ஒரு உதாரணம்
பொதுவாக தொழில் மந்த நிலைமை குறித்து புரிந்து கொள் வதற்கு மேற்கத்திய நாடுகளில் சொல்லக்கூடிய ஒரு பிரபலமான உதாரணம்: நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்யக்கூடிய தொழிலாளி வேலை இல்லாமல் வீட்டில் இருக் கிறார். பனிப்பிரதேசமாக இருப்ப தால் இரவில் வீடுகளில் வெப்பம் உருவாக்க நிலக்கரியை பயன் படுத்துவது நடைமுறை. அந்த தொழிலாளியின் வீட்டில் குளிர் அதி கமாக பாதிக்கிறது. தொழிலாளி யின் மகன் தன் தாயிடம், குளிர் அதிக மாக இருக்கிறது, அடுப்பை பற்ற வைத்து வெப்பத்தை உருவாக்குங் கள் என்று கேட்பான். அதற்கு அவ னது தாய், நிலக்கரி வாங்குவதற்கு நம்மிடம் பணம் இல்லை என்று கூறு வார். ஏன் பணம் இல்லை என்று மகன் கேட்க, அப்பாவுக்கு வேலை இல்லை, அதனால் பணம் இல்லை என்பார். அப்பாவுக்கு ஏன் வேலை இல்லை என்று மகன் கேட்க, அதற்கு அவனுடைய தாய் ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்ட நிலக்கரி விற் பனையாகாமல் தேங்கிக் கிடக்கி றது, எனவே அந்த நிலக்கரி விற் பனை ஆகாமல்,
அப்பாவுக்கு வேலை தரமுடியாது என்று நிலக்கரி சுரங்க முதலாளி அனுப்பி விட்டார் என்பார். ஏன் நிலக்கரி வியாபாரம் ஆக வில்லை என்று மகன் கேட்க, நிலக் கரி வாங்குவதற்கு மக்கள் கையில் பணம் இல்லை, அதனால் தேங்கி யிருக்கிறது என்று கூறுவார். ஒரு புறம் நிலக்கரி குவிந்திருந்தாலும், அந்த நிலக்கரியை வெட்டியெடுக் கும் தொழிலாளியிடமே நிலக்கரி வாங்க பணம் இல்லை என்பதுதான் நிலை. இந்த சுழற்சியைப் போலத்தான் ஒரு பக்கம் தொழிலாளிகள் உற் பத்தி செய்த பனியன் ஆடைகளை வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லாததால், அவை விற்பனை ஆகாமல் தேங்கி இருக்கின்றன. அதேசமயம் பனியன் ஆடை தேங் கியிருப்பதால் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என முதலாளிகள் கூறும் நிலை உள்ளது. இதுதான் இப் பொழுது ஜவுளி தொழிலிலும் இருக் கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழி லாளர்களுக்கு வாழ்வளிக்கக்கூடிய பனியன், விசைத்தறி உள்ளிட்ட ஜவுளித்தொழில் மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதன் விளை வாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள னர். ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கைகளின் விளைவாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வாழ வைத்த திருப்பூர்
வந்தோரை வாழ வைக்கும் நகரமாக இருந்த திருப் பூர் இன்று, இங்கு வாழக்கூடிய தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளது. இதற்கு பிரதானமான காரணங்கள், ஒன்றிய அரசின் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான கொள்கையும், கார்ப்ப ரேட் முதலாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாடாகும். ஏற்கெனவே ஒன்றிய அரசாங்கம், 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது. அப்பொழுது தொடங்கிய நெருக்கடி அடுத்தடுத்து தொடர்ந்து அதிகரித்தது. ஜிஎஸ்டி வரி விதிப்பை திணித்தது நெருக்கடியை அதிகரித்தது. அடுத்த கட்டமாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றிய அரசாங்கம் பருத்தி கொள்முதல் சம்பந்தமாக அறிவித்த அறிவிப்பு பனியன், விசைத்தறி, கைத்தறி போன்ற ஜவுளி தொழில்களுக்கு மிகப்பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியது. இன்றுவரை அதிலிருந்து மீள முடி யாத நிலைமை உள்ளது. கடந்த காலங்களில் பனியன் தொழில் பல நெருக்கடி களை சந்தித்து மீண்டு வந்துள்ளது. இதுவரை ஏற்பட்ட நெருக்கடிகளை விட இப்பொழுது தொடர் நெருக்கடி யாக உருவாகியுள்ளது. நூற்றுக்கணக்கான சிறு, குறு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் திருப்பூர் நகர வீதிகளில் மின்சார கம்பம், தந்தி கம்பங்களில் வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்கிற அட்டை தொங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது அந்த இடங் களில் கம்பெனி வாடகைக்கு உள்ளது, வீடு வாடகை கிடைக்கும், கடைகள் வாடகைக்கு கிடைக்கும் என அட்டை தொங்கிக் கொண்டிருக்கிறது.
