articles

img

வெறும் 2 % வாக்கு வித்தியாசத்தில்தான் ஆட்சி அமைத்துள்ளது பாஜக கூட்டணி

பாஜகவுக்கு உடந்தையாக இருந்த தேர்தல் ஆணையம் 

தேசத்தையும் மக்களையும் காக்க தொடர்ந்து போராடுவோம்!

சிபிஎம் அரசியல்  தலைமைக்குழு அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் புதுதில்லியில்  ஜூன் 9 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

18ஆவது மக்களவைத் தேர்தல்

18ஆவது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் பாஜகவிற்குக் குறிப்பிடத்தக்க அளவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மக்கள், 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக-விற்கு அளித்திட்ட பெரும்பான்மையை அரச மைப்புச் சட்டத்தையும், மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் விழுமியங்களையும் பாதுகாக்கும் விதத்தில் இப்போது  பறித்து விட்டார்கள். நாங்கள் 400 இடங்களைத் தாண்டுவோம் என்று பிரச்சாரம் செய்த பாஜக, தற்போது பெற்றுள்ள இடங்கள் 240 மட்டுமேயாகும். சென்ற மக்களவையில் பாஜக 303 இடங்களைப் பெற்றிருந்தது. அதனுடன் ஒப்பிடுகை யில் இப்போது 63 இடங்கள் குறைந்திருக்கிறது. இது 20 விழுக்காட்டிற்கும் அதிகமான வீழ்ச்சி ஆகும். பாஜக ஆட்சி நடத்திடத் தேவையான இடங்களைப் பெறுவ தற்கு தனிக்கட்சி என்ற முறையில் மேலும் 32 இடங்கள் தேவை. எனினும்,  கூட்டணிக்கட்சிகள் பெற்ற 52 இடங்க ளை வைத்துக்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்ட ணியின்  இடங்கள் 292ஆக மாறியுள்ளதால், அது தேவை யான பெரும்பான்மையைக்காட்டிலும் 20 அதிகம் என்ப தால் இப்போது ஆட்சி அமைத்திருக்கிறது.

வெறும் 2 சதவீத  வாக்கு வித்தியாசம்

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து 234 இடங்க ளை வென்றிருக்கின்றன. இது பெரும் பான்மைக்கு 34 இடங்கள் குறைவானதாகும். தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும், பதிவு செய்யப் பட்ட வாக்குகளில் அது  பெற்ற வாக்குகள் 43.31 விழுக் காடாகும். இந்தியா கூட்டணி கட்சிகள் 41.69 விழுக்காடு வாக்குகள் பெற்றிருக்கின்றன. இவ்வாறு இவ்விரு கூட்டணிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்பது வெறும் 2 விழுக்காட்டிற்கும் குறைவேயாகும். இப்போது நடைபெற்ற தேர்தல் எதிர்க்கட்சிகள் மீது மிகவும் விரிவான அளவில் தாக்குதல்கள் நடை பெற்ற பின்னணியிலும், ஒன்றிய அரசின் புலனாய்வு முகமைகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் துஷ்பிர யோகம் செய்யப்பட்ட பின்னணியிலும், பணபலத்தை வாரி இறைத்தும் நடத்தப்பட்டது. தேர்தல் சமயத்தில் இரு மாநில முதல்வர்கள் சிறையில் அடைக்கப்பட்டி ருந்தனர். காங்கிரஸ் கட்சி மற்றும் (கேரளாவில் ஒரு மாவட்டத்தில்) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சிவசேனை போன்ற எதிர்க் கட்சிகள் குறிவைத்துத் தாக்கப்பட்டு, பண பலத்தை ஏவி அவற்றைப் பிளவுபடுத்திட நடவடிக்கைகள் மேற் கொண்டனர். மேலும் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்றிய அரசின் புலனாய்வு முகமைகளால் அச்சு றுத்தல் மற்றும் மிரட்டல்களுக்கும் ஆளாகினர். எதிர்க் கட்சியினர் மத்தியில் பிளவினை ஏற்படுத்துவதற்காக பாஜக அனைத்துவிதமான தில்லுமுல்லுகளிலும் ஈடு பட்டது. இத்தகைய அச்சுறுத்தல் மூலமாக ஐக்கிய ஜனதா தளத்தை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம் இழுப்பதில் பாஜக வெற்றியும் பெற்றிருக்கிறது.

