கட்டுக்கடங்காத கலவரம் மணிப்பூரில் நடைபெற்று வருகிறது. மோடி நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார், உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க மாட்டார், நாடக ஆட்சி நடத்தும் மோடிக்கு பிரதமர் பதவி ஒரு கேடா என கோவையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். கோவை காந்திபுரத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் ஆகியோர் பங்கேற்றனர். பேட்டியின் போது கே.பாலகிருஷ்ணன் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்:
உண்மை நோக்கம் என்ன?
மணிப்பூர் கலவரம் 3 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடிக்கிறது. இன் னும் அக்கலவரம் கட்டுப்படுத்தப்படவில்லை. இது மெய்டெய், குக்கி என்ற இரு இனத்தவரின் மோதல் என்பது போன்ற தோற்றத்தை பாஜக ஏற்படுத்த முயல்கிறது. உண்மையில், இந்த கல வரத்தை தூண்டிவிடுவதே மணிப்பூர் மாநில பாஜக அரசும், அதன் முதல்வர் பைரேன் சிங்கும் தான். மணிப்பூர் மலைகளில் இருந்து மக்களை அகற்றிவிட்டு, அந்த மலைகளை அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கவே இத்தகைய கலவரங்கள் திட்டமிட்டு பாஜகவால் நடத்தப்படுகிறது.
தமிழக அரசின் உதவிக்கு வரவேற்பு
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு மணிப்பூர் அரசும், ஒன்றிய அர சும் எந்த உதவியும் செய்யவில்லை. இந்நிலை யில்தான் மனிதாபிமான உணர்வோடு, மணிப்பூர் மக்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புடைய அத்தி யாவசியப் பொருட்களை கொடுக்க தமிழக அரசு முன்வந்துள்ளது. தமிழக முதல்வரின் இத்த கைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி வர வேற்கிறோம்.
ஜவுளித் தொழில் முடங்கும் அபாயம்
கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தற்போது கடுமை யான நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப் பாக ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. ஏற்றுமதியை பெரும் பகுதி நம்பியே ஜவுளித்தொழில் இயங்குகிறது. இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக, வாங்கும் சக்தியை இழந்து நமது ஆயத்த ஆடைகளை பிற நாடுகள் வாங்க தயாராக இல்லை. மேலும், வெளி நாடுகளிலிருந்து ஆடைகள் இறக்குமதி செய்யப் பட்டு இங்கே விற்பனை செய்யப்படுவதால், ஜவுளித்தொழில்களே முடங்கிப்போகும் நிலை இருக்கிறது. இத்தொழிலை நம்பி தமிழகத்தில் மட்டும் 15 லட்சம் பேர் உள்ளனர்.
38 கட்சிகளின் பெயர் தெரியுமா?
‘இந்தியா’ கூட்டணியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவே பல இடங்களில் கலவரங்களை ஏற்படுத்தி பெரும் பான்மை மக்களை திசை திருப்ப முயல்கின்றனர். மதம் என்ற தோற்றத்தை வைத்து அதன் அடிப்படையில் மக்களை திரட்டப் பார்க்கின்றனர். இந்தியா கூட்டணி வலுவடைந்து வருவதை கண்ட அதிர்ச்சியில்தான், பாஜக வினர் உடைந்த கட்சி, உடைக்கப்பட்ட கட்சிகளை அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் உள்ள 38 கட்சிகளின் பெயர்களை அந்த கூட்டணி தலைவர்களால் சொல்ல முடியுமா?
இதற்குப் பெயர் நடைபயணமா?
பற்றியெரியும் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல், அண்ணாமலை யின் பாதயாத்திரையை துவக்கி வைக்க அமித்ஷா தமிழகம் வருகின்றார். தமிழ்நாடு அரசை விமர்சிக்கும் தார்மீக உரிமை அமித்ஷா விற்கு எங்கே இருக்கின்றது? மற்ற அரசியல் கட்சி களின் இயக்கத்தை விமர்சிக்கக் கூடாதுதான். ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் நகைப்பிற்குரியதாக இருக்கிறது. சிறிது தூரம் நடந்து, பின்னர் சொகுசு வாகனத்தில் செல்வது, பின்னர் நடப்பது என அண்ணாமலை நடைபயணம் இருக்கின்றது. இது நடைபயணமா?
மாநில உரிமைகளை பறிப்பதா?
தில்லி அரசு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி ஒன்றிய அரசே செயல்படு கின்றது. மாநில உரிமைகளை பறித்து ஓரே அரசு என்று செயல்படப் பார்க்கின்றது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கான உரிமைகளை கொடுக்க வேண்டாமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்கின்றோம் என சொல்லாமல் நாடா ளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, உச்சநீதி மன்றத்திற்கு, எதிரான போக்கை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. ஒன்றிய அரசின் இதுபோன்ற செயல் மாநில உரிமைகளை பறிக்கும், நாட்டை சீர்குலைக்கும்.
கொடநாடு மர்மங்கள் என்ன?
திமுக தேர்தல் அறிக்கையில் கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார் கள். இந்த வழக்கைதுரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கட்சியும் முன் வைத்து வருகிறது. கொடநாடு வழக்கில் நிறைய மர்ம முடிச்சுகள் இருக்கின்றன. அதை வெளிப் படுத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.
சீமான் பேச்சு கண்டனத்திற்குரியது
சீமான் மாதிரியான ஆட்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. என்றாலும் குறிப்பிட்ட மதம், சாதி சார்ந்த மக்களை தரம் தாழ்த்தி பேசுவது சரியானது அல்ல. அவரது பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது. இஸ்லாமி யர்கள், கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தும் வகை யிலான அவரது பேச்சு கண்டனத்திற்குரியது.
அதிமுக ஏன் வாயைத் திறப்பதில்லை?
திமுக அரசிற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி போராடுவது இல்லையே என அதிமுக எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் போது சிபிஎம் தொடர்ந்து போராடுகின்றது. சொத்துவரி உயர்வுக்கு எதி ராக, நெய்வேலி பிரச்சனைக்காக, கோவை மாநக ரத்தின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவ னத்திடம் அளித்த விவகாரத்தில்... என சிபிஎம் தொடர்ந்து போராடுகிறது. இவ்வளவு பேசுகிற வேலுமணி, மக்கள் விரோத திட்டங்களையே செயல்படுத்தி வருகிற ஒன்றிய அரசைக் கண் டித்து ஏன் வாயை திறப்பதில்லை? அதிமுக ஏன் போராடுவதில்லை? பாஜக என்ற பேராபத்தில் இருந்து நாட்டை பாதுகாக்க திமுக உடன் துணை நிற்கிறோம்.