articles

img

நிச்சயமாக இது நடக்கப் போவதில்லை!

மகளிர்க்கான இடஒதுக்கீடு சட்ட முன்வடிவு சுமார் 27 ஆண்டுகள் காத்திருப்புக்குப்பின், நிறைவேற்றப் பட்டிருப்பதனை மட்டற்ற மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருக்க வேண்டும்தான். அதி லும் இத்தனை ஆண்டு காலமாக ஆட்சியில் அமர்ந்திருந்த அரசாங்கங்கள் அனைத்தும், ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அதனை இழுத்தடித்துக் கொண்டே வந்தன. இடதுசாரிக் கட்சிகளும், குறிப்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கம் உட்பட அனைத்து மாதர் அமைப்பு களும் இதற்காகத் தொடர்ந்து போராடி,  அப்பிரச்ச னையை உயிர்ப்புடன் வைத்திருந்தன.

மேலும் சில காலம் மறுப்பு
இதில் மிகவும் வருத்தம்  அளிக்கக்கூடிய உண்மை என்னவெனில், இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டபோதிலும், அதன் அமலாக்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கும் அப்பால், மிகவும் அதீதமான கேள்விக்குரிய காரணங்களின்  அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வரைவுச் சட்டமுன்வடிவு, நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் மகளிர்க்கான இட ஒதுக்கீடு குறித்து கூறுவது என்ன? அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்துமுடிந்த பின்னரும் மற்றும் 2026இல் தொடங்கப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு தொடங்கப்பட்ட பின்னரும்தான் மகளிர்க்கான இட ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என்பதாகும்.  மகளிர்க்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு, மக்கள்  தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையோ அல்லது தொகுதி மறுவரையறையோ அவசியம் இல்லை. இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டவுட னேயே மகளிர்க்கான இட ஒதுக்கீட்டு நடவடிக்கை களைத் தொடங்கிவிட முடியும். பின்னர் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போதும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பின்னரும், அப்போதுள்ள மொத்த தொகுதி களின் எண்ணிக்கைக்கேற்ப மகளிர்க்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளித்திட முடியும். ஆயி னும் இவற்றைக் காரணம் காட்டி மகளிர்க்கான உரிமை மேலும் சில ஆண்டு காலத்திற்கு மறுக்கப்பட்டிருக்கிறது. 

மகளிர் வாக்குகளை குறிவைத்து

பாஜக ஒவ்வொரு தேர்தலின்போதும் தன்னு டைய தேர்தல் அறிக்கையில், மகளிர்க்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும் என்ற உறுதி மொழியைக் கூறுவதை வழக்கமாகக் கொண்டி ருந்தது. இந்த உறுதிமொழியை 2014 தேர்த லின்போதும், பின்னர் 2019 தேர்தலின்போதும் கூட அது மகளிர்க்கு அளித்திருந்தது. இரண்டு தேர்தல்களுக்குப்பின்னரும் அது மக்களவை யில் பெரும்பான்மையைப் பெற்று, பிரச்சனைக் குரிய ஏராளமான சட்டங்களை அடாவடித்தனமாக நிறைவேற்றியிருக்கிறது. இவ்வாறு அது தான் ஆட்சியிலிருந்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் தான் தேர்தலின்போது பெண்களுக்கு அளித்த  வாக்குறுதியை நிறைவேற்ற முன்வரவில்லை. இப்போது, அது இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்து, ஆட்சிக்காலம் முடியும் தருவாயில், இந்தச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் வரவிருக்கும் தேர்தலின்போது, மகளிரை நம்ப வைத்து, அவர்களின் வாக்கு களைக் கவர்ந்துவிடலாம் என்று கருதுகிறது.

மகிழ்ச்சியல்ல, ஏமாற்றம்!

நிச்சயமாக இது நடக்கப்போவதில்லை. இந்த அறிவிப்பைக் கேட்ட பெண்கள் எவரும் மகிழ்ச்சி அடையவில்லை, மாறாகத் தாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் மேலும் பொதுத் தேர்தல் நடைபெறும்வரை காத்திருக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தபின்னரும் பாஜக-வினரால்  ‘ஜனநாயகத்தின் தொட்டில்’ (‘cradle of democracy’) என்று அழைக்கப்படும் நாடாளு மன்ற மக்களவையில் இப்போது பெண்களின் எண்ணிக்கை 5 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடு வரையிலும்தான் என்பது வெட்கக்கேடான உண்மையாகும். உலகில் பல நாடுகள் இந்தியா வைவிடச் சிறந்த நிலையில் இருக்கின்றன. 

கீழிருந்து 20ஆம் இடத்தில்

தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றங்களில் பெண்களின் எண்ணிக்கையைப் பொறுத்த வரை இந்தியா அடித்தட்டிலிருந்து 20ஆவது நிலையில்  (20th from the bottom) இருக்கிறது. நம் நாட்டில்  பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை  மிகப் பெரிய அளவில் இருக்கிறது என்றபோதி லும், அந்த எண்ணிக்கை  ஒவ்வொரு தேர்தலின் போதும்  அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்ற  போதிலும் இதுதான் உண்மையாகும். இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கிற மகளிர்க்கான இட ஒதுக்கீடு சட்டத்தைப் பொறுத்தவரை,  இது உடனடியாக நிகழப் போவதில்லை. இதனை 2024 தேர்தல் சமயத்திலேயே நிறைவேற்ற முடியும் என்ற போதிலும் அதனை அவர்கள் செய்திடவில்லை.   

வெந்த புண்ணில் வேல்...

இந்தச் சட்டமுன்வடிவைக் கொண்டு வருவதற்கான ‘நோக்கங்களும் காரணங்களும்’ (‘Statement of Objects and Reasons’) என்னும் பகுதியில் அரசாங்கம் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது. ‘பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளிப்பதற்காகவும், கல்வி மற்றும் சுகாதாரத்தில் சம நிலையை அடையச் செய்வதற்காகவும் இவற்றின் மூலம் பெண் சக்தியை முன்னுக்குக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எண்ணற்ற நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக’ இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இந்த அரசாங்கம் கொண்டு வந்த திட்டங்கள் எப்படி பெண்களுக்கு ஏமாற்றத்தை இதுவரையிலும் அளித்துள்ளதோ அதேநிலை தான் இப்போது நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டத்திற்கும் ஏற்படும். இது அமலில் வருவதற்கு பெண்கள் இன்னும் வெகுகாலத்திற்கு காத்திருக்க வேண்டியிருக்கும்.

செப்டம்பர் 20, 2023 
- தமிழில்: ச.வீரமணி