ஒன்றிய பாஜக கூட்டணி அரசாங்கம் மூன்று புதிய கிரிமினல் சட்டங்களின் அமலாக்கத்தை நிறுத்தி வைத்திட வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் அணிதிரண்டு போராடிக் கொண்டி ருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் மாநில அளவில் இயங்கும் வழக்குரைஞர்கள் சங்கங்களும், வழக்கறி ஞர் சங்கமும் (Bar Association) ஒன்றுபட்டு கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்திருக்கின்றன. ஜூலை 8 அன்று திருச்சியில் அணிதிரண்டு மாபெரும் பேரணி/ ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். அதில் வழக்குரைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரி வித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உரை யாற்றினார்கள்.
அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பு
ஜூலை 10 அன்று ரயில்வே நிலையங்களில் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும், ஜூலை 12ஆம் தேதி வரை நீதிமன்றங்க ளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கூட்டு நடவடிக்கைக் குழு விடுத்திருந்த அறைகூவலை வழக்குரைஞர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றி யிருக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர், இம்மூன்று சட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பரிந்துரைத்திடுவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறார். அதே சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் இந்தப் பிரச்சனை மீது மாநிலத்தில் பல்வேறு வடிவங்களில் கிளர்ச்சிப் போராட்டங்களில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. அஇஅதிமுகவும்கூட வழக்குரைஞர்களின் கிளர்ச்சிக்கு ஒருமைப்பாடு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறது. பாஜக-வைத் தவிர இதர அரசியல் கட்சிகள் அனைத்தும் இம்மூன்று சட்டங்களும் அமல்படுத்தப்படுவதை எதிர்க்கின்றன.
மோடி அரசின் நோக்கம் என்ன?
இம்மூன்று சட்டங்களின் அமலாக்கத்தையும் அவசர கதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அறிவித்தது ஏன்? இதுவரை நடைமுறையில் இருந்துவந்த இந்தியத் தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா (Bharatiya Nyaya Sanhita, 2023) என்ற பெயரிலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம், பாரதிய நகரிக் சுரக்சா சன்ஹிதா (Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023) என்ற பெயரிலும், இந்திய சாட்சியச் சட்டம், பாரதிய சாக்சிய அதினியம் (Bharatiya Sakshya Adhiniyam, 2023) என்ற பெயரிலும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. மோடி மற்றும் அமித்ஷாவின் இந்நடவடிக்கைக ளுக்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட நோக்கம் இருப்பதா கவே தோன்றுகிறது. 2014இலிருந்து, மோடி தலைமை யின் கீழ் பாஜக தலைமையிலான அரசாங்கம், கார்ப்ப ரேட் நலன்களையும் மதவெறித் தொடர்புகளை வளர்த் தெடுக்கும் விதத்திலும் எண்ணற்ற சட்டங்களைத் திருத்தியுள்ளது; உருவாக்கியும் உள்ளது. எப்போ தெல்லாம் பாஜக ஒன்றிய அளவிலும், மாநில அளவி லும் ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறதோ அப்போதெல் லாம், அரசு எந்திரத்தின்மீது ஆர்எஸ்எஸ் தன் செல் வாக்கைக் கணிசமாக பயன்படுத்தி வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்எஸ்எஸ்-இன் பிரச்சாரகராக இருந்த மோடி பிரதமரான பின் இது தெளிவாகவே தெரிகிறது.
யாரையும் ‘பயங்கரவாதி’ ஆக்கலாம்
சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தில் (உபா) அமல்படுத்தப்பட்டிருக்கும் மிகவும் குறிப்பிடத் தக்க மாற்றம் என்பது 35ஆவது பிரிவுக்கு திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாகும். இந்தத் திருத்தம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் 4ஆவது பிரிவின்கீழ் எவரொருவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்திட ஒன்றிய அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இதற்கு முன்பு சில அமைப்புகள் மட்டுமே பயங்கரவாத அமைப்புகள் என்று முத்திரை குத்தப் பட்டிருந்தன. இப்போது திருத்தப்பட்டுள்ள சட்டத்தின்படி, எந்தத் தனிப்பட்ட ஒருவரையும், அவர் ஆற்றிய உரையை அடிப்படையாக வைத்து கைது செய்திட முடியும். அவருடைய பேச்சு வன்முறையைத் தூண்டக் கூடிய விதத்தில் இல்லை என்றாலும் கூட அந்த நபரைக் கைது செய்திட முடியும். இந்த மாற்றம் குடிமை உரிமைகள் (மனித உரிமைகள்) தொடர்பாக ஆழ்ந்த கவலைகளை எழுப்பியிருக்கிறது. பிணையில் வர முடியாது 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர், பண மோசடி தடைச்சட்டத்தில் (PMLA) பல திருத்தங்கள் கொண்டுவந்தது. அதனைத் தொடர்ந்து இந்தச் சட்டத் தின்கீழ் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளி வருவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறி விட்டது. குற்றவியல் நீதிபரிபாலன அமைப்பின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் மீது குற்றம் மெய்ப்பிக் கப்படும்வரை அவரை நிரபராதியாகவே கருதிட வேண்டும் என்கிற உத்தரவாதத்தை இந்த மாற்றம் அடித்து வீழ்த்திவிட்டது. ‘உபா’ என்னும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் மற்றும் திருத்தப்பட்ட ‘பிஎம்எல்ஏ’ (PMLA) என்னும் பணமோசடி தடைச் சட்டம் போன்றவை ஒரு குறிப்பிட்ட முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, ஒருவர் கள்ளம்கபடமற்றவரா என்று புல னாய்வு செய்வதைக் காட்டிலும் அவர்மீது குற்றத்தை சுமத்துவதையே இச்சட்டங்கள் முக்கிய நோக்கமா கக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இவர்களுக் கான பிணை விண்ணப்பங்கள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகையில் அரசு முன்வைத்திடும் சாட்சியங்களிலிருந்து இதனை நன்கு தெரிந்து கொள்ள முடிகிறது.
