம் சமூகத்தின் மேம்பாட்டுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்த, செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் தனது அறிக்கையின் 11 ஆவது அத்தியா யத்தில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. வக்பு சொத்துக் கள் கல்வி நிலையங்கள், மாணவர் விடுதிகள், நூல கங்கள், விளையாட்டு வசதிகள் அமைத்தல், பராம ரித்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கும், கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித் தொகை  வழங்குதல் ஆகியவற்றிற்கும் பயன்பட வேண்டும் என்றும், ஏழைகளின் மருத்துவ வசதி, நிவாரணம், மதக் கலவரங்களால் அல்லது இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டோருக்கு பொருளாதார உதவி வழங்கு தல், சமூகத்தைச் சார்ந்தவர்களின் பயன்பாட்டுக்காக திருமண மண்டபங்கள் அமைத்தல், மசூதிகள், தர்காக் கள், கபர்ஸ்தானங்கள், வக்பு சொத்துக்கள் பராம ரித்தல் ஆகியவற்றிற்கும், ஏழை விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் பொருளாதார உதவி செய்தல், அனாதை பெண்களின் திருமணம், விதவைகளின் பராமரிப்பு ஆகியவற்றிற்கு உதவுதல், இமாம்கள் மற்றும் மசூதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என சச்சார் குழு அறிக்கை வரையறுக்கிறது. ஆனால் வக்பு சொத்துக்கள் பல அரசாலும், தனி நபர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்ற விபரத்தையும் தரவுகளின் மூலம் சச்சார் குழு தெரி விக்கிறது. எனவே வக்பு சொத்துக்களை மீட்டெடுக்க வும், முறையாகப் பராமரிக்கவும், பயன்படுத்தவும் ஏராளமான பரிந்துரைகளையும் சச்சார் குழு பரிந்து ரைத்துள்ளது.

சொத்துக்களை  கபளீகரம் செய்யவே!

விடுதலைக்குப் பின்னர் 1954இல் வக்பு சட்டம்  நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அதில் ஏராளமான குறைபாடுகள் கண்டதன் காரணமாக 1995இல் நாடாளுமன்றம் புதிதாக ஒரு வக்பு சட்டத்தை நிறைவேற்றியது. சச்சார் குழு பரிந்துரையின் பேரிலும், கூட்டு நாடாளுமன்றக்குழுவின் அறிக்கையின் பேரி லும் அதில் சில திருத்தங்கள் 2013இல் செய்யப்பட்டன. இவைகள் அனைத்தும் வக்பு சொத்துக்களை முறை யாகப் பராமரித்திடவும், பயன்படுத்திடவும், தவறுகள் நடந்தால் தலையிட்டு சரி செய்யவும் செய்யப்பட்டன. இந்நிலையில் தான் 2024 பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி வக்பு சட்ட திருத்தத்திற்கான மசோதாவை மோடி அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்த திருத்தங்கள் வக்பு சொத்துக்களை முறையாகப் பராமரிக்கும் நோக்கத்திலோ அல்லது வக்பு சொத்துக்கள் எந்த நோக்கத்திற்காக வழங்கப் பட்டதோ அதற்கேற்ப முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தும் நோக்கத்திலோ அல்லாமல், வக்பு சொத்துக்களை கபளீகரம் செய்ய வும், வக்பு சட்டத்தைத் திருத்தி வக்பு வாரியத்தின் அதி காரத்தைக் குறைத்து, முஸ்லிம் சமூகத்தின் மேம் பாட்டிற்குப் பயன்படாமல் செய்யும் நோக்கத்திலும் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. 1995 வக்பு சட்டத்தில் 44 திருத்தங்களை மோடி அரசு முன் மொழிந்துள்ளது. இந்த திருத்தங்களைக் கொண்டு வரும் முன்னர் முஸ்லிம் சமூகத்தினரிடமோ அல்லது வக்பு வாரியப் பிரதிநிதிகளிடமோ அல்லது முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்த நிபுணர்களிடமோ எவ்வித கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திருத்தமே ஒருங்கி ணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறமை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் என்று சட்டத்தின் பெயரைத் திருத்துகிறது. பார்ப்பதற்கு நல்ல நோக்கம் கொண்டது போல் காட்சியளித்தாலும் அனைத்து  திருத்தங்களும் வக்பு சொத்துக்களின் நோக்கங்க ளைச் சிதறடிப்பதாகவே உள்ளது. 

சதி தவிர வேறில்லை

புதிய திருத்தங்களின்படி  5 ஆண்டுகளாக முஸ்லிம் மதத்தைப் பின்பற்றி வருபவர்கள் மட்டுமே வக்பு சொத்தைத் தானம் செய்ய முடியும். அதுவும் வாய் மொ ழியாக  அல்லாமல் எழுத்து மூலமான தானமாகவே இருக்க வேண்டும். செக்சன் 3பியின்படி இந்த திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னால் உள்ள சொத் துக்கள் உட்பட அனைத்து வக்பு சொத்துக்களும் 6 மாதங்களுக்குள் தனியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். செக்சன் 3 சியின்படி ஒரு சொத்து அரசு சொத்து என அடையாளம் காணப்பட்டாலோ அல்லது அறிவிக்கப் பட்டாலோ அது அரசு சொத்தாகவே கருதப்படும்.  நீதிபதி சச்சார் குழு பல ஆயிரம் ஏக்கர் வக்பு சொத்துக்கள் அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு சொத்து வக்பு சொத்தா அல்லது அரசு சொத்தா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியாளர் அல்லது அவரால் அதிகாரம் அளித்திடும் ஒரு அலு வலருக்கு தரப்பட்டுள்ளது. முந்தைய சட்டப்படி இந்த அதிகாரம் வக்பு டிரிபியூனலுக்கு வழங்கப் பட்டுள்ளது. டிரிபியூனல் தலைவராக நீதிபதி ஒருவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. செக்சன் 4இல் செய்துள்ள திருத்தத்தின்படி வக்பு சொத்தை அளவீடு செய்யும் அதிகாரம் அதற்கென அரசால் நியமிக்கப் படும் சர்வே கமிசனரிடமிருந்து மாவட்ட கலெக்டருக்கு மாற்றப்படுகிறது. இத்திருத்தங்களெல்லாம் வக்பு சொத்துக்களை கபளீகரம் செய்வதற்கான சதி தவிர வேறில்லை.