மக்கள் கையில் பணமில்லை
தொழில் நிலைமை சம்பந்தமாக உற்பத்தியாளர்க ளிடம் கேட்கிறபொழுது உக்ரைன் போர் நடப்பதால் ஐரோப்பிய நாடுகளுக்கு தயார் செய்த ஆடைகளை ஏற்று மதி செய்ய முடியாத நிலை உள்ளது, என்று ஏற்றுமதி யாளர்கள், கூறுகிறார்கள். உள்நாட்டு ஆடை உற்பத்தியா ளர்கள், எங்களிடம் வாங்கி விற்பனை செய்யக்கூடிய சில்லறை விற்பனைக் கடைகளில் முதலில் வாடிக்கையா ளர்கள் ஒருவர் வருடம் 10 பீஸ் வாங்கிய நிலைமை இருந் தால் இப்பொழுது நான்கோ, ஐந்தோ பீஸ் தான் வாங்கும் நிலை இருக்கிறது. எனவே உள்நாட்டு உற்பத்தியும் பாதிக் கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள். மக்கள் கையில் பணம் இல்லாததே இதற்கு காரணம். திருப்பூர் நகர வியாபாரிகளிடம் கேட்டதில், ஒரு தேநீர் கடையில் சராசரியாக தினசரி எட்டாயிரம் ரூபாய்க்கு வியா பாரமானது, இப்பொழுது ரூபாய் 3000 - 4000க்குத்தான் வியாபாரம் ஆகிறது என்று தெரிவித்தார். மட்டன் ஸ்டால் நடத்தக்கூடியவர் வாரம் 20 ஆடுகள் கறி விற்பனை ஆனது. இப்பொழுது 10 ஆடுகள்தான் விற்பனை ஆகிறது என்று கூறுகிறார். இந்த நெருக்கடிக்கு என்னதான் கார ணம்?
பெருகிய வேலைவாய்ப்பு
திருப்பூரில் பனியன் தொழிலும் அதனுடைய உப தொழில்களும் திருப்பூர் மக்களுக்கு மட்டுமின்றி 1980 - 90 காலகட்டங்களில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து திருப்பூர் பனி யன், அதனுடைய உப தொழில்களை நம்பி வந்தார்கள். 2010 - 2020 ஆம் ஆண்டு காலகட்டங்களில் லட்சக்க ணக்கான வடஇந்தியா தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து இங்கு வந்து பணிபுரிகிறார்கள். தொழில் வளர்ச்சியின் கார ணமாக இந்த வேலை வாய்ப்பு உருவாகி உள்ளது. 5 முதல் பத்து பேர் என்று தொடங்கி 500 பேர் முதல் 1000 பேர் வரை வேலை செய்யக்கூடிய சிறிய, பெரிய தொழிற்சாலைகளில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலா ளர்கள் வேலை செய்து வருகிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறு, குறு தொழில்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய, மாநில அரசு கள் தொழிலாளர்களுக்கு உதவி செய்வதற்கு பதிலாக நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன. இதன் விளைவா கவே வேலைக்கு ஆட்கள் தேவை என அட்டை தொங்கிய கரண்ட் கம்பங்களில் இப்போது, கம்பெனி வாடகைக்கு என்ற அட்டை தொங்கிக் கொண்டிருக்கிறது. இது ஏன்?