பிரகடனம் செய்யாத அவசர நிலை
2014ஆம் ஆண்டு முதலே பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கம், ஆட்சி அதிகாரத்தை ஒற்றை ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்திருப்பதன் மூலம் அவசரநிலையை முறையாகப் பிரகடனம் செய்யாம லேயே, அவசர கால அரசைப்போல் செயல்பட்டு வருகிறது. இவர்களின் இத்தகைய உத்திக்கு மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், தேசியப் புலனாய்வு முகமை, அம லாக்கத் துறை, வருமான வரித்துறை போன்றவற்றை மிகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இவர்கள் பிடியில் இருந்து நீதித்துறை கூட தப்பிக்க முடிய வில்லை. அது தாங்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாத விதத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாஜக அரசாங்கத்திடமிருந்து நிர்ப்பந்தங்களை எதிர் கொள்கின்றன. சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், பண மோசடி தடைச் சட்டம் மற்றும் திரைப்படச் சட்டம் (Cinematography Act) போன்றவற்றில் ஒன்றிய அர சாங்கம் கொண்டுவந்திருக்கும் திருத்தங்கள், மத்தியத் தணிக்கை வாரியம் அங்கீகரித்த திரைப் படத்தைக்கூட தடை செய்யும் அதிகாரத்தை அரசுக்கு அளித்திருக்கிறது. அதன்மூலம் பண்பாட்டுத்துறை யிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயல்கி றது. இத்தனை முயற்சிகளை செய்த போதிலும் பாஜக 18ஆவது மக்களவைத் தேர்தலில் பெரும் பான்மையைப் பெற முடியவில்லை. அறுதிப் பெரும் பான்மையைப் பெறமுடியாவிட்டாலும் கூட, மோடி தாங்கள் (தான்) சென்ற பாதையிலேயே எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறார். “மோடி தனக்கு ஏற்பட்ட அவமானத்தை முறியடிக்க மேலும் மோசமான வழியைத் தேடுவார்,” என்று ஓர் அரசியல் ஆய்வாளர் கணிக்கிறார்.
தொடரும் தாக்குதல்கள்
மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றபின் ஒரு சில நாட்களிலேயே, பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பல வன் முறை வெறியாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின் றன. சத்தீஸ்கரில், கால்நடைகளை ஏற்றிவந்த மூன்று பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே போன்ற தாக்குதல்களை மத்தியப் பிரதேசம் மண்ட்லா, ராஜஸ்தான் ஜோத்பூர் ஆகிய இடங்களிலும் சங் பரிவாரக் கும்பல்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதம ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அருந்ததி ராய் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆற்றிய உரைக்காக அவரை கைது செய்திட அரசாங்கம் நட வடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதேபோன்று ஆல்ட்நியூஸ் (Alt News) ஊடகத்தின் இணை நிறுவ னர் முகமது ஜூபைரைக் கைது செய்யவும் நட வடிக்கைகள் எடுத்துள்ளது.
