இந்திய மாணவர் சங்க தமிழ்நாடு மாண விகள் மாநில சிறப்பு மாநாடு கன்னியா குமரி மாவட்டம் புனித சவேரியர் பொறி யியல் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.1) எழுச்சிகரமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்வி வளாகங்க ளிலிருந்து 327 மாணவிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
சிந்திக்கும் உரிமையை பறிக்கும் அரசு
மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய தீப்சி தாதர், இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக மாண விகள் சந்திக்கும் மோசமான பாலியல் வன்கொ டுமைகளை குறிப்பிட்டுப் பேசினார். “குறிப்பாக, ஒன்றிய மோடி அரசாங்கம் பெண்களுக்கு எதி ராகவும், நாட்டு மக்களுக்கு எதிராகவும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் செயல்பட்டு வருகிறது. இன்றைய நாளில் நமது தேசத்தின் பெயருக்கே ஆபத்து வந்துள்ளது. ஜான்சி ராணி யும், வேலு நாச்சியாரும், கேப்டன் லட்சுமி செகா லும் போராடிப் பெற்ற இந்திய தேசம், மகாத்மா காந்தியை படுகொலை செய்தவர்கள், கையில் சிக்கியுள்ளது. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை ஆர் எஸ் எஸ் இந்துத்துவா சட்டமாக மாற்றி வருகிறது. குறிப்பாக கல்வி வளாகங்களில் மாணவர் கள் ஜனநாயகமாக சிந்திக்கும் உரிமையைப் பறிக்கிறது. இது தேசம் முழுவதும் இருக்கக்கூடிய பெண்களை, மாணவிகளை மிகப்பெரிய அள வில் பாதித்துள்ளது. பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர், தலித்துகள் மீதான தாக்கு தல் அதிகரித்துள்ளது. இதற்கு ஆளுகின்ற ஒன்றிய அரசின் ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ மனநிலையே காரணம். இவர்களுக்கு எதிராக நாம் ஜனநாயகம் காக்க அணி திரள வேண்டும். வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களை தோற்கடிக்க வேண்டும்” என தீப்சிதாதர் அறைகூவல் விடுத்தார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் இந்திரா பேசும் போது “ஒன்றிய பாஜக அரசாங்கம் பெண்களுக் காக எந்த ஒரு திட்டமும் கொண்டு வராத நிலை யில் 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து விட்டதாக ஒரு ஏமாற்று நாடகத்தை அரங்கேற்று கிறார்கள். உண்மையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசம் முழுவதும் இருந்த பெண்களுக்கான உரிமை இன்று அடியோடு மறுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநி லப் பொருளாளர் பாரதி, இளம் பெண்கள் பணிச் சூழலில் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் குறித் தும் கல்வி நிலையங்களில் மாணவிகள் படக் கூடிய அவலங்கள் குறித்தும் விரிவாகப் பேசி னார். அகில இந்திய துணைச் செயலாளர் ஆதர்ஷ், “இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக் குழு பல்வேறு முன்மாதிரியான போராட்டங் களை, இயக்கங்களை தொடர்ந்து எடுத்து வரு கிறது. இது பல்வேறு மாநிலங்களுக்கு துறை ரீதியான செயல்பாடுகளை முன்னெடுக்க ஊக்கு விப்பதாக உள்ளது” எனப் பாராட்டினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி பேசுகையில், “பெண்களுக்கான உரிமையை சோசலிச நாடுகளே முழுமையாக வழங்கியுள்ளன. சோவியத் யூனியன் தான் முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை முதல் சம ஊதியம் பெறுவதற்கான உரிமை வரை வழங்கியது. சோசலிச லட்சியத்தை, உழைக்கும் மக்களுக்கான விடுதலையை சாத்தியப்படுத்து வதே பெண் விடுதலைக்கான ஒரே தீர்வாக இந்திய மாணவர் சங்கம் கருதுகிறது. அத்தகைய போராட்டத்தில் அனைத்து விதமான ஜனநாயக அமைப்புகளோடும் ஒன்றிணைந்து வெற்றியை நாம் சாத்தியப்படுத்த வேண்டும்” எனக் கூறி னார்.
நிர்வாகிகள் தேர்வு:
இம்மாநாட்டில் இந்திய மாணவர் சங்க மாண விகள் உபகுழு அமைப்பாளராக மி.காவியா, துணை அமைப்பாளர்களாக ர.ஷாலினி, சௌமியா, சுந்தரவதனா, ஜெனிபர் உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் வாச்சாத்தி கிராமத்திலிருந்து பிரதிநிதிகளாக வந்த மாணவிகள் வெற்றி முழக்கத்திடையே கெளரவிக்கப்பட்டனர். மேலும் sfitn.org என்ற புதிய வலைதள பக்கமும் வெளியிடப்பட்டது.
இடைநிற்றலைத் தடுத்திடுக!
பெண் கல்வியை பாதுகாத்திடக்கோரியும், தமிழக கல்வி வளாகங்கள் தோறும் நடை பெறுகின்ற மாணவிகளின் தொடர்ச்சியான இடைநிற்றலைத் தடுத்து நிறுத்திடக் கோரியும்; மாணவிகளின் தற்கொலைகளை தடுத்தி்டக் கோரியும்; மாணவிகளின் கல்வியை அனைத்து விதத்திலும் பாதிக்கும் நீட், கியூட் தேர்வுகள் மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும்; மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவி திட்டத்தின் பயனாளிகளுக்கு நிலுவைத் தொகையையும் சேர்த்து முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், இத் திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண் டும் என்றும் மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.