முஸ்லிம் அல்லாதவர்களை திணிக்கிறது

சச்சார் குழு மத்திய வக்பு கவுன்சிலிலும், மாநில வக்பு போர்டிலும் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்றும், மத்திய  அமைச்சரை மத்திய வக்பு தலைவராக நியமிக்கக் கூடாது என்றும் பரிந்து ரைத்த நிலையில் இத்திருத்தத்திலும் மத்திய அமைச்சரே தலைவராக இருப்பார். மேலும் உறுப்பி னர்களாக முஸ்லிம்களாக உள்ள முன்னாள் துணை வேந்தர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் மத அறிஞர்களை நியமிக்கக் கூறியுள்ள நிலை யில், செக்சன் 9 மற்றும் 11இல் செய்யப்பட்ட திருத்தத்தின் படி 2 முஸ்லிம்கள் அல்லாதவர்களை நியமிக்க வழிவகை செய்கிறது. இந்து அறநிலையத் துறை வாரியங்களில் முஸ்லிம்களையோ, கிறிஸ்த வர்களையோ உறுப்பினராக நியமிப்பதை பாஜகவினர் ஏற்பார்களோ? ஏற்கனவே பெண்களை வக்பு போர்டில் உறுப்பினராக நியமிக்க தடை ஏதும் இல்லை. ஏற்க னவே தமிழ்நாடு வக்பு போர்டு உட்பட பல மாநில வக்பு போர்டுகளில் பெண்கள் உறுப்பினராக நிய மிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு வக்பு போர்டில் உறுப்பினராக நியமிக்க இடஒதுக்கீடு செய்யும் பாஜக அரசு இது வரை நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  வக்பு சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங் கள் நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்டவை யல்ல. முஸ்லிம் வெறுப்பரசியலையே தங்களது அடிப் படைக் கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டுள்ள பாஜகவும், மோடியும் வக்பு சொத்துக்களின் மீது தங்கள் அரசுகளின் மூலம் தாங்களே ஆதிக்கம் செலுத்த வும், அதன் மூலம் தானமளிக்கப்பட்டுள்ள சொத்துக்க ளைக் கபளீகரம் செய்யும் நோக்கத்திலேயே இத்திருத் தங்கள் செய்யப்பட்டுள்ளன. இருந்தும் நாடாளு மன்றத்தில் கடுமையான எதிர்ப்பின் காரணமாகவும், தங்களது கட்சியின் சொந்த பலத்தில் நிறைவேற்ற இயலாது என்பதாலும் இந்த மசோதா நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இருந்தும் இதை நிறைவேற்ற அனைத்து தந்திரங்களையும் மோடி அரசு மேற்கொள்ளும்.  

கற்பனைக் கதைகள்,  பொய்கள் கட்டவிழ்ப்பு

தற்போது சங்கிகள் வக்பு சட்டம் குறித்து விவாதம் என்ற பெயரில் பொய்களை பரப்பி வருகின்றனர். இந்துக்களின் சொத்துக்களையும், இந்து கோயில்க ளின் சொத்துக்களையும் வக்பு வாரியம் சுருட்டி வைத்துள்ளது போன்ற அண்டப் புளுகுகளை பரப்பி வருகின்றனர். கேரளத்தில் பேசும் போது தமிழ்நாட்டில் நடந்துள்ளது போலவும், தமிழ்நாட்டில் பேசும் போது வேறு மாநிலங்களில் நடந்துள்ளது போலவும் பொய்ப்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு முஸ்லிம் வக்பு தானமாக தனது 5 சென்ட் இடத்தை வழங்கி னால் அதைச் சுற்றியுள்ள இந்துக்களுக்குச் சொந்த மான பல ஏக்கர் நிலங்கள் வக்பு வாரியத்திற்குச் சென்று  விடும் என்றெல்லாம் கூட கற்பனைக் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர். இவர்களது கோயபல்ஸ் தந்திரம் அனைவரும் அறிந்ததே. எனவே மதவெறி அரசியலை வெறுக்கின்ற மக்கள் மத்தியில் இச் சட்டத்தின் கேடான நோக்கங்களையும், அம்சங்களை யும் விளக்கிப் பிரச்சாரம் செய்வதோடு அனைத்து மத மக்களின் மத்தியிலும் உண்மைகளை எடுத்துச் சொல்லி இச்சட்டத்திற்கு எதிரான கருத்தை உரு வாக்கி, அணி திரட்டுவதன் மூலமே இத்தகைய வெறுப்பரசியலை முறியடித்திட முடியும்.