articles

img

குழந்தைகளின் நரகமாக மாற்றப்பட்ட காசா - சேது சிவன்

இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலால் காசா முழுவதும் குழந்தைகளின் மரண ஓலங்களை எதிரொலிக்கும் ‘நரகமாக’ மாறி விட்டது.

காசாவில் உள்ள 20 லட்சம் மக்கள் தொகையில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆவர். இவர்களின் பலரும் பிறந்தது முதலே இஸ்ரேலின் குண்டு வீச்சு களை எதிர்கொண்டு வருகிறார்கள்; 2023 போர் துவங்கிய பிறகு அவர்கள் மிக மோசமான சூழலை எதிர்கொண்டு வருகிறார்கள். 

குறிப்பாக போரின் காரணமாக குழந்தைகள் அதிர்ச்சி, கவலை,மோசமான  கனவுகள் , மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை உட்பட பல பாதிப்பு களை எதிர் கொண்டு வருகின்றனர்.இது அவர்க ளுக்கு மோசமான பாதிப்புகளை உருவாக்கி வரு கிறது. இந்த மோசமான மன பாதிப்புகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க காசாவில் உள்ள இளை ஞர்கள், ஐ.நா நிவாரண ஊழியர்கள் தன்னார் வத்துடன் சில விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தி வருகின்றனர்.

தெற்கு காசா பகுதியில் பாதுகாப்பு பகுதி என அறிவிக்கப்பட்ட அல்-மவாசி என்ற பாலஸ்தீன மக்கள் தங்கியுள்ள முகாம் மீது ஜூலை 13 அன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 90 பாலஸ் தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சுமார்  300 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அவ்வாறு ஏராளமான பாலஸ்தீன அகதிகள் தங்கி யுள்ள தெற்கு காசா பகுதியின் அப்பாசன் எனும் நகரில் உள்ள  அல்-அவாத்  பள்ளிக்கூடத்தில் ஜூலை 9  அன்று அப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பாலஸ்தீன இளைஞர்கள் கால் பந்து விளையாடி கொண்டிருந்தனர். அதனை நூற்றுக் கணக்கான வர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். 

அப்போது திடீரெனெ இஸ்ரேல் ராணுவம் அப்பள்ளி மீது ஏவுகணைகளை வீசி மிக மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியது. இந்த தாக்கு தலில்  30 பேர் உயிரிழந்தனர். 53 பேர் படுகாயம டைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். கால்பந்து விளையாட்டு மற்றும் தாக்குதல் நடந்த போது எடுக்கப்பட்ட காணொ லியை அல் ஜசீரா ஊடகம் வெளியிட்டிருந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஜோசப் பொரெல் தனது எக்ஸ் தளத்தில் “இன்னும் எத்தனை நாட்களுக்குதான் அப்பாவி மக்கள் இந்த போரின் விளைவுகளை சுமப்பார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

மற்றொரு படுகொலை

அதே நாளில் காசாவில் இருக்கும் புருஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவத்தால் 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  இதில் 14 பேர் குழந்தைகள். ஒட்டு மொத்தமாக காசா பகுதியில் ஜூலை  9 அன்று மட்டும் 77 பேர் படுகொலை செய் யப்பட்டுள்ளனர். 

இதுவரை  காசா பகுதியில் மட்டும்  2023 அக்டோபர் முதல் 38,243 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் இனப்படு கொலை செய்துள்ளது. 88,243 பேர் படுகாயம டைந்துள்ளனர். இவர்களில் 70% பேர் குழந்தைகள் மற்றும் பெண்கள். ஆனால லான்செப் இதழின் ஆய்வு,  இதுவரை காசாவில் 1.86 லட்சம் பேரின் உயிர் பறிக்கப் பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி விபரத்தை வெளி யிட்டுள்ளது.

உலகை உலுக்கிய கொலை 

இஸ்ரேல் ராணுவம் பலஸ்தீன மக்களை  தெற்கு ரஃபா எல்லையை நோக்கிச் செல்லுமாறு மிரட்டி வந்த  சமயத்தில் பலரும் குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்தனர். அப்போது ஒரு  குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தெற்கு நோக்கி தங்கள் காரில் செல்ல முயன்றனர்.  அப்போது  இஸ்ரேல் குண்டுவீச்சில்  உயரமான கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக அவர்கள் நேரடியாக  தெற்கு நோக்கிச் செல்ல முடியவில்லை. வடக்கு நோக்கிச் சென்று மாற்றுப்பாதையில் தெற்கு பகுதிக்கு செல்லவேண்டிய சூழல் உருவானது.

அப்போது இஸ்ரேல் ராணுவத்தின்  மெர்காவா பீரங்கிகள் உட்பட இஸ்ரேலின் ராணுவ வாகனங்கள் அந்த காரை சுற்றி வளைத்தன. காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின. அப்போது அந்த காரில் இருந்த ஹிந்த்  ரஜப் என்ற ஆறு வயது குழந்தை பாலஸ்தீன செஞ் சிலுவை சங்கத்தின் அவசரகால பணியாளர்களை தொலைப்  பேசியில் தொடர்பு கொண்டு, “எனது பெற் றோரை கொலை செய்து விட்டார்கள். இஸ்ரேல் ராணு வத்தின் பீரங்கிகள் என்னை நோக்கி வருகிறது. எனக்கு பயமாக இருக்கிறது என்னை காப்பாற்றுங் கள்” என அலறித்துடித்து பேசியுள்ளான். சில நொடிகள் மட்டுமே அவர் பேசிய நிலையில் தொடர்பு துண்டிக் கப்பட்டார். குழந்தை பேசிய பதிவுகள் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி உலகை உலுக்கியது. 