அடுத்தடுத்த தாக்குதல்கள்
ஒன்றிய அரசு 2016 ஆம் ஆண்டு ரூ 500, ரூ.1000 நோட்டு கள் செல்லாது என்று அறிவித்தபொழுது நாடு மிகப் பெரிய நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்து நீண்ட நாட்க ளுக்கு பிறகு இயல்பு வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பியது. இந்த நடவடிக்கையின் மூலம் கருப்பு பணம், கள்ளப்பணம் எதையும் ஒன்றிய அரசு மீட்கவில்லை. மாறாக 17 லட்சம் கோடியாக இருந்த உயர் பண மதிப்பு நோட்டுகள் இப்பொழுது 33 லட்சம் கோடிகளாக மாறி இருக்கிறது. ரூபாய் மதிப்பும் குறைந்து இருக்கிறது. “ஒரே நாடு, ஒரே வரி!” என கவர்ச்சியான கோஷத்தை முன்வைத்து ஜிஎஸ்டி வரியை அமலாக்கி சிறு, குறு தொழில்களுக்கு கடுமையான நெருக்கடியை ஒன்றிய அரசு உருவாக்கியது. அத்தோடு மக்கள் வாங்கும் அனைத்து பொருள்கள் மீதும் வரி விதிப்பினால் விலை வாசி உயர்ந்து மக்கள் வாழ்வாதாரம் கடும் பாதிப் புக்கு உள்ளானது. பெருந்தொற்று நோய் காலத்தில் சிறு, குறு தொழில் களை பாதுகாப்பதற்கு பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு பல சலுகைகளை வாரி வழங்கியது. முறை சாரா தொழிலாளர்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் ஒன்றிய அரசு செய்யவில்லை. இதன் விளைவாக மீண்டும் பனியன், பவர்லூம், கைத்தறி போன்ற தொழில்கள் நெருக்கடிக்கு உள்ளானது. அதிலிருந்து மீள முடியா மல் இருந்த சூழலில் மீண்டும் ஒரு தாக்குதலை ஒன்றிய அரசாங்கம் ஜவுளி தொழில் மீது தொடங்கியது.
கைவிடப்பட்ட சிசிஐ கொள்முதல்
இந்திய சுதந்திரத்திற்கு பின்னால் விவசாயிகள் நலனை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டது இந்திய பருத்தி கழகம் (சிசிஐ). மத்திய அரசு நிர்ணிக்கக்கூடிய விலையை கொடுத்து விவசாயிகளிடம் பருத்தியை வாங்கி வருடம் முழுவதும் ஒரே சீரான விலையில் பஞ் சாலைகளுக்கு கொடுக்கக்கூடிய நிறுவனமாக இது செயல் பட்டு வந்தது. மோடி தலைமையிலான மத்திய அரசாங் கம் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இனிமேல் இந்திய பருத்தி கழகம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டாம், தனியார் கொள்முதல் செய்து கொள்ளட்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதன் விளைவாக கடந்த பல வருடங்களாக ஒரு கண்டி (356 கிலோ) கொண்ட பஞ்சு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை ஏற்ற இறக்கமாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு பின் இந்தியாவின் பெரும் முதலாளிகளும், கார்ப்பரேட் கம்பெனிகளும் விவ சாயிகளிடம் பருத்தி வாங்கி தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். பஞ்சு பதுக்கலின் மூலமாக செயற்கை பற்றாக்குறையை உருவாக்கி பஞ்சின் விலையை மிகக்கடுமையாக உயர்த்தினர். குறிப்பாக 2022 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு கண்டி பஞ்சின் விலை ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் வரை உயர்ந்தது. இதன் விளைவாக பனியன், விசைத்தறி, கைத்தறி போன்ற தொழில்கள் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளா னது. 2021 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நெருக்கடி இன்று வரை தொடர்கிறது. ஒன்றிய ஆட்சியாளர்கள் இந்த நெருக் கடியை தீர்ப்பதற்கு பதிலாக பார்வையாளராக இருந்து கொண்டிருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றிய அரசின் அறிவிப்பு காரணமாக பஞ்சுவிலை கடுமையாக உயர்ந்ததை மேலே உள்ள அட்டவணை மூலம் அறியலாம். இதன் தொடர் விளைவாகவே பனியன், விசைத்தறி, கைத்தறி தொழில்கள் கடுமையாக பாதித்து இன்று தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. ஒன்றிய அரசின் கொள்கைகளால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்திருக்கின்றனர். இந்தியாவின் உள்நாட்டு மக்கள் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
அம்பலப்படுத்திய ஆக்ஸ்ஃபார்ம்
ஆக்ஸ்ஃபார்ம் அமைப்பு ஒரு பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளின் பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்து பல அதிர்ச்சி தரும் விவரங்கள் இதில் வெளியாகி உள்ளது. அதில் இந்தியா பற்றி குறிப்பிட்டுள்ள பகுதி 1.2.2023 ஆம் தேதி ஆனந்தவிகடன் புத்தகத்தில் ஒரு பகுதி வெளி வந்துள்ளதை பார்க்கலாம். உலகிலேயே மிக அதிகமாக ஏழைகள் இருப்பதும், உலகிலேயே மிக வேகமாக பெரும் பணக்காரர்கள் உருவானதும் ஒரே நாட்டில் தான்! என்பது வேதனை தரும் உண்மை அந்த நாடு இந்தியா எனக் குறிப்பிடுகிறது. அடித் தட்டு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஒரு ரூபாய் சம் பாதிக்கிற நேரத்தில், பெரும் பணக்காரர் ஒருவரால் 17 லட்சம் ரூபாய் சம்பாதித்து விட முடிகிறது. 2020 ஆம் ஆண்டில் 102 பில்லியனர்கள் (பெருங் கோடீஸ்வரர்கள்) இந்தியாவில் இருந்தார்கள். 2022 இல் இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து 166 பேர் என ஆகி யிருக்கிறது.
அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு
இந்தியாவின் முதல் (டாப்) 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.54.12 லட்சம் கோடி. இந்தியா வில் 10 சதவிகிதம் பணக்காரர்களிடம் நாட்டின் 60 சதவிகித சொத்து குவிந்திருக்கிறது. அடித்தட்டில் உள்ள 50 சதவிகித மக்களிடம் இருக்கும் சொத்துக்கள் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே. மேலும் ஏழைகள் நிலை இந்தியா வில் எப்படி உள்ளது என குறிப்பிடுகிறபொழுது, இந்தியா வில் பட்டினி பிரச்சனை, ஏழைகள் எண்ணிக்கை 2018இல் 19 கோடியாக இருந்தது, 2022 ஆம் ஆண்டில் இந்த எண் ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருக்கிறது என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குள் மரணம் அடையும் குழந்தைகளில் 65 சதவிகித மரணத்திற்கு காரணம் ஊட்டச் சத்துள்ள உணவு கிடைக்காதது தான் என உச்ச நீதி மன்றத்தில் ஒன்றிய அரசே கொடுத்துள்ள விவரம் அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சம் பாத்தியத்தில் 53 சதவீதம் பணத்தை உணவுக்காக செல வழிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 2022 மார்ச்சில் வெளியான உலகவங்கி அறிக்கைப்படி 17 சதவீத அடித் தட்டு மக்கள் திடீர் மருத்துவ செலவுகளால் கடனாளியாகித் தவிக்கிறார்கள் என்று கூறுகிறது. இதற்கான காரணம் இந்தியா மொத்த செலவில் சுகாதாரத்திற்காக ஒதுக்குவது 3.64 சதவிகிதம் மட்டுமே ஆனால் சீனா, ரஷ்யா 10 சதம், பிரேசில் 7.7 சதம், தென்னாப்பிரிக்க அதிகபட்சமாக 12.9 சதவிகிதம் செலவழிக்கின்றன அண்டை நாடுகளான பாகிஸ்தான் 4.3 சதவீதம், வங்கதேசம் 5.19 சதவீதம், இலங்கை 5.88 சதவீதம், நேபாளம் 7.8 சதவீதம் செல விடுகின்றன என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
பெரும் பணக்காரர்களின் அரசு
இந்த ஏற்றத்தாழ்வுக்கு என்ன காரணம்? அடித்தட்டு குடும்பத்தினர் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியா மல் தவிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பெரும் பணக் காரர்களுக்கு நிறைய பணம் சென்று சேரும் வகையில், அர சின் திட்டங்களும், அரசின் கொள்கை முடிவுகளும், வியா பார ஒப்பந்தங்களும் வடிவமைக்கப்படுகின்றன. அரசியலி லும், அரசின் கொள்கை முடிவுகளிலும் செல்வாக்கு செலுத்த முடிவதால் பெரும் பணக்காரர்கள் மென்மேலும் சொத்து சேர்க்க முடிகிறது என அறிக்கை குறிப்பிடு கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த வருவாயில் வருமான வரியை விட ஜிஎஸ்டி வரி தான் அதிகம் வருகிறது. கடந்த 2021 - 2022 ஆம் நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி.வரி ரூ.14.83 லட்சம் கோடி. இதில் இந்தியாவின் 3 சதவீத சொத்துக்களை வைத்திருக்கும் 50 சதவீத ஏழை மக்கள் கட்டும் ஜிஎஸ்டி வரி 64% நடுத்தர மக்கள் 37 சதவி கிதம். பேர் கட்டிய ஜிஎஸ்டி வரி 33 சதவிகிதம். மக்கள் தொகையில் 10 சதவிகிதமாக உள்ள, நாட்டின் மொத்த சொத்தில் 60% சொத்துக்கள் வைத்திருக்கக் கூடிய பெரும் பணக்காரர்கள் கட்டக்கூடிய ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் மட் டுமே. அடுத்து 2019 ஆம் ஆண்டு பெரும் நிறுவனங்க ளுக்கு கார்ப்பரேட் வரியை 30 சதத்தில் இருந்து 22 சதமாக குறைத்துள்ளது அரசு. அத்தோடு மட்டுமில்லாமல் புதி தாக ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதம் மட்டுமே கார்ப்பரேட் வரி என்ற கூடுதல் சலுகையையும் ஒன்றிய அரசு அளித்துள்ளது.