தேர்தல் ஆணையம்  பாஜகவுடன் உடந்தை

தேர்தல் ஆணையம் தேர்தலில் போட்டியிட அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான அள வில் வாய்ப்பினை உத்தரவாதப்படுத்தி யிருந்தால் பாஜகவிற்கும் தேசிய ஜனநாயகக் கூட்ட ணிக்கும் மேலும் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டி ருக்கும். பாஜகவின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்தது. அதன் மோசமான தோல்வி, உண்மை யில், மோடி மற்றும் பல பாஜக தலைவர்களின் மதவெறி  கக்கிய பேச்சுக்களைத் தடுக்க மறுத்தது; தேர்தல் நடத்தை விதிகளை பயனற்றதாக ஆக்கியது. பதிவான வாக்குகள் பற்றிய தரவுகளை வெளியிடுவதில் அதன் ஆரம்ப தயக்கம் - போன்ற செயல்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கடுமையாகப் பாதித்தது.  

பாஜகவின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள்

நாட்டிலுள்ள ஊடகங்களில் பெரும்பாலா னவை பாஜகவின் பிரச்சாரத்தை மட்டுமே ஒளிபரப்பும் விதத்தில் பாஜகவின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தன. இது மிகவும் திரித்து வெளி யிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அப்பட்டமாக பிரதிபலித்தது. கார்ப்பரேட் ஊடகங்க ளுடன் கைகோர்த்துக்கொண்டு, பாஜக தான் திரித்த  கட்டுக்கதைகளை சமூக ஊடகங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பரப்புவதற்காக பெரும் தொகையைச் செலவிட்டது. பல இடங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை நேரடியாகவே வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளது.

மக்கள் பக்கம் நின்ற இந்தியா கூட்டணி  

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி கள் அனைத்தும் நம் அரசமைப்புச் சட்டத் ற்கும் ஜனநாயகத்திற்கும் குடிமை உரிமைக ளுக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை வலுவாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றதோடு, வேலை யின்மை, விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தின. அனைத்துப் பகுதி மக்களின் வெகுஜனப் போராட்டங்கள், குறிப்பாக விவசாயிகள் நடத்திய போராட்டங்கள், தேர்தல் முடிவுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினைச் செய்திருக்கின்றன. மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய - விவ சாயிகள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜக முன்பு  பெற்றிருந்த இடங்களில் 38ஐ இழந்துள்ளது. மோடி  ஆட்சியின் கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புற மக்க ளின் உண்மை ஊதியம் அநேகமாக தேக்க நிலையில்  இருந்ததால், அவர்கள் மோடி அரசாங்கத்திற்கு எதிரா கக் கடுமையான முறையில் செயல்பட்டிருக்கின்றனர். நாட்டிலுள்ள கிராமப்புற தொகுதிகள் 159இல் மக்கள் இதற்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.    இவ்வாறாக, பாஜக பெரும்பான்மையைப் பெற முடியாமல் தத்தளித்தபோதிலும், மோடியின் மேலா திக்க நிலையை மறுபடியும் நிறுவுவதற்கான முயற்சி கள் தொடர்கின்றன. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் விழிப்புடன் இருந்திட வேண்டும்; இந்துத்துவா எதேச்சதிகார போக்கினை வலுப் படுத்துவதற்காகவும், இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டுக்களவாணித்தனத்தை தொடர்ந்திடவும்  மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்திட உறுதியுடன் செயல்பட வேண்டும். அதன்மூலம் மதச்சார்பற்ற ஜனநாயகத்தைப் பாது காத்திடவும், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாது காத்திடவும், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்திடவும் தொடர்ந்து இயக்கங்களை நடத்திட வேண்டும்.  வர விருக்கும் காலங்களில், பாசிச பாணியைப் பயன் படுத்திடும் இந்துத்துவா எதேச்சதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்திட வேண்டும். இதனை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் செய்திட வேண்டும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் செய்திட வேண்டும்.

இடதுசாரிகளின் செயல்பாடு

மக்களவையில் இடதுசாரிகளின் எண் ணிக்கை சற்றே உயர்ந்துள்ளது. அதாவது எட்டு இடங்கள் கிடைத்திருக்கின்றன. (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 4, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – 2, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் - 2 ) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்துள்ள தேர்தல் முடிவுகள், குறிப்பாக கேரளாவில் கிடைத்துள்ள முடிவுகள் குறித்து அரசியல் தலைமைக் குழு தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட மாநிலக் குழுக்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளின் அடிப்படையில் கட்சி இது தொடர்பாக ஓர்ஆழமான ஆய்வினை மேற்கொள்ளும்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.