சுசிலா கோபாலன் : தொழிலாளர் தலைவி
கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவராக திகழ்ந்த தோழர் சுசிலா கோபாலன், தன் மாணவப் பருவத்திலேயே அரசியல் களத்தில் காலடி எடுத்து வைத்தார். 1947இல் திருவாங்கூர் திவானை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட அவர், தொடர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றதால், ஒரே கல்லூரியில் படிக்க இயலாமல் நான்கு கல்லூரிகளில் பட்டப்படிப்பை முடித்தார். புன்னபுராவயலார் போராட்டத்தில் அவரது குடும்பம் பெரும் பங்காற்றியதால் உத்வேகம் பெற்ற சுசிலா, 1948இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஏராளமான மாணவர்களை அரசியல் மயப்படுத்தி, சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அவர்களை அணிதிரட்டிய சுசிலா, அச்சமில்லா உறுதியுடன் 1965-66 காலகட்டத்தில் 16 மாதம் சிறைவாசம் அனுபவித்தார். அவசர நிலை காலத்திலும் சிறையில் அடைக்கப்பட்ட அவர், அதனை கொள்கை உறுதிக்கான சோதனையாகக் கருதி தைரியமாக எதிர்கொண்டார். தொழிலாளர் உரிமைக்கான போராட்டங்கள் மாதர் இயக்கத்தை இந்தியாவில் துவக்குவதற்கு முன்பே, கேரளாவின் நன்கு அறியப்பட்ட தொழிற்சங்கத் தலைவராக திகழ்ந்த சுசிலா, குறிப்பாக கேரள கயிறு திரிக்கும் தொழிலாளர்களின் கூலி மற்றும் வாழ்வாதார உரிமைக்கான போராட்டத்தில் பெரும் பங்காற்றினார். அதிகாலை முதல் இரவு வரை கடுமையாக உழைத்தும் ஏமாற்றப்பட்ட கயிறு தொழிலாளர்களின் நிலையை உணர்ந்து, அவர்களுக்காக குரல் கொடுக்கத் தொடங்கினார். கயிறு திரிக்கும் தொழிலாளர்களை மாநிலம் முழுவதும் அணிதிரட்டி, அவர்களின் மாநிலத் தலைவராக நீண்ட காலம் பணியாற்றினா
1952இல் சமூக மாற்றத்திற்கான பாதையில் தன்னோடு இணைந்து பணியாற்றிய தோழர் ஏ.கே. கோபாலனை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் இணைந்து தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடிய சுசிலா, 1964இல் கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுபட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். அரசியல் மற்றும் சட்டமன்ற செயல்பாடுகள் 1965இல் காங்கிரஸ் அரசால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போதே, கேரள சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுசிலா, திறமையான நாடாளுமன்றவாதியாக விளங்கினார். 1961இல் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தபோது, வரதட்சணை தடுப்பு சட்டத் திருத்தத்திற்கான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப்பினராக பணியாற்றி, பெண்களின் உரிமைக்கான கருத்துக்களை பதிவு செய்தார். 1996 முதல் 2001 வரை இ.கே. நாயனாரின் இடதுசாரி அரசில் தொழில் மந்திரியாகவும், சமூக நலத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு, தொழிலாளர் நலன் சார்ந்த பல சட்டங்களை கொண்டு வந்தார். தொழிலாளர்களின் பணிச்சூழல் மேம்பாடு, ஊதிய உயர்வு, சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் என அவரது காலத்தில் பல முற்போக்கு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான வேலைச்சூழலை உருவாக்கவும் முன்னுரிமை அளித்தார். பெண்ணுரிமை மற்றும் மாதர் இயக்கப் பங்களிப்பு பெண்களுக்கான கல்வி மற்றும் சுகாதார உரிமைகளை
மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்திய சுசிலா, கேரளத்தில் கிராமப்புற கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தினார். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தினார். சாதிய அமைப்பை எதிர்த்து பெண்களை ஒருங்கிணைத்த அவர், இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டு, “தி கோல்டன் ஃப்ளவர்” என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்த்தார். பெண் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துவதற்காக இடைவிடாது உழைத்த சுசிலா, 1980இல் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவராகவும், பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதிக் காலம் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். தன்னலம் பாராது உழைப்பாளி மக்களுக்காக போராடிய சுசிலா கோபாலன், கம்யூனிச இயக்க வரலாற்றில் தனக்கென நிரந்தர இடத்தைப் பெற்று, கேரள சமூக மற்றும் அரசியல் இயக்கங்களுக்கு இன்றும் முன்மாதிரித் தலைவராக திகழ்கிறார். கட்சி தனக்கு அளித்த அனைத்து பொறுப்புகளையும் ஒரு கம்யூனிஸ்டுக்கு உண்டான கம்பீரத்தோடும் கொள்கைத் தெளிவோடும் நிறைவேற்றிய அவரது வாழ்க்கை, இன்றைய தலைமுறைக்கும் ஊக்கமளிக்கும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.