சமூக நல திட்டங்களுக்கு வெட்டு
இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.1.84 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அர சுக்கு வரவேண்டிய வரி வரு மானம் குறைகிறது. இன் னொரு பக்கம் வரி விலக்கு, ஊக்கத்தொகை என்று கடந்த 2020 - 21 ஆம் நிதியாண்டில் மட்டும் தரப்பட்ட சலுகை ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 285.54 கோடி. மேற்கண்ட வருமான இழப்பை ஈடு கட்டுவதற்காக மாணவர்களுக்கு வழங்கி வந்த உதவித்தொகை, கல்வி, சுகாதாரம், சமூகநலத் திட்டங் கள் போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டது. பல பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது கொரோனா கொடுதொற்று காலத்திலும், இரக்கமற்ற முறையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகள் உயர்த்தப்பட்டன இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். மேற்கண்ட நிலமைகளை அறிக்கை குறிப்பிடும்பொ ழுது பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, கொரோனா ஊரடங்கு என்ற எந்த பிரச்சனை வந்தாலும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. ஆனால் வரி செலுத்துவது என்ற விஷயம் வரும் போது மட்டும் ஏழைகளை கேடயம் மாதிரி முன்னால் அனுப்பிவிட்டு பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள்
இந்த பெரும் பணக்காரர்கள் என்று குறிப்பிடுகிறது. ஆக்ஸ்ஃபாம் அமைப்பு சில பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது. அடித்தட்டு மக்களின் வரிச்சுமையை குறைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைத்தால் அடித்தட்டு குடும்பங்க ளின் செலவு குறையும். அரசு மருத்துவமனையை மேம் படுத்தி மருத்துவச் செலவை குறைக்க வேண்டும். குறைந்த பட்ச கூலி என்பது ஒரு குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் அதை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும். அரசும் அதையே சொல்கிறது. 2022 மே மாதம் பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் சார்பில் The state of lnequality in India என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. அதுவும் ஏற்றத்தாழ்வு குறித்து கவலை தெரிவித்துள்ளது. சுகாதாரம், கல்வி குடும்பச் செலவுகள், தொழிலாளர்கள் சூழல் என எல்லாவற்றிலும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக குறிப்பிட்ட அந்த அறிக்கை, 100 நாட்கள் திட்டத்தை நகர்ப்புறத்திலும் வேலை வாய்ப்பு உறுதித் திட்ட மாக மாற்ற வேண்டும் என்றது. வருமான இடைவெளியை குறைக்க அடித்தட்டு குடும்பங்களுக்கு வருமானமாக அரசு மாதமாதம் ஒரு தொகையை கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. குறிப்பாக, ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமா னம் உள்ளவர்களுக்கு 2 சதவிகிதம் வரி விதித்தால் பட்ஜெட் வரவில் 121 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் ஆக்ஸ்பாம் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் கிராமப்புறத் தில் விவசாயத்தை நம்பி வாழக்கூடிய மக்கள் 60 சதவிகி தம் பேர். இது மக்கள் தொகையில் சற்று ஏறக்குறைய 80 கோடி பேர் ஆகும். நகர்புறங்களில் உள்ள ஏழை, அடித் தட்டு மக்களிடம் வாங்கும் சக்தி உருவானால்தான், நகர்ப் புற தொழிலாளிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்கள் விநியோகம் ஆகும். ஒன்றிய அரசாங்கம் ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள் தங்களுடைய வருமானத்தை உயர்த்தி கொள்வதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக பெருமுதலாளிகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் வளர்க்கக்கூடிய நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வரு கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் தாக்குதல் ஒருபுறம் இருக்க, மாநில அரசு சமீபத்தில் அறிவித்துள்ள சொத்துவரி, மின் கட்டண உயர்வு, சிறு தொழில்களை கடுமையாக பாதிக்கி றது. மாநில அரசு மின் கட்டண உயர்வை குறைப்பதும், சொத்து வரியை குறைப்பதும் இந்த தொழிலை பாது காப்பதற்கு உதவி செய்யும்.
இந்த பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பிப்ரவரி 14ஆம் தேதி சிறு, குறு தொழில் பாதுகாப்பு, தொழிலாளர் வாழ்வுரிமை மாநாட்டை நடத்துகிறது. இதில் சிறு, குறு, நடுத்தர தொழில் உற்பத்தியாளர்கள், பெருந்திரளான தொழிலாளர்கள், திருப்பூர் மக்கள் அணிதிரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறோம்.