articles

img

சமூக பாதுகாப்புடனான வேலையை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டில், 23 வெகுமக்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து, வேலையின்மைக்கு எதிரான நடவடிக்கையை துவங்கியுள்ளன. அதன் துவக்கமாக ஆகஸ்ட் 1 அன்று சென்னையில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் தீர்மானங்கள் வருமாறு:

வேலையின்மை சமூகத்தின் கொடூரமான நோயாக உள்ளது. பிரதமர் மோடி,  பாஜக ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என வாக்குறுதி அளித்தார். ஆனால் செய்யவில்லை. ஒன்றிய அரசின் அமைச்சர்கள் மேற்படி வாக்குறுதியை, சும்மா சொல்லப்பட்டது என கூறியது, எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் உள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் குறித்த விஷயத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவது, மிக மோசமான அரசியல் ஆகும்.  இந்திய அளவில், 6 கோடிக்கும் அதிகமானோர் வேலையில்லாமல் உள்ளதாகவும், மாநிலத்தில் சுமார் 70 லட்சம் பேர் வரையிலும் வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவு செய்து காத்திருப்பதாகவும் கூறப்படுகி றது. மற்றொருபுறம் கற்ற கல்விக்கான வேலை இல்லை. அதேபோல் நாடுமுழுவதும் உள்ளூரில் வேலை வாய்ப்பு இன்றி, புலம் பெயர்ந்து வேலை தேடுவதும், மிக குறைந்த கூலிக்கு கூடுதலாக வேலை வாங்கப் படும் அவலமும் அதிகரிக்கிறது. ஆண், பெண் பாரபட்சம் இன்றி, இந்த பெரும் துயரை அனுபவிக்கின்றனர். 

உலகிலேயே அதிக எண்ணிக்கையில்    

கொரோனா பொது முடக்கம் திடீரென்று அறிவிக்கப்ப பட்ட போது, 40 கோடிப் பேர் வேலை இழந்ததாக கூறப்பட்ட விவரம், எந்தவிதமான பாதுகாப்பும் அற்ற வேலைவாய்ப்பில், 94 சதமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதை வெளிப்படுத்தியது. உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் சமூக பாது காப்பற்ற வேலையில், உள்ள நாடு இந்தியா என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. தேச வளர்ச்சி என்பது, அனை வருக்கும் வேலை, சமூக பாதுகாப்பு, சுகாதார மேம்பாடு ஆகியவற்றுடன் இணைந்தது. இவைகளை புறக்க ணிக்கும் அரசுகள், வளர்ச்சிக்கான அரசுகள் அல்ல. மாறாக முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலுக்கு, கொள்ளைக்கு துணை போகும் அரசாகவே இருக்கும். இப்போதைய தாராளமய கொள்கைக்குட்பட்டு பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் ஆட்சியாளர்கள், மேற்குறிப்பிட்ட சுரண்ட லையே அரங்கேற்றுகின்றனர். 

மேற்படி சுரண்டலை ஒழிப்பது சமூக வளர்ச்சிக்கு அத்தியாவசிய தேவையாகும். தேவையை நிறை வேற்ற ஒன்றிய அரசும், மாநில அரசும் பின்வரும் சட்டங்க ளையும், திட்டங்களையும் உருவாக்கி அமலாக்க வேண்டும் என சமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலைக் கான இயக்கத்தின் சிறப்பு மாநாடு வலியுறுத்துகிறது.

1.    வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். வேலை இல்லாக் கால நிவாரணம் குறைந்த பட்சம் ரூ. 5000/- மாதம் என தீர்மானித்து,

2 ஆண்டு  காலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  2.    அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவும், மக்கள் தொகைக்கு ஏற்ப சேவையாற்ற புதிய நிர்வாக அலுவலகங்களை உருவாக்க வேண்டும்.

 3.    பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து, காலிப்பணி இடங்களை நிரப்பிட வேண்டும். சமூக நீதியை நிலை நாட்டும் வகையில், இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பிட வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ன்படி அரசுத்துறைகளில் 4 சத விகிதம், தனியார் துறைகளில் 5 சதவிகிதமும் இட ஒதுக்கீடு அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும். தனியார் துறையில் பட்டியல் சாதியினர் - பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கிடும் வகை யில் சட்டம் இயற்ற வேண்டும்.  பட்டியல் சாதியினர், பழங்குடினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அமல்படுத்திட தேவையான சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்குமாறு ஒன்றிய, மாநில அரசுகளை மாநாடு கோருகிறது.   

  4.    8 மணி நேர வேலை, சமூக பாதுகாப்பு நடவடிக்கை களான, பென்சன், வருங்கால வைப்பு நிதி, பணிக் கொடை ஆகியவை அனைத்து தொழிலாளருக்கும் உறுதி செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.26,000 என்பது சட்டமாக்கப்பட வேண்டும். மேற்படி கோரிக்கைகளுக்காக அரசுகளை வலி யுறுத்தி அடுத்தடுத்த பிரச்சாரங்களையும், போராட்டங்க ளையும், நடத்த 23 அமைப்புகளின் மாநாடு கூட்டாக அறை கூவல் விடுக்கிறது. தமிழ்நாட்டின் சமூக மற்றும் ஜனநாயக இயக்கங்களையும் அனைத்து பகுதி மக்களும், இளைய தலைமுறையும் இதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறது.