அடுக்கிய மூட்டைகளில் அடி மூட்டையாக - சுமை தாங்குபவர்களாக விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையை நில உடைமைச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. மறுபடியும் அதை உடைப்பதற்கான அனைத்து வடிவிலான போராட்டங்களையும் ஏறக்குறைய நூறாண்டுகளாக செங்கொடி இயக்கம் இந்த மண்ணில் கம்பீரமாக நடத்தி வந்திருக்கிறது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நில பிரபுத்துவ கோட்டையைத் தகர்க்கும் உளிகளாக ஏராளமான தலைவர்கள் களம் கண்டுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவராக மகத்தான தலை வர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி திகழ்கிறார். ஒன்றுபட்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவில் விளத்தூர் பாங்கல் கிராமத்தில் சாத்தன்- அமிர்தம் ஆகிய பண்ணை அடிமைத் தம்பதியினரின் மகனாகப் பிறந்தார் தனுஷ்கோடி. அன்றைய காலகட்டத்தில் நில உடைமை முறை வழக்கப்படி சிறுவன் தனுஷ்கோடி பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படாமல் மாடு மேய்க்கும் வேலைக்கு அந்த கிராமத்தின் பண்ணைக்கு அனுப்பப் பட்டார். சிறுவனான தனுஷ்கோடி, கட்டுக்கடங்காத மாட்டை ஒருநாள் அடித்து விட, தந்தை சாத்தனும் மக னும் கொடூரமான முறையில் பண் ணையில் சாட்டையால் ரத்தம் சொட்டச் சொட்ட அடித்து துவைக்கப்பட்டு வேலையிலிருந்து விரட்டப்பட்டனர். சிறுவன் தனுஷ்கோடிக்கு மிகுந்த வேதனையும் வலியும் ஏற்பட்டது.
சரி, சொந்த ஊரில் தான் இப்படி என்றால், அவரது அத்தை வீடு இருக்கும் வெள்ளங்கால் கிராமத்திற்கு சென்றால் அங்கே பொதுக்குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்ததற்காக பண்ணையில் வேலை பார்த்த வண்டி ஓட்டுபவராலேயே அடித்து நொறுக்கப் பட்டார் தனுஷ்கோடி. பண்ணையில் அடிக்கும் போதெல்லாம் சாமி காப்பாத்து சாமி காப்பாத்துன்னு கத்து னோமே; எந்த சாமியும் வரவில்லை யே, சாமி இருந்தால் தானே வந்தி ருக்கும் என்று முடிவு செய்து கொண்ட தனுஷ்கோடி, கடவுள் நம்பிக்கையி லிருந்து கழன்று கொண்டார். தனுஷ்கோடியின் கிராமத்தில் அப்போது செயல்பட்ட பிற இயக்கங் களின் தலைவர்களின் செயல்பாட்டி ற்கும் கொள்கைக்கும் முரண்பாடும் பாகுபாட்டுச் சிந்தனையும் இருப்ப தைக் கண்டு அவற்றின் மீது நம்பிக்கை இழந்து வெளியேறினார். பண்ணை அடிமைகளின் வாழ்க்கைக்கு விடியல் கிடைக்காதா? இப்படியே தான் வாழ வேண்டுமா? என ஏங்கிக் கொண்டிருந்த தனுஷ்கோடி க்கு 1942-ஆம் ஆண்டு நம்பிக்கை ஒளிக்கீற்றாய் நற்செய்தி கிடைத்தது; சீனிவாசராவ் என்ற ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் தஞ்சை மாவட்டத்திற்கு வந்திருக்கிறார் என்ற உற்சாகமிக்க அந்த செய்தி, அவருக்கு புதிய நம்பிக்கை அளித்தது.
