articles

img

கணக்கோடு ‘கை’ கோர்க்கலாம் - மொ.பாண்டியராஜன்

சூப்பர். நீங்கள் போட்டிருந்த பேட்டன்கள் பார்க்வே அழகாக இருந்தது. சிலர் கிரையான்ஸ்ல போட்டிருந்தீங்க. அதுவும் அருமையாக இருந்தது. இப்போது பார்த்தீங்களா? உங்களால் பேட்டன் களை புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. ஒருத்தர் எழுதியிருந்தீங்க, செல்போன் டவர் கூட பேட்டனை பார்த்ததாக. ஆம் அதுவும் பேட்டன்களால் ஆனதுதான். இனி நீங்கள் பார்க்கும் இடமெங்கும் பேட்டன்களை பார்க்கலாம். இப்போது புரிந்திருக்கும் கணக்கு நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். அது மட்டும்மா? காலையில் எழுந்தவுடன் நம்ம அம்மா வீட்டு வாசலில கோலம் போடுராங்கலா, நாமகூட சில சமயங்களல கோலம் போடுவோம் தானே. சரி அப்ப இந்த கோலத்த கண்டுபிடிச்சது? அதுவும் தென்னாப்பிரிக்கா மக்கள் தான்.  முந்தின பகுதியிலேயே சொல்லியிருக்கேன். தென்னாப்பிரிக்காவின் மத்திய பகுதியில் சாக்வே மக்கள் இருந்தார்கள் என்று.

இவர்கள் மண்ணில் அழகிய வரைபடங்களை உருவாக்கி மகிழ்ந்தனர்.  இப்படி இவர்கள் வரையும் படத்திற்கு சோனா வரைபடங்கள் என்று பெயர். இந்த வரைபடத்தை வரைவதற்கு பயிற்சி கொடுத்திருக்காங்க. அதாவது கதையை சொல்லிக் கொண்டே வரைபடம் வரைவதற்கு பயிற்சி பெற்ற வல்லுனர்கள் இருந்திருக்காங்க. இந்த வரைபடங்களை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டகோடுகளை இணைப்பதன் மூலம் உருவாக்கினர். இப்படி உருவாக்குனதுதான் கோலங்கள். கோலங்களில் பிரமிக்க வைக்கும் வடிவங்களை சாக்வே மக்கள் உருவாக்கினாங்க. அந்த கோலங்களில் சமச்சீர் சிந்தனைகளும், வடிவியல் பண்புகளும் ஏராளமாக நம்மால் பார்க்க முடியும். சோனா கோலங்களில் வைக்கப்படும் புள்ளிகளை வச்சு நம்மால் எத்தனை கோடுகளில் இந்த கோலத்தை போட முடியும் என்பதை கண்டுபிடிக்க முடியும். நாம 4X3 புள்ளி வச்ச கோலத்தை எடுத்தக்குவொம். இதன் பொது வகுத்தி பார்த்தால் ஒன்னு தானே. ஒரே கோட்டால் இதை வரைய முடியும் என்பதை இதனால் அறியமுடியும். ஒரே கோட்டைக் கொண்டே சமச்சீராக மிகப் பெரிய கோலங்களை போட முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவங்க மணல புள்ளிகளை வைக்கும் போது இரண்டு விரல்களை பயன்படுத்துராங்க. ஒன்னு சுட்டு விரல். இன்னொன்னு மோதிர விரல். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட தூரத்தில் தான் புள்ளிகள் வைக்கப்படும். இந்த விரல்கள் கணிதம் எழுதுவது போல இடமிருந்து வலமாக தான் வைத்து வருகிறார்கள்.  இப்படி அவர்கள் போடும் கோலங்கள் மூலமாக பாரம்பரிய கதைகளை கடத்தி வந்திருக்காங்க. பெரும்பாலும் விலங்கள் குறித்த கோலங்களையும், கதைகளையும் கடத்தி வந்திருக்கிறார்கள். நீங்களும் ஒரு சோனா கோலம் போட்டு அனுப்புங்கள். மூன்று புள்ளிகள் ரோவிலும், மூன்று புள்ளிகள் காலத்திலும் வைத்துக் கொள்ளுங்கள். அதனை உங்களுக்கு தெரிந்த வகையில் கோலம் போடுங்கள்

.    .    . .    .    . .    .    . மேலும் இதில் எத்தனை வகையான வலைகோடுகளை பயன்படுத்துகிறோம் என்பதையும் நீங்கள் எழுதுங்கள். மேலும் ஐந்து புள்ளிகளை கொண்டு நீங்கள் எத்தனை வகையில் போடமுடியும் என்பதையும் வரைந்து ஒரு போஸ்ட் கார்டில் போடுங்கள். நாம் அன்றாட வாழ்க்கை தொடங்கும் போதே கணக்கோடு கை கோர்க்கலாம்.