articles

img

விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுமா? - எஸ்.சங்கர்

விவசாயத் தொழிலாளர்களின் கூலி மற்ற  துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்க ளின் கூலியை விட மிகமிகக் குறைவு. அவர்க ளுக்கான ஊதியம் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது நடைமுறையிலிருக்கும் குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தின்படி கூலியை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைக்க வேண்டும். இந்தக் கால வரையறை மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே இதை மாற்றி அமைக்க வேண்டுமென்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள்  சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது.  2001 ஆம் ஆண்டு சென்னையில் கூடிய தென்  மாநிலங்களின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிக ளின் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டு விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான குறைந்தபட்ச கூலியை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மற்ற  துறைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் திருத்தி அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதைத் தொழில் நிறுவனங்கள் ஏற்க வில்லை. பழையபடியே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு  முறை தான் ஊதியத்தைத் திருத்தியமைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவற்றையெல்லாம் விரிவாக ஆராய்ந்து தமிழக அரசு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை குறைந்த பட்ச கூலியைத் திருத்தியமைப்பது என 2004 ஆம் ஆண்டில் முடிவு செய்தது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் விவசாயத் தொழி லாளர் அமைப்புகள் சார்பில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை விலைவாசி உயர்வுகேற்ப உயர்த்தி வழங்க வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டது. 

குறைந்த ஊதியம் 

2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருத்திய மைக்கப்பட்ட குறைந்தபட்சக் கூலிச் சட்டத்தின்படி தமிழ்நாட்டில் உழவு வேலையில் ஈடுபடும் விவசாயத் தொழிலாளி ஏர்க் கலப்பை, எருதுகள் ஆகியவற்றைத் தாமே கொண்டு வந்தால் அவருக்கு 500 ரூபாயும் வெறும் ஆளாக வந்து உழவு வேலை செய்தால் 400  ரூபாயும் சம்பளம் தர வேண்டும். உழவு வேலை தவிர விதைத்தல், நடவு செய்தல், அறுவடை செய்தல் உள்ளிட்ட அனைத்துவிதமான விவசாய வேலைக ளுக்கும் ஒரு நாள் சம்பளம் 229 ரூபாய் மட்டும் தான். அரசாங்கம் என்னதான் முடிவு செய்து அறி வித்தாலும் ஆங்காங்கே இருக்கும் நிலைமைக்கு ஏற்றபடி நிலவுடமையாளர்களால் தான் விவசா யத் தொழிலாளர்களின் கூலி தீர்மானிக்கப்படுகிறது. தற்போது விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தமிழ்நாட்டில் சட்டப்பூர்வ கூலி ரூ.600 என அறிவிப்பதுதான் நியாயமாக இருக்கும்.

ஊரக வேலை உறுதித்திட்டம்

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மோசமடையாமல் இருப்ப தாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்து வரும் நிலை யில் 2014- ஆம் ஆண்டு முதல் மோடி அரசு தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்கும் நட வடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப் பட்டு வருகிறது.  இத்திட்டத்துக்கான முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், ஒன்றிய அரசின் செயல்பாடுகள் இருக் கின்றன. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செயலி மூலம் வருகைப்பதிவு செய்யும் முறையை (NMMS- National Mobil Monitoring system) பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கட்டாயப்படுத்தியது. இதனால் இணைய வசதி இல்லாத மலைக் கிராமங்கள், பழங்குடிமக்கள் வாழும் வனப் பகுதியிலும் கூடச் செயலி மூலம் வரு கைப்பதிவு செய்தால்தான் வேலை செய்ததற்கான ஊதியம் வழங்கப்படும் எனும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அந்தச்  செயலியை திறப்பதால் சேவை முடங்கி விடுகிறது. அத னால் காலை 6 மணிக்கே வேலைக்கு வரவேண்டும் என்கிற வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதிமுறைப்படி காலை 6 மணி முதல் 11 மணி வரை செயலி மூலம் வருகைப்பதிவு செய்ய லாம் என நிர்வாகம் வலியுறுத்துவது இந்த சட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும். முன்பு வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்கப் பட்டுவந்தது. பிப்ரவரி 1 முதல் நாடு முழுவதும் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் ஊதியம் வழங்கும் முறையை அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. அரசின் புள்ளிவிவரப்படி (MIS report) இந்தியா முழுவதும் 43 சதவீத தொழிலா ளர்கள் மட்டுமே. (தமிழ்நாட்டில் 83 சதவீதம்) ஆதார் இணைப்பு முறையைக் கொண்டுள்ளனர். எனில் மீதமுள்ள தொழிலாளர்களுக்கு அவர்கள் செய்த வேலைக்கான ஊதியம் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. முதலில் நாட்டிலுள்ள அனை வருக்கும் வங்கிக் கணக்கு துவங்குவதை உறுதிப் படுத்தாமல் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்தோர்களுக்கு வங்கியில் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பது போகாத ஊருக்கு வழிகாட்டுவது போல் உள்ளது.