தோழர் சீனிவாசராவ் அவர்களை களப்பால் கிராமத்திற்கு சென்று சந்தித்தார். உண்மையான மகிழ்ச்சி யை அவர் உணர்ந்தார். பி.சீனிவாச ராவ் அவர்களின் எழுச்சிமிகு உரை தனுஷ்கோடியையும் அவருடன் வந்தவர்களையும் தட்டி எழுப்பியது. தங்கள் கிராமத்திற்கு வருமாறும் அங்கு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும் தனுஷ்கோடி சொன்னதை ஏற்றுக் கொண்டார் தோழர் பி.சீனிவாசராவ். பாங்கல் கிராமத்திற்குச் சென்ற பி.சீனிவாசராவுக்கு எழுச்சிகரமான வரவேற்பை தனுஷ்கோடியும் கிராம விவசாயத் தொழிலாளர்களும் அளித் தனர். அவர்களிடையே பேசிய, பி.சீனி வாசராவ், ‘‘நீங்களும் மனிதர்கள் தான், அவன் உன்னை அடித்தால் அடிக்க விடாதே, திருப்பி அடி, சாணிப்பால் கொடுத்தால் குடிக்காதே, சூரியம் உதித்த பின் ஏர் கட்டு, உழைப்பிற்கேற்ற ஊதியம் கேள், பெண்களை ‘ஏண்டி’ என்று கேட்டால் ‘ஏண்டா’ என்று திருப்பிக்கேள்’’ என்ற அவரின் உரை திரண்டிருந்த மக்களுக்கும், தனுஷ்கோடிக்கும் புதுத் தெம்பூட்டின. சங்கம் துவங்கப்பட்டது. அன்று முதல் தோழர்கள் பி.சீனி வாசராவ், களப்பால் குப்பு, வெங்க டேச சோழகர், மணலி கந்தசாமி, கே. ஆர்.ஞானசம்பந்தம், கே.பி.நட ராஜன், கோ.வீரய்யன் உள்ளிட்ட தலை வர்களுடன் இணைந்து விவசாயிகள் சங்கத்தில் அரும்பணியாற்றினார் பி.எஸ்.தனுஷ்கோடி. கூலி உயர்விற்கான போராட்டம், பண்ணை யடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம் என தஞ்சை மாவட்டத்தில் அவர் நடத்திய போராட்டங்கள், போகாத கிராமங்களே இல்லை எனும் அளவிற்கு, தஞ்சைத் தரணியின் போராட்டத் தளபதிகளில் ஒருவராக செங்கொடி இயக்கத்தில் மிளிர்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவராக விளங்கினார். 9 ஆண்டுகள், 9 மாதங்கள் உழைப் பாளி மக்களின் உன்னதக் கோரிக்கை களுக்காக போர்க்களம் பூண்டு சிறை வாசம் அனுபவித்த தலைவர் அவர்.
ஊராட்சி மன்றத்தலைவராக 30 ஆண்டுகள், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் என மக்கள் பிரதியாக சிறப்பான பணிகளால் பெரிதும் போற்றப்பட்டார். 1982ம் ஆண்டு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் முதல் மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார். விவசாயத் தொழிலாளர் இயக்கத் தில் 50 ஆண்டுகளுக்கும் மேலான தனது பணிகளால் தமிழகத்தின் மூலை முடுக்களிலெல்லாம் அனைத்துப் பகுதி மக்களாலும் அங்கீகரிப்பட்ட மகத்தான தலைவராகத் திகழ்ந்தார். கம்பீரமும், அதே நேரத்தில் எளிமை யும் மிக்க தலைவர் தோழர்.பி.எஸ். தனுஷ்கோடி. கிராமப்புற பாட்டாளி களுக்காக தஞ்சைத் தரணியிலும் தமிழகத்திலும் அவர் நடத்தியப் போராட்டங்கள் காலத்தால் அழியாத சாதனைகள். அவர் பாங்கலில் தோன்றிய பாட்டாளிகளின் தலைவர். தோழர்.பி.எஸ்.தனுஷ்கோடி அவர்கள் காட்டிய பாதையில் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்!