articles

img

சபரிமலையில் குவியும் பக்தர்களும் கேரள அரசின் ஏற்பாடுகளும்! - பினராயி விஜயன்,கேரள முதலமைச்சர்

“சபரிமலையில் கட்டுப்பாடற்ற சூழல் இல்லை. அரசு அமைப்புகள் மிகுந்த கவனத்துடன் தலையிட்டு வருகின்றன. சன்னிதானத்திற்கு பக்தர்கள் எந்த நேரத்திலும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். மண்டல சீசனில் கடும் கூட்டம் இருக்கும். போக்குவரத்து அதிகரிப்பு, நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில விபத்துகளை ஏற்படுத்தும். அது கவனமாகக் கையாளப்படுகிறது”.

சபரிமலையில் நெரிசலை உருவாக்க சிலர் திட்டமிட்ட முயற்சி - முன்னாள் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி புகார்

சபரிமலையில் செயற்கையான நெரி சலை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக வும், அவர்கள் இதற்காக முகாமிட்டுள்ளதாகவும் முன்னாள் மேல்சாந்தி சந்தேகம் தெரிவித்துள் ளார். தரிசனம் முடிந்ததும் அனைவரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  சபரிமலை சன்னிதானத்தில் முகாமிட்டு சிலர் செயற்கையான நெரிசலை ஏற்படுத்த முயற்சிப்ப தாக சந்தேகம் எழுகிறது. அப்படிப்பட்டவர்களின் நோக்கம் சபரிமலையில் நெரிசல் இருப்பதாக செய்திகளை உருவாக்குவதுதான். நெரிசல் இப்போது மட்டுமல்ல; இதற்கு முன்னரும் இருந்துள்ளது. மலை ஏறுபவர்களை தரிசனம், நெய் அபிஷேகம் செய்தவுடன் திருப்பி அனுப்ப வேண்டும். சபரிமலை சென்றடைபவர்களுக்கு எந்த சிரம மும் ஏற்படக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதை அரசியல் பிரச்ச னையாக பார்க்க வேண்டாம். மாநில அரசு சாலை களை விரிவுபடுத்தவோ, அதிக நிலத்தை பயன் படுத்தவோ முடியாது. இது வனப்பகுதியால் சூழப்பட்டுள்ள பகுதி. ஒரு அங்குல நிலத்தை கைய கப்படுத்தவும் ஒன்றிய அரசின் அனுமதி தேவை. சபரிமலை பேருந்து வசதி இல்லை என்று சிலர் செய்திகளைப் பரப்புவதைப் பார்க்க முடிகிறது.அப்படியென்றால், அங்கு வந்தவர்கள் எல்லாம் நடந்து வந்தவர்களா? அப்படி சொல்வது சரியல்ல! தேவஸ்வம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணனிடம் சில ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை ஒரு தேசிய அளவிலான பயணத் தலமாகும். முந்தைய மண்டல காலத்தின் முதல் நாட்களில் சராசரியாக 62,000 ஆக இருந்த பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு டிசம்பர் 6 முதல் நான்கே நாட்களில் சராசரியாக 88,000 ஆக அதிகரித்துள்ளது. கேரளத்துக்கு வெளியில் இருந்து மக்கள் அதிக அளவில் வருகின்றனர். தெலுங்கானா தேர்தல், சென்னை  வெள்ளம் போன்ற காரணங்களால் ஆரம்ப நாட்களில் வர முடியாமல் போனவர்கள் தற்போது திரளாக வருகிறார்கள். இதை உணர்ந்து தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிக நேரம் ஆவது ஏன்?

கடந்த சில நாட்களில் ‘ஸ்பாட் புக்கிங்’ மூலம் சுமார் 20,000 பேர் வந்துள்ளனர். சராசரியாக ஐயாயிரம்  பேர் காட்டுப் பாதை வழியாக வந்தனர். ஒரு நாளைக்கு 1,20,000க்கும் மேற்பட்ட பயணிகள் வருகிறார்கள். பொது விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் சபரிமலைக்கு செல்ல அதிக நேரம் ஆகிறது. கடந்த சில நாட்களாக அங்கு இதுதான் நடந்தது. பொதுவாக 18ஆம் படி வழியாக ஒரு மணி நேரத்தில் 4,200 பேர் தரிசனம் செய்யலாம். வந்தவர்களில் முதிய வர்கள், குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஏற இன்னும் சிறிது நேரம் தேவை. இதை உணர்ந்து, ஆன் லைன் விண்ணப்பதாரர்களுக்கு அனுமதி அளிப்பதை சில நாட்கள் தாமதப்படுத்தி, அதன்மூலம் (விர்ச்சுவல் கியூ) 80,000 ஆகக் குறைக்கப்பட்டது.