தேசத்துரோகப் பிரிவு
இத்தகைய சூழலில்தான், மோடி தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், மூன்று கிரிமினல் சட்டங்களுக்கும், சிவில் சமூகத்திலி ருந்தும், வழக்குரைஞர்கள் சமூகத்திலிருந்தும் எதிர்ப்பும், வேண்டுகோள்களும் வந்துள்ளபோதிலும் அவற்றைப் பொருட்படுத்தாது அவற்றை ஜூலை 1 முதல் செயல்படுத்திட நடவடிக்கைகளை எடுத்திருக்கி றது. இந்த முடிவு அவர்களின் எதேச்சதிகார, பாசிச நிகழ்ச்சி நிரலை எவ்விதப் பிசிறுமின்றி அடிக்கோ டிட்டுக் காட்டுகிறது. இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உச்சநீதிமன்றத்தால் நீக்கப்பட்ட தேசத்துரோகக் குற்றப்பிரிவான 124-ஏ, வேறு விதத்தில் இப்புதிய சட்டத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்புதிய சட்டத்தில் 152ஆவது பிரிவின்கீழ் எவரொருவரும் அல்லது எந்தவொரு குழுவும், மொழியின் அடிப்ப டையிலோ, புவிப்பிரதேச அடிப்படையிலோ அல்லது வேறெந்தக் காரணத்தின் அடிப்படையிலோ ஒரு கருத்தைக் கூறினாலும், அது அரசுக்கு எதிரான குற்றம் என்று கருதப்பட்டு, கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதித்திடக்கூடிய விதத்தில், மிகவும் கொடுங்கோன்மைமிக்க ஷரத்துக்கள் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கின்றன. புதிய சட்டத்தின்படி, நேரடியான வழக்குகளில்கூட காவல்துறையினர் உடனடியாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாய மில்லை. அதற்கு மாறாக, அவர்கள் தங்களுக்கு வந்துள்ள முறையீட்டின்மீது பூர்வாங்க விசாரணை மேற்கொண்டு, பதினான்கு நாட்களுக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட அதிகாரமளிக்கப் பட்டிருக்கிறது. இது, முறையீட்டை விசாரித்திடும் அதிகாரி தன் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திட வழிவகுத்திடும்.
அதீத அதிகாரம்
மேலும், அரசின் அநீதிக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்பவர்களை யும் சிறையில் அடைத்து வைப்பதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்திருக்கிறது. அவ்வாறு அவர்களை சிறையில் அடைத்து வைப்பதற்கு முன் அவர்களை நீதிமன்றத்தில் 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் இந்தச் சட்டம் அரசுக்கு அதீதமான முறையில் அதிகாரங்களை வழங்கி இருக்கிறது. இது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை முற்றிலுமாக புறக்கணிப்பதாகும். மேலும் இந்தப் புதிய சட்டம், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை காவல்துறையினர் 90 நாட்கள் வரையிலும் அடைத்து வைத்திட அனுமதிக்கிறது. இதுவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் ஷரத்துக்களிலிருந்து அப் பட்டமான அத்துமீறலாகும். குற்றவியல் நடை முறைச் சட்டம், ஒருவரைக் காவல் அடைப்பில் வைத்துக் கொள்ள அதிகபட்சம் 15 நாட்கள்தான் அனுமதிக்கி றது. மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் ஷரத்துக்களின்கீழ், ஒருவரைக் காவல் அடைப்பில் அடைப்பதற்கான அதிகாரத்தை நீதித்துறை நடுவ ருக்கு (மாஜிஸ்ட்ரேட்டுக்கு) மட்டுமே அளிக்கிறது. கூட்டத்தினரைக் கலைப்பதற்கு ஆயுதப் படையின ருக்கு உத்தரவிடும் அதிகாரம் இதுவரை எக்சிகியூடிவ் மாஜிஸ்ட்ரேட்டுக்கு (மாவட்ட ஆட்சியர்) மட்டுமே இருந்து வந்தது. இந்த அதிகாரம் இப்போது வட்டாட்சி யருக்கும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
அரசியல் சட்ட விரோதம்
இந்த மூன்று சட்டங்களின் வரைவுகள், நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன், பொது மக்கள் பார்வைக்கு முன்கூட்டியே அளிக்கப்பட வில்லை. இது அரசமைப்புச்சட்ட விதிகளை மீறிய செய லாகும், சிவில் உரிமைகளை அரித்து வீழ்த்திடும் செய லாகும். மேலும் இந்தச் சட்டமுன்வடிவுகள் சட்டமாவ தற்கு முன், சட்ட ஆணையத்திற்கு (Law Commissi on) அனுப்பப்படவில்லை. இதுவும் அரசமைப்புச்சட்ட விதிகளை மீறிய செயலாகும். இவற்றை அமல் படுத்துவதில் ஏராளமான குறைபாடுகள் இருக்கின் றன. பல ஷரத்துக்கள் மிகப்பெரும் அளவிற்கு திருத்தப்பட வேண்டியிருக்கின்றன. இதன் விளைவாக, சட்ட வல்லுநர்கள் மட்டுமல்ல, சிவில் சமூகத்தின் உறுப்பினர்களும் மற்றும் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் இந்த சட்டங்களை நிறுத்தி வைத்திட வேண்டுமென்றும், முழுமையாக மறுபரி சீலனை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்து கின்றன. இந்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ஜன நாயகத்திற்கு விரோதமான முறையில் நிறை வேற்றப்பட்ட விதத்திற்கு எதிராகவும், அவற்றுடன் வரும் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வழக்கறிஞர்கள் நாடு தழுவிய அளவில் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
(பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 14.7.24),
தமிழில் : ச.வீரமணி