உடனடிச் செயல்பாடு தேவை

இச்சட்டம் ஊரக குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தவே கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வேலை பெறும் உரிமையைச் சட்ட மாக்கிய நாடு இந்தியா. இதுமட்டுமல்ல, எங்கு எப்போது என்ன வேலை செய்ய வேண்டும் என்கிற பணிகளின் தொகுப்பை முடிவு செய்வது, வேலை செய்வதற்கான தொழிலாளர் வரவு - செலவுத் திட்டத்தை இறுதிப்படுத்துவது, கிராமசபையால் அமைக்கப்படும் கண்காணிப்புக் குழு மூலம் வேலையை கண்காணிப்பது, முடிந்த வேலைகளைக் கிராமசபை மூலம் சமூகத் தணிக்கை செய்வது என இத்திட்டம் சார்ந்த அனைத்து முடிவெடுக்கும் அதிகாரங்களையும் எளிய மக்கள் பங்கேற்கும் கிராம சபைக்கு வழங்கி மக்களையும் கிராம ஊராட்சி களையும் இச்சட்டம் அதிகாரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் ஒன்றிய அரசால் பல்வேறு குழப்பங் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

26 ஆண்டுகள்  கடந்துவிட்ட பரிந்துரைகள்

கிராமப்புற மக்களின் வாழ்நிலை, பருவகால வேலையின்மை குறைவாக வேலை கிடைப்பது, வேலை பாதுகாப்பின்மை, கடன் அடிமைத்தனம், குடி பெயர்தல், குறைந்தபட்சக் கூலி பெற இயலாமை, சமூகப் பாதுகாப்பின்மை, மோசமான இருப்பிடம், ஊட்டச்சத்து குறைபாடு, கல்வி, சுகாதாரம், ஆரோக்கி யம் குறிப்பாக பெண்கள் பாதிக்கப்படுவது போன்ற வைகளை ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ய  கோலப்பன் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழுவை 27.08.1997 - இல் தமிழ்நாடு அரசு நியமித்தது. அதில் விவசாயிகளின் பிரதிநிதிகள் 5 பேர் (மறைந்த தோழர் எம்.செபஸ்டியான் - புதுக்கோட்டை விவசாயத் தொழி லாளர்கள் பிரதிநிதி, அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாள ராக செயல்பட்ட தோழர் எஸ்.திருநாவுக்கரசு) மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு 29 மாவட்டங்களில் ஆய்வு செய்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலி ருந்து மனுக்களைபெற்றது. பின்னர் இக்குழு 10 அத்தி யாயத்தில் 43 பரிந்துரைகளை ஏகமனதாக அளித்தது. அதில் ஆண்களுக்கு 6 மணிநேர வேலை, பெண்களுக்கு 5 மணி நேர வேலை; ஆண்,பெண் வித்தியாசமில்லாமல் சமமான சட்டக் கூலி கொடுக்க வேண்டும். 5 ஆண்டுகளில் அனைவருக்கும் வீட்டு மனை (குறைந்தபட்சம் 4 சென்ட்) வழங்கவேண்டும். டாக்டர் அக்ராய்டு கமிட்டி பரிந்துரையின்படி 2700 கலோரி அளவிற்கு உணவு தானியம் கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச கூலியை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. தானியம் - 397 கிராம், கீரை - 113 கிராம், காய்கறிகள் - 85 கிராம், பால் -284 மிலி, பருப்பு -85 கிராம், கிழங்கு - 85 கிராம், பழம் - 85 கிராம்,   சர்க்கரை, வெல்லம் - 57 கிராம், எண்ணெய், நெய் - 57 கிராம், மீன், இறைச்சி - 85 கிராம், முட்டை - 28 கிராம். இத்துடன் துணி, வீட்டு வசதி, எரி பொருள் மற்றும் விளக்கு, கல்வி, ஆரோக்கியம், குடும்ப சமூக நிகழ்ச்சிகள் போன்றவற்றை கணக்கி லெடுக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் வாரிசுகள், பட்டதாரி வேலையில்லா கால நிவார ணம், நலவாரியச் சட்டம், அடையாள அட்டை, பிரசவ கால சலுகை, திருமணக் கடன், கல்வி உதவி போன் றவைகளை பரிந்துரை செய்தது. தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்து 26 ஆண்டுகள் கடந்துவிட்டது.

வாழ்வுரிமை... அடிப்படை உரிமை

மேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்திட்டங்கள் சீரழிக்கப்பட்டது என்பது தான் உண்மை. 60 வயதை கடந்தவர்கள் பெற்று வந்த முதியோர் உதவித் தொகை ஒவ்வொரு மாவட்டத்தி லும் உனக்கு ஆண் பிள்ளை இருக்கிறது, உனக்கு பெண் பிள்ளை இருக்கிறது, வீடு இருக்கிறது என  திட்டத்திற்கு பொருந்தாத காரணங்களை சொல்லி ஆயிரக்கணக்கானோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வயதான முதியோர்கள் தமிழ்நாட்டில் கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து வருவது வேதனைக் குரியது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு (21) வாழ்வுரிமை அடிப்படை உரிமை என்கிறது. வாழ்வுரி மைக்கு அடிப்படையானது உணவு உரிமை என்பதை புரிந்து அரசுகள் செயலாற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில் தென் மேற்கு வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது. மேட்டூர் அணையிலும் போதிய நீர் இருப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல், மே, மாதங்களில் ஏரி, குளங்கள், வரத்து வாரிகளை முழுமையாக தூர்வார வேண்டும். இப்பணிகளுக்கு விவசாயத் தொழிலா ளர்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இப் பணிகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். விவசாய வேலைகளில் எந்திரங்கள் பயன்பாட்டை வெகுவாக குறைத்து மனித சக்தியை பயன்படுத்த வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் வாழும் சுமார் 1 கோடிக்கு மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குரலாய் அம்  மக்களின் உணர்வாய் செயல்படும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் வரும் மார்ச் 16 அன்று மாபெரும் போராட்டத்தை நடத்துகிறது.

கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர்,  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்