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 10 அன்று, ஹிந்த் ரஜப்பின் இறந்த உடல் அவரது குடும்பத்தினரின் உடல்களுக்கு அருகில் கண்டெ டுக்கப்பட்டது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் இஸ்ரேல் ராணுவம் இரண்டும் அந்த நேரத்தில் அந்த பகுதி யில் எந்த பீரங்கிகளும் இயங்கவில்லை என்று பொய் சொல்லின.  

ஆனால் அந்த காரில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து இங்கிலாந்தைச் சேர்ந்த தடயவியல்  ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய  விசாரணையின்படி அந்த காரில் 355 குண்டுகள் வீசப்பட்டுள்ள பேர திர்ச்சித் தகவல் வெளியனது. 

தினந்தோறும் படுகொலைகள்

1)    ஜூன் 14 காசாவின்  ஜெய்டவுன்  நகரில்  இஸ்ரேல்விமானத் தாக்குதல்களால் ஒரு குழந்தை படுகொலை செய்யப்பட்டது.

2)    ஜூன் 22 காசாவின் ஷுஜாயா நகரில் இஸ்ரேல் ராணுவ விமானத்தால் இரண்டு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்.

3)    ஜூன் 25  அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு  அருகில்உள்ள அல்-வஹ்தா தெருவில் இஸ்ரேல் ராணுவத்தின்  துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்.

4)    ஜூன் 25 மகாசி அகதிகள் முகாமில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களால் மூன்று குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த குழந்தைகளில் பெரும்பாலோர் 10 வயதைக் கூட எட்டவில்லை.    2014  ஆம் ஆண்டு நடைபெற்ற  போரின் போது இஸ்ரேல் வீசிய தொடர் குண்டு வீச்சில்  கிட்டத்தட்ட  3 லட்சத்து 73 ஆயிரம் குழந்தைகளுக்கு “உடனடி உளவியல்-சமூக முதலுதவி” தேவை என்று அப்போதே  ஐ.நா குழந்தைகள் நிதியத்தின் (UNICEF) காசா அலுவலக  தலைவர் பெர்னில் அயர்ன்சைட் குறிப்பிட்டிருந்தார். 

2024 மே மாதம்  ஐ.நா. குழந்தைகள் நிதியம் இயக்கு னர் கேத்தரின் ரஸ்ஸல்   “கிட்டத்தட்ட காசாவின் அனைத்து குழந்தைகளும் போரின் அதிர்ச்சிகளுக்கு ஆளாகியுள்ளனர், அதன் விளைவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்” தெரிவித்திருந்தார். மேலும் அவர் காசாவில்  14,000 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் 17,000 குழந்தைகள் பெற்றோர் இன்றி அல்லது போரின் காரணமாக பிரிந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது எனவும்  கூறினார். (இந்த மதிப்பீடு எண்ணிக்கை குறை வாகக்  கூட இருக்கலாம்.)

தற்போது காசாவில் குழந்தைகள் அனுப விக்கும் இஸ்ரேலின் வன்முறைகள் தினசரி நிகழ்வாகி விட்டது. பல குழந்தைகள் அச்சத்தில் மன அழுத்தத்தில் இரவில் கண்விழித்துக் கதறுகிறார்கள் என அங்குள்ள பெற்றோர்கள் தெரிவித்துள்ளதை சில பத்திரிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

கால்களை இழந்த குழந்தைகள் 

அல் ஜசீரா இணையதளம் அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட  குழந்தைகளின் பெயர்களைப் பதிவு செய்துள்ளது.  ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஒரு பாலஸ்தீன குழந்தை இஸ்ரேல் ராணுவத்தால்  கொலை செய்யப்படுகிறது. 

மேலும் அந்நிறுவனம் பதிவு செய்துள்ள பெயர் பட்டியலின் இறுதியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது: “இவை கொல்லப்பட்ட குழந்தைகளில் பாதிப் பேரின் பெயர்கள் மட்டுமே.”

சமீபத்தில் காசாவில் 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் புதையுண்டுள்ளதாகவும் சேவ் தி சில்ரன் நிறுவனத்தின் புதிய அறிக்கை கூறியது. ஐ.நா. பாலஸ்தீன  அகதிகள் அமைப்பின்  கமிஷனர்-ஜெனரல் பிலிப் லஸ்ஸரினி ஜூன் 25 அன்று காசா குழந்தைகள் பற்றிய மற்றொரு அதிர்ச்சித் தகவலை உலகிற்கு கொடுத்தார். அதா வது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் குழந்தைகள் சராசரியாக ஒரு கால் அல்லது இரண்டு கால்களை இழந்து வருகி றார்கள் என்றார்.

மேலும் நிவாரண வாகனங்களை இஸ்ரேல் தடுத்து வைத்து இருப்பதால் மயக்க மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள்  தட்டுப்பாடு உள்ளதால் மயக்க மருந்துகள் கூட கொடுக்காமல் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி யுள்ளது. பல நேரங்களில் குண்டு வீச்சில் பாதிக் கப்பட்ட குழந்தைகளின் உயிரை காப்பாற்ற மயக்க மருந்து இன்றி கால்களை அகற்ற வேண்டிய சூழலும் உருவாகியுள்ளதை  மருத்துவர்கள் பதிவு செய்துள் ளனர்.

உலகின் பல இடங்களில் நடைபெறும் போர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கி றது. அவ்வகையில் காசா மீது இஸ்ரேல் நடத்தும் போரில் பாலஸ்தீன குழந்தைகளின் ஒட்டு மொத்த எதிர்காலம் அழிக்கப்பட்டு விட்டதுடன் காசா குழந்தைகளின் நரகமாக மாற்றப்பட்டுவிட்டது.  

தகவல் ஆதாரம்; அல் ஜசீரா, பீப்பிள்ஸ் டிஸ்பேட்ச்