articles

img

அரசு வன்முறை, அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்த போராட்டத்தின் வெற்றி!

வாச்சாத்தி பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதி ராக நடத்தப்பட்ட நீண்ட நெடிய  போராட்டம், அதில் கிடைத்த வெற்றி உள்ளிட்டு  பாடநூல்களில் சேர்த்து, இளைய தலைமுறை யினருக்கு எடுத்துரைக்க வேண்டும். போராட்  டம் என்றாலே அந்தோலன்ஜீவி என நக்கல் செய்யும் கூட்டம் அதிகாரத்தில் இருக்கும் போது இது உடனடியாக நடக்காது தான். எனவே சமூக ஏணிப்படியின் அடித்தட்டில் வைக்கப்பட்டு இருப்பவர்கள் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் துணையோடு போரா டினால் நீதி கிடைத்தே தீரும் என்பதை நம்மால் முடிந்த அளவு மக்கள் மத்தியில் கொண்டு  செல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பணி யை இன்று வெளிவரும் தீக்கதிர் சிறப்பிதழ் செய்கிறது என்பது பாராட்டத்தக்கது. சரியான பதில் 1992-ல் நடந்த இக்கொடிய சம்பவத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மலைவாழ் மக்கள் சங்கத்தோடு,  ஜனநாயக மாதர் சங்க மும் தலையீடு செய்தது. தோழர் பாப்பா உமா நாத், தோழர் மைதிலி சிவராமன் ஆகியோர் வாச்சாத்தி கிராமத்துக்கு நேரில் சென்று மக்  களை சந்தித்தனர். அச்சமயம் தான் அன்  றைய வனத்துறை அமைச்சர் செங்கோட்டை யன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை,  வாச்சாத்தி மக்கள் சமூக விரோதிகள், கடத் தல்காரர்கள் என்று சட்டமன்றத்திலேயே கூறினார்.  இதற்கு பதிலடியாக அறிக்கை கொடுத் தால் மட்டும் போதாது, வாச்சாத்தி கிராம மக்களை சென்னைக்கு அழைத்து வந்து அவர்களைப் பேச வைக்க வேண்டும் என  மாதர் சங்கம் முடிவெடுத்தது. அந்த அடிப்படை யில் 1992 செப்டம்பர் மாதம் சென்னையில் குற ளகம் எதிரில் ஒரு வலுவான கண்டன இயக்கம் நடைபெற்றது. வாச்சாத்தி  கிராம மக்கள் குறிப்பாக  பெண்கள் கணிசமான எண்  ணிக்கையில் பங்கேற்றனர். மக்களிடமும் அங்கு வந்த  பத்திரிகையாளர்களிடமும் உண்மை விவரங்கள் எடுத்து வைக்கப்பட்டன. இதுதான் வனத்துறை அமைச்சருக்கும் ஜெயலலிதா அரசுக்கும் சரியான பதிலாக அமைந்தது. 

அன்று வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் கூர்மையான விமர்சனங்கள் இடம் பெற்று இருந்தன. யார் குற்றம் செய்திருந்தாலும் அந்த  குற்றம் நிரூபிக்கப்பட்டு சட்டப்படியான தண்  டனை வழங்கவே ஏற்பாடு செய்ய வேண்டும்.  வல்லுறவு செய்வதும் பாலியல் துன்புறுத்தல் செய்வதும் கிராமத்தையே நிர்மூலம் ஆக்கு வதும் எந்த குற்றத்திற்கான தண்டனை என்று  கேள்வி எழுப்பப்பட்டது. பெண்கள் தான் என்னை வாழ வைத்த தெய்வங்கள் என்று கூறு கிற முதல்வர், இவ்வளவு பெண்களின் இத யக்குமுறல்களைக் கேட்ட பின்னும் ஏன் மௌனம் சாதிக்கிறார் என்கிற சாட்டை அடியும்  அந்த துண்டுப் பிரசுரத்தில் இருந்தது. மைதிலி சிவராமன் தாங்கள் சேகரித்த விவரங்களை மனுவாக  ஆக்கி அன்றைய எஸ்சி/எஸ்டி ஆணைய தலைவர் பாமதி ஐஏஎஸ் அவர்களிடம் மைதிலி  சிவராமன் அளித்து விரிவாக மாதர் சங்க அனு பவங்களைத் தொகுத்து வைத்தார். பாதிப்பு துவங்கியதிலிருந்து பல ஆண்டு கள் அந்தப் பெண்களுக்கும் குடும்பத்திற்கும் ஆறுதலாக இதர அமைப்புகளோடு சேர்ந்து தர்மபுரி மாவட்ட மாதர் சங்க சகோதரிகள் செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்ட பெரும் எண்ணிக்கை யிலான அனைவரும் தண்டனை பெற்றது என்  பது குற்றத்தின் கொடூரத்தைப் புரிந்து கொள்ள  வைக்கிறது. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் மாநில அரசு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி  கிடைக்க விடாமல் தடுப்பதற்கான முயற்சி களை செய்தது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் அதிகார பின்புலம்  அத்தனையையும் தாண்  டியே நீதி பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதா வது அரசு வன்முறையை, அதிகார துஷ்பிர யோகத்தை எதிர்த்த போராட்டம் வெற்றி பெற்  றிருக்கிறது என்று தான் பார்க்க வேண்டும். பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடும் மக்களுக்கு இது நம்பிக்கை அளிக்கக் கூடி யதாகும்.