கல்பனா தத் வீர வானின் நட்சத்திரம்!
சிட்டகாங்கின் மண்ணில் பிறந்து, இந்திய விடுதலைப் போரின் நெருப்பில் உருவான புரட்சி தீபமாய் ஒளிர்ந்தவர் கல்பனா தத். 1913 ஜூலை 27-இல் கிழக்கு வங்காளத்தின் ஸ்ரீபூர் கிராமத்தில் பிறந்த இவர், சாதாரண பெண்ணல்ல - உயிரையும் துச்சமெனக் கருதி தொழிலாளர் வர்க்கத்திற்காக போராடிய வீரமங்கை! இளமையில் எழுந்த எழுச்சி கொல்கத்தாவின் பெத்துன் கல்லூரியில் படிக்கும்போதே புரட்சிக்கனல் மனதில் பற்றிக்கொண்டது. ‘சாத்ரி சங்கா’ அமைப்பில் இணைந்து, ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் குதித்தார். சிறுவயதிலேயே, மக்களின் விடுதலையே தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட இந்த வீரமகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் தொழிலாளி வர்க்க நலன்களுக்கான போராட்டத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டார். சிட்டகாங் புரட்சியின் வீராங்கனை 1930-இல் நடந்த புகழ்பெற்ற சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதலுக்குப் பின்னர், தோழர் சூர்யா சென் தலைமையிலான இந்திய குடியரசு ராணுவத்தில் இணைந்து, தோழி ப்ரீதிலதா வடேதாருடன் ஐரோப்பிய கிளப்பைத் தாக்கும் திட்டத்தில் ஈடுபட்டபோது, தற்செயலாக கைது செய்யப்பட்டார். சிறைக்கம்பிகளுக்குள்ளும் சுதந்திர சிந்தனை “நான் சிறையில் இருக்கலாம், ஆனால் எனது சிந்தனைகள் சுதந்திரமானவை!” என்ற அவரது புகழ்பெற்ற கூற்று, ஒவ்வொரு போராளியின் உள்ளத்திலும் புரட்சித் தீயை மூட்டியது. 1933-இல் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற கல்பனா, சிறையிலேயே மார்க்சிய சித்தாந்தத்தை ஆழமாகக் கற்றார்.
சிறைக்கூடம் அவருக்கு புரட்சிப் பள்ளிக்கூடமாக மாறியது! கைதிகளுக்கிடையே புரட்சிகர சிந்தனைகளை பரப்பி, அவர்களின் உள்ளத்தில் விடுதலை வேட்கையை வளர்த்தார். வங்காளப் பஞ்சமும் மக்கள் சேவையும் 1939-இல் விடுதலையான பின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர உறுப்பினராக இணைந்து, வர்க்க அரசியலை மக்களிடையே கொண்டு சென்றார். 1943-இல் வங்காளப் பஞ்சத்தின் போது, பட்டினியால் வாடிய மக்களுக்கு நிவாரண சமையலறைகளை அமைத்து, “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினார். கிராமம் கிராமமாகச் சென்று பஞ்சத்தால் வாடிய மக்களுக்கு உணவளித்து, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கினார். அசைக்க முடியாத கொள்கைப் பற்று தோழர் பி.சி. ஜோஷியுடன் திருமணம் செய்த பின்னரும், தனது புரட்சிகரப் பணிகளை தளராது தொடர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதிலும் முனைப்பாகச் செயல்பட்டார். பி.டி.ரணதிவே தலைமையின் கீழ் கட்சியில் ஏற்பட்ட மாற்றத்தின் போது, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட போதிலும், தனது கொள்கையிலிருந்து பின்வாங்கவில்லை. மறைந்தும் மறையாத புரட்சி ஜோதி தனது வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காகவே வாழ்ந்த கல்பனா, “உண்மையான விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவுவது மட்டுமே” என்ற லெனினியக் கொள்கையை உறுதியாக நம்பினார். 1995 பிப்ரவரி 8-இல் கல்கத்தா மருத்துவமனையில் மறைந்த இந்த வீரமகளின் இறுதிச் சடங்கை பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பிடவில்லை. வர்க்க அரசியலுக்கு அப்பாற்பட்ட பெருநிறுவன ஊடகங்கள் இந்த மாபெரும் புரட்சியாளரின் சேவைகளை அங்கீகரிக்கத் தவறின. ஆனால், ஒவ்வொரு உண்மையான தோழரின் இதயத்திலும் அவரது நினைவு இன்றும் வாழ்கிறது. “இன்று புரட்சியாளர்கள், நாளை புரட்சி!” என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த கல்பனா தத்தின் சிவப்புக் கொடி என்றும் பறக்கட்டும்! லால் சலாம், தோழர் கல்பனா தத்!
மங்களேஸ்வரி தேவ் வர்மா : கல்வியின் விடியல்
திரிபுராவின் சதார் கோட்டத்தின் ராஜ்கட் எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த சுபெராம் தேவ் வர்மா - அஹில்யா தேவ் வர்மா ஆகியோரின் மகளாக 1935ஆம் ஆண்டு மங்களேஸ்வரி பிறந்தார். அக்காலத்தில் அவரது கிராமத்தில் பள்ளியே கிடையாது. அருகிலிருக்கும் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் காடு ஒன்றைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்ததால், பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை, குறிப்பாகப் பெண் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்பவே இல்லை. யாரேனும் தங்களது குழந்தைகளுக்கு கல்வியை அளிக்க விரும்பினால், தனியாக ஆசிரியர் ஒருவரை நியமித்து அவருக்கு தானியமும் பணமும் ஊதியமாக கொடுக்க வேண்டியிருந்தது. இதனால் பணக்கார்கள் மட்டுமே தங்களது குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுக்க முடிந்தது. பள்ளியில் இருந்து ஆசிரியை வரை கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த மங்களேஸ்வரிக்கு, தனியாக ஆசிரியர் நியமிக்கும் பொருளாதார வசதி இல்லாததால், தங்களது குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கு தனியாக ஆசிரியரை நியமித்து கல்வியை அளித்து வந்தவர்களின் வீட்டிற்கு அவரை அவரது தந்தை அனுப்பி வைத்தார்.
அங்கு கல்வி கற்ற ஒரே பெண்குழந்தை மங்களேஸ்வரிதான். தனது கிராமமே உலகம் என வாழ்ந்து வந்த மங்களேஸ்வரிக்கு, ஆசிரியர் தாராமோகன் தேவ் வர்மா மூலம் வெளி உலகத்திற்கான சாளரம் திறந்தது. திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவிற்கு அவரது ஆசிரியர் அழைத்துச் சென்று, நீதிபதி ஜெய் சிங் ஹக்கிமை சந்திக்க வைத்தார். கல்வி கற்றிட மங்களேஸ்வரி காட்டிய ஆர்வமும் உறுதியும் ஹக்கிமை வெகுவாக கவர்ந்தது. ஹக்கிமின் ஆதரவுடன், ராஜ்கட்டில் வசித்து வந்தவர்கள் ஒன்றிணைந்து பள்ளி ஒன்றைக் கட்டினர். அந்தப் பள்ளியின் முதல் ஆசிரியையாக, வெறும் 11 வயதான மங்களேஸ்வரியை ஹக்கிம் நியமித்தது அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. இதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்த மங்களேஸ்வரி, மற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே தனது படிப்பை தொடர்ந்தார். தன்னைப் போலவே கல்வியால் விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணத்துடன், குழந்தைகளிடம் அன்பும் ஆதரவும் காட்டி கற்பித்தார். புரட்சிகர பயணம் 1945இல் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையிலிருந்து தப்பி திரிபுராவின் காடுகளில் தஞ்சமடைந்திருந்த கம்யூனிஸ்டுகள், பழங்குடியின மக்களை அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கல்வி இயக்கத்தின் நோக்கம் குறித்து பிரச்சாரம் செய்திட ராஜ்கட்டிற்கு தசரத் தேவ் என்ற கம்யூனிஸ்ட் செயல்வீரர் வந்தார். இவரின் புரட்சிகர சிந்தனைகளால் கவரப்பட்ட மங்களேஸ்வரி, அவருடனான உறவை வளர்த்து, 1952 மார்ச் மாதத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார்.