நிதி ஒதுக்கீடு

சபரிமலையை மாஸ்டர் பிளானில் சேர்க்க கடந்த 7 ஆண்டுகளில் 220 கோடி ரூபாயை கேரள அரசு ஒதுக்கியுள்ளது. இதன் ஒரு பகுதி வளர்ச்சி நடவடிக்கைகள் உயர் நீதிமன்ற உயர் அதிகாரக் குழுவின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிட் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நிலையி லும்,  கேரளாவில் உள்ள பல்வேறு தேவசம் போர்டு கோயில்களுக்கு ரூ.467 கோடியை அரசாங்கம்  வழங்கியுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு மட்டும் ரூ.144 கோடி வழங்கப்பட்டது. மேலும் சபரிமலை சீசனில் துப்புரவு பணிகளுக்காக பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு ரூ.16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு நிலைமையை மீளாய்வு செய்வதற்காக சிறப்பு கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஸ்பாட் புக்கிங்கை மட்டும் மட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒருங்கி ணைந்த அமைப்பை உருவாக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.

இத்தகைய கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் முதல் முறை அல்ல. சபரிமலையின் மண்டல மகர விளக்கு சீசனை, முடிந்தவரை சீராக நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. தொடர்புடைய அனைத்து துறைக ளையும் ஒருங்கிணைத்து தொடர் நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. இந்த பயண காலத்தை சுமூகமாக நடத்தும் நோக்கில் பல மாதங்களுக்கு முன்பே ஆலோசனைகள் தொடங்கின. இது தவிர, பேரிடர் மேலாண்மைக்கு பொறுப்பான முதன்மைச் செயலர், மாநில காவல்துறைத் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரடியாக ஆலோச னைக் கூட்டங்களை நடத்தி நடவடிக்கைகளுக்கு வழிகாட்டியுள்ளனர்.

குடிநீர்த் திட்டங்கள்

நிலக்கல்லில் 86, பம்பையில் 53, சன்னிதானத்தில் 50 குடிநீர் கியோஸ்க்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பை-சன்னிதானம் வனப் பாதையின் இரு புறமும் அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் சுத்திக ரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. குடிநீருக்காக அவசர கியோஸ்க்குகளும் செயல்படுகின்றன. நிலக் கல்லில் டேங்கர் லாரி மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் பிற தேவைகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஜல் ஆணையத்தின் பம்பை தீர்த்தம் குடிநீர் திட்டம் மற்றும் தேவசம் போர்டின் இலவச சுக்கு குடிநீர் திட்டம் ஆகியவை குறை பாடற்ற முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர, நடைபாதைகள் மற்றும் வரிசை வளாகங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் அனைத்து பகுதிகளிலும் தேவசம் போர்டு சுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட்களை வழங்குகிறது.

சுகாதார ஏற்பாடுகள்

துப்புரவு நடவடிக்கைகளுக்காக ஒரு பெரிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிலக்கல்லில் 449, பம்பையில் 220, சன்னிதானத்தில் 300 துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மொத்தம் 2,350 கழிப்பறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. பயோ  டாய்லெட்கள் உட்பட நிலக்கல்லில் 933, பம்பையில் 412, சன்னிதானத்தில் 1005 கழிப்பறைகள் உள்ளன. நிலக்கல்லில் 3,500, பம்பையில் 1,109, சன்னிதா னத்தில் 1,927 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மருத்துவம், காவல் வசதிகள் 

நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானத்தில் உணவு பாதுகாப்பு சோதனை நடத்த தேவையான அதிகாரி கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்காக 15 அவ சர சிகிச்சை மையங்களும், 17 ஆம்புலன்ஸ்களும் தயாராக உள்ளன, பம்பையில் 2 வெண்டிலேட்டர்கள், 25 ஐசி பிரிவுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. பயண வசதிகளை வழங்கும் கேஎஸ்ஆர்டிசி, இந்த ஞாயிற்றுக் கிழமை வரை பம்பைக்கு 24,456 நடைகளும், பம்பை யில் இருந்து 23,663 நடைகளும் இயக்கியுள்ளது. கோவிட் நோய்க்கு முந்தைய ஆண்டில், சன்னி தானம், பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில்  11,415 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். கடந்த ஆண்டு இது 16,070 ஆக இருந்தது. இம்முறை சபரிமலை பணிக்காக 16,118 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இதே முறையில் காவல்துறையினர் நிர்ணயிக்கப்படு கின்றனர். சபரிமலையில் தேவை அதிகமாகும் போது உதவியாக 50 வன பீட் அதிகாரிகளின் பணியை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோட்டயத்தில் புதனன்று செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து...