articles

தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாடு

கொரோனா பெருந்தொற்றினால் நமது  நாட்டின் பொருளாதாரம் முடக்கப்பட்டது. அவ்வாறு முடங்கியதில் அதிகமாக பாதிகு கப்பட்டவை சிறு, குறு, நடுத்தர தொழில்க ளும், அவற்றைச் சார்ந்திருந்த தொழில் முனைவர்களும், தொழிலாளர்களும் தான். பெரும்தொற்றுக் காலம் முடிந்து மறுபடி யும் இயல்பான நிலை திரும்பிக்கொண்டி ருந்தாலும், அந்தத் தொழில்கள் முன் போன்று செயல்பட முடியவில்லை. இதறு கான காரணங்களைக் கண்டறிந்து, அவை களைக் களைந்து, இந்தத் தொழில்களை யும், நமது நாட்டின் பொருளாதாரத்தையும் மீண்டும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல ஒன்றிய அரசும், மாநில அரசும் என்ன செய்ய வேண்டும் எனபதை இந்த மாநாடு ஆராயும். இதன் பரிந்துரைகளை  நடை முறைப்படுத்த ஒன்றிய அரசையும் மாநில அரசையும் வலியுறுத்தும்.  தமிழ் நாட்டில் 49.48 லட்சம் குறு, சிறு தொழில்கள் இருப்பதாகவும் அது இந்தியா வில் உள்ள அவ்வகைத் தொழில்களில் 9  விழுக்காடு என்றும் ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில்  உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கா ளம் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மூன் றாம் நிலையில் தமிழ் நாடு இந்த எண்ணிக் கையில் உள்ளது. இந்தத் தொழில்களில் தமிழ்நாட்டில் 32.27 லட்சம் பெண்கள், 64.45 லட்சம் ஆண்கள் ஆக, மொத்தம் 96.73  லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற் றுள்ளனர் என்றும் அதே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவில் இந்த  வகைத் தொழில்களில் ஈடுபட்டள்ளவர்க ளில் 8.7 விழுக்காடு.

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களில் சுமார்  50 சதவிகிதம் கிராமங்களில் உள்ளன. எனவே அங்கு அவை தரும் வேலைவாய்ப்பு கள் மிகத்  தேவையானவை. சுமார் 16.55 விழுக்காடு குறு, சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். குறு, சிறு, நடுத்தரத் தொழில் கள் நமது நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) கிட்டத்தட்ட 33 சதவிகிதத்தை அளிக்கிறது.  இந்த அளவிற்கு, நாட்டின் உற்பத்தி யிலும், வேலைவாய்ப்பை உண்டாக்குவதி லும், கிராமப்புற வளர்ச்சிக்கும், பெண்களுக் கும், சமுதாயத்தில் பின் தங்கிய வகுப்பின ருக்கும் முக்கியமான குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு அரசுகள் எவ்வளவு கவனம் தருகின்றன என்ற கேள்வி எழுகின்றது. இந் தக் கேள்விக்கு அரசுகளில் பதில்கள் பெரும் பாலும் அவர்கள் நடைமுறையில் உள்ள பல திட்டங்களைப்  பற்றியதுதான். அவை எந்த  அளவு செயல்படுகின்றன, பலன் அளித்துள் ளன என்பதை பற்றித் தொழில் முனை வோர் மகிழ்ச்சி தெரிவிப்பது இல்லை. கோயம்புத்தூர் மற்றும் மேற்கு மாவட் டங்களின்  பொருளாதாரங்களுக்கு  குறு,  சிறு, நடுத்தரத் தொழில்கள் தான் அச்சா ணிகள். சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் பெரிய தொழில்களாலும், சேவை நிறுவனங்களாலும் வளமை பெற் றுள்ளன. கோவை மற்றும் மேற்கு மாவட்டங் கள் தொழில்களையே நம்பியுள்ளன.  கோவையிலும் அதைச் சுற்றியுள்ள மாவட் டங்களில் செயல்படும் தொழில்களின் பிரதி நிதிகள் மார்ச் 5 ஆம் தேதியன்று நடை பெறும் மாநாட்டில் கலந்துகொள்ள உள் ளார்கள். தங்கள் தொழில்களில் எதிர் கொள்ளும் சிரமங்களைப்பற்றியும், அவை களுக்கான தேர்வுகளைப்பற்றியும் பேச வுள்ளார்கள். அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்க ளும், அரசு அதிகாரிகளும் இந்த மாநாட் டில் கலந்துகொள்ள உள்ளார்கள். அவர்கள் இந்த மாநாட்டில் கூறப்படும் தீர்வுகளை  ஒன்றிய அரசிடமும், மாநில அரசிடமும் எடுத் துச் சொல்லி, ஆவன செய்வார்கள் அன்று எதிர்பார்க்கிறேன்.

இறுதியாக நான் சில குறிப்புகளைச் சொல்ல விரும்புகிறேன். கோவையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதி களிலும், பெருமளவில் தொழிலாளர்கள் தங் கும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இப் போது உள்ள வீட்டு  மற்றும் தங்கும் அறை களின்  எண்ணிக்கையும்  வசதிகளும்  போது மானதாக இல்லை. மேலும் அவற்றின் விலை தொழிலாளர்களின் வருமானத்துக்கு விஞ்சி யதாக உள்ளது  எதிர்காலத்தில் தேவைப்படும் திறமை களைத் (SKILLS) தரும் பயிற்சிகளைத்தரும் திட்டங்களைத் தொடங்கவேண்டும். அவற் றில் சேரும் இளைஞர்களுக்கு கவர்ச்சியான ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ள தொழிலா ளர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.  பெரும் தொழில்கள் ancillarisation என்று சிறு தொழில்களுக்கு வேலைகள் தரு வதை ஊக்குவிக்க வேண்டும். வேளாண் மைத் தொழிலிருந்து வெளியேறும் குடும்பங் களுக்கு குறு, சிறு தொழில்கள்தான் வேலை வாய்ப்புக்களைத் தர முடியும். எனவே தமிழ் நாட்டுக்கு குறு, சிறு தொழில்கள் மிக முக்கிய மானவை. 

-து.பாலசுந்தரம், தலைவர்,
கோயம்புத்தூர் கேப்பிட்டல் லிமிடேட்