முன்னதாக 1951இல் மாதர் சங்கத்தில் இணைந்திருந்த மங்களேஸ்வரி, இது அவரது வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மாற்றத்தின் தலைவி தனது ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்த மங்களேஸ்வரி, மாதர் சங்கப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். 1953இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், பெண்களின் உரிமைகளுக்காக - குறிப்பாக பழங்குடியினப் பெண்களுக்காக - போராடத் தொடங்கினார். ஒரு காலத்தில் கல்வி மறுக்கப்பட்ட கிராமப் பெண்ணாக இருந்த அனுபவம், அவரை பழங்குடிப் பெண்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டில் மிகுந்த ஆர்வம் காட்ட வைத்தது. திரிபுராவின் பழங்குடிப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் மற்றும் சமூக மாற்றத்திற்கான விதைகளை விதைத்த மங்களேஸ்வரி, ஏழ்மையிலும் அடக்குமுறையிலும் வாடிய பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரும்பாடுபட்டார். அவரது தளராத உழைப்பால், திரிபுராவின் பல பகுதிகளில் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. பழங்குடிப் பெண்கள் சுயமாக நிற்க பல திட்டங்களை உருவாக்கினார். அவரது வாழ்க்கை, கல்வியால் மட்டுமே பெண்கள் விடுதலை பெற முடியும் என்ற உண்மைக்கு ஒரு சான்றாக திகழ்ந்தது. கம்யூனிச சித்தாந்தத்தை ஆழமாக நம்பிய அவர், வர்க்கப் போராட்டத்திலும் பெண்களின் உரிமைப் போராட்டத்திலும் தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார். வறுமையிலிருந்து விடுதலை பெற்று, நிலவுடமை ஆதிக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கத்தில் இறுதி வரை பணியாற்றிய இந்த அசாதாரணப் பெண்மணி, 2019 ஜுலை 5ஆம் தேதி தனது 93ஆவது வயதில் காலமானார். பழங்குடிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஏழைகளின் வாழ்வில் கல்வியின் ஒளியேற்றிய தோழர் மங்களேஸ்வரி தேவ் வர்மாவின் வாழ்க்கை, இன்றும் திரிபுராவின் மலைகளிலும் காடுகளிலும் விடுதலைப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
மல்லு ஸ்வராஜ்யம் : தெலுங்கானாவின் அக்னிச் சுடர்
தெலுங்கானாவின் மண்ணில் பிறந்த மல்லு ஸ்வராஜ்யம், தனது தாயார் சொக்கம்மா வின் புரட்சிகர சிந்தனையால் வழி நடத்தப்பட்டார். நிலப்பிரபுக்கள் குடும்பத் தில் பிறந்த போதிலும், 1930களில் எழுந்த இந்திய சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட சொக்கம்மா, தன் மக ளுக்கு “ஸ்வராஜ்யம்” (சுதந்திரம்) என்று அர்த்தமுள்ள பெயரிட்டார். தன் குழந்தை களுக்கு மனிதநேய மதிப்புகளைக் கற்பித்து, அந்த காலத்து நிலப்பிரபுக்கள் கடைப்பிடித்த ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டு முறைகளுக்கு எதிராக நிற்க கற்றுக்கொடுத்தார். வெறும் 11 வயதி லேயே தனது சகோதரருடன் தெலுங்கா னா விவசாயிகள் ஆயுதப் போராட்டக் களத்தில் குதித்த ஸ்வராஜ்யம், மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவலில் இருந்து உத்வேகம் பெற்று, எட்டு தசாப்தங்களுக் கும் மேலாக சிவப்புக் கொடியை அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தன் தோள்க ளில் சுமந்து செல்லும் வீரமங்கையா னார்.
நிஜாம் கொடுமைகளுக்கு எதிரான போர் நிஜாம் மன்னரின் ஆட்சியில் மக்கள் கொடூரமாக கொத்தடிமைகளாக உழை க்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு குடும் பத்திலிருந்தும் ஒருவர் நிஜாமின் நிலத்தில் கூலி இல்லாமல் இலவசமாக வேலை செய்ய வேண்டும் என்ற கொடிய அடக்கு முறை நிலவியது. நிலத்தில் உழைக்கும் பெண்கள் நிலப்பிரபுக்களுடைய ஆயுத மேந்திய குண்டர்களின் பாலியல் வல்லுற வுக்கும் பெரும் அவமதிப்புக்கும் இலக்கா யினர். இந்த கொடுமைகளை எதிர்த்து “பொறுத்தது போதும்” என்று ஆயுதம் ஏந்திப் பொங்கி எழுந்த விவசாயிகளுடன் ஸ்வராஜ்யம் ஒன்றிணைந்தார். ஏழை களுடன் கலந்து, குழந்தைத் திருமணங் கள் மற்றும் சாதியப் பாகுபாடு போன்ற பிற் போக்கான நிலப்பிரபுத்துவ பழக்க வழக்கங்களை இளம் வயதிலேயே எதிர்த்து, தலித்துகளை தெலுங்கானா வின் பாரம்பரிய மலர் நடனமான ‘பது கம்மா’வில் பங்கேற்க ஊக்குவித்து, பாரம் பரிய விலங்குகளை உடைத்து புதிய வர லாற்றை உருவாக்கினார். ஆயுதப் போராட்டத்தின் தலைவி 1946-51 காலத்தில் நிகழ்ந்த தெலுங் கானா விவசாயிகள் ஆயுதப் போராட் டத்தில் “ராஜக்கா தளம்” என்ற பெண்கள் படையின் தலைவராக பணியாற்றினார் ஸ்வராஜ்யம். ஏழு ஆண்டுகள் தலைமறை வாகச் செயல்பட்டு, தன் குழுவினருடன் சேர்ந்து மக்களுக்கு காவல்துறையிட மிருந்து தப்பிக்கும் வழிகளைக் கற்றுக் கொடுத்தார்.
நிலப்பிரபுக்களைத் தாக்குவ தற்கு பெண்களை அணிதிரட்டி, நிலப்பிர புக்களிடமிருந்து துப்பாக்கிகளைப் பறித்து மக்களிடம் விநியோகித்தார். மேஜர் ஜெய்பால் சிங் வழங்கிய இராணுவப் பயிற்சியில் பங்கேற்ற 300 பெண்களில் ஒருவராக, ராஜக்கா தளத்தின் தலைவ ராக இருந்த அவரது தலைக்கு விலையாக ரூ.10,000 அறிவிக்கப்பட்டது. சக்தி வாய்ந்த பேச்சாளரான ஸ்வ ராஜ்யத்தின் வார்த்தைகள், ஆயுதப் போராட்டத்தின் போது அவர் சுட்ட குண்டு களைப் போலவே ஆளும் வர்க்கத்தை கடுமையாகத் தாக்கின. சட்டத்தின் மூலம் சமூக நீதி ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பிறகு, தோழர் வி.என் (மல்லு வெங்கட நர சிம்ம ரெட்டி) என்று அன்புடன் அழைக் கப்பட்ட தோழரை மணந்த ஸ்வராஜ்யம், 1964இல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் நின்றார். 1978 மற்றும் 1983இல் துங்கதுர்தி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக் கப்பட்டார். 1981 முதல் 2002 வரை ஆந்திர பிரதேச மகிளா சங்கத்தின் மாநிலத் தலை வராகவும் பணியாற்றினார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, பாலியல் பலாத்கார பாதிக்கப்பட்ட ரமீஸா பீபிக்கு ஆதரவு திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்து, அரசியல் சார்புகளைக் கடந்து, சட்டமன்றத்தில் உள்ள அனைத்து பெண் உறுப்பினர்களையும் பாதிக்கப்பட்டவ ருக்கு ஆதரவாக அணிதிரட்டினார்.
தனது கடைசிக் காலத்தில், உடல் ரீதியாக பலவீனமாக இருந்தபோதும், கட்சி ஊழியர்களை மக்களுடன் நெருக் கமாக பணியாற்ற ஊக்குவித்த ஸ்வராஜ் யம், கார்ப்பரேட் சக்திகளால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வகுப்புவாதம் குறித்து எச்சரித்தார். படுக்கையில் இருந்த போதும்,மாதர் சங்க அலுவலகத்தில் தங்க விரும்பி, தனது கடைசி நாட்களை பெண் ஆர்வலர்களுடன் செலவிட்டு, தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்து, சமூகத்திற்கு இறுதிப் பங்க ளிப்பாக வழங்கினார். “பெண்களின் விடுதலையின்றி, சமூக விடுதலை இல்லை” என்ற கோட்பாட்டை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த தோழர் மல்லு ஸ்வராஜ்யம், மார்ச் 19 அன்று தனது 91 ஆவது வயதில் மறைந்தாலும், தெலுங்கா னாவின் வீர மகளாக, செங் கொடியின் அழியாத ஒளியாக என்றென்றும் நிலைத் திருப